சர்க்கரை வள்ளிக்கிழங்கு

கிழங்கின் செர்கோஸ்போரா இலைப் புள்ளி நோய்

Cercospora beticola

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் சிவப்பு கலந்த பழுப்பு ஓரங்களுடன் வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிற வட்டமான புள்ளிகள் தோன்றும்.
  • புள்ளிகள் ஒன்றிணைந்து, இலைகள் பழுப்பு நிறமாகி, சுருண்டு வாடிப்போகலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

அறிகுறிகள்

இந்த நோய் முதலில் முதிர்ந்த, கீழ் இலைகளில் தொடங்கி, பின்னர் இளம் இலைகளுக்கு பரவும். இலைகள் மற்றும் இலைக்காம்புகளில் வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில், வட்டமான அல்லது ஓவல் வடிவ புள்ளிகள் (விட்டம் 2-3 மிமீ) தோன்றும். இந்த சிதைந்த திசுக்கள் செம்பழுப்பு ஓரங்கள் மூலம் சூழப்பட்டிருக்கும். புள்ளிகள் அடிக்கடி ஒன்றிணைந்துகொள்ளும், மேலும் அவற்றின் மையப்பகுதி வறண்டு உதிர்ந்து விடலாம், இது இலைப் பரப்பில் துளைகள் உருவாவதற்கு வழிவகுக்கும் (குண்டடி பட்ட துளை விளைவு). படிப்படியாக இலைகள் நிறமாற்றம் அடைந்து, முதலில் மஞ்சள் நிறமாக (பச்சைய சோகை) மாறி, பின்னர் அவை காய்ந்து வாடும்போது பழுப்பு நிறமாக மாறும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட தாவரங்கள் கருகிய தோற்றத்தைக் கொண்டிருக்கும், இவை விதானத்தில் வேறுபட்டுத் தெரியும். தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் உள்ள புள்ளிகள் நீளமாகவும், பெரும்பாலும் சிறிது மூழ்கியும் இருக்கும். நீண்ட கால ஈரமான சூழ்நிலையில், அடர் சாம்பல் நிற வெல்வெட் போன்ற பூஞ்சை வளர்ச்சி ஏற்படும், இது முக்கியமாக இலையின் அடிப்பகுதியில், இன்னும் துல்லியமாக புள்ளிகளுக்கு அடியில் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியல் இலைத்திரள் தெளிப்புகளில் சூடோமோனாஸ் ஃப்ளோரெசென்ஸ், பேசில்லஸ் அமிலோலிக்ஃபேசியென்ஸ், பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் டிரைகோடெர்மா அஸ்பெரெல்லம் பூஞ்சை ஆகியவற்றின் அடிப்படையிலான தயாரிப்புகள் அடங்கும். மாற்றாக, பூஞ்சைகளிலிருந்து விதைகளின் மேற்பரப்பை சுத்தம் செய்து அவற்றின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த சூடான நீர் சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். தாமிரம் அடிப்படையிலான பொருட்கள் (தாமிர ஆக்ஸிகுளோரைடு) இயற்கை விவசாயத்தில் கட்டுப்பாட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்த ட்ரையசோல் பூஞ்சைக் கொல்லிகள் (டிஃபெனோகோனசோல், புரோபிகோனசோல், சைப்ரோகோனசோல், டெட்ராகோனசோல், எபோக்ஸிகோனசோல், ஃப்ளூட்ரியாஃபோல் போன்றவை) அல்லது பென்சிமிடாசோல்களைப் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் செர்கோஸ்போரா பெடிகோலா என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது, இது மண்ணின் மேற்பரப்பில் அல்லது மேல் மண் அடுக்கில் உள்ள தாவர குப்பைகளில் உயிர்வாழும். கிழங்குகளுக்கு நோய்த்தொற்றுக்கான ஆதாரமாகத் தோன்றும் களைகள் (பன்றிக்காய், வாத்துப்பாதம், நெருஞ்சில்) போன்ற மாற்றுப் புரவலன்களிலும் இது குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். பூஞ்சையின் வளர்ச்சிக்கு உகந்த நிலைமைகள் அதிக ஈரப்பதம் (95-100 %), அடிக்கடி பெய்யும் பனி மற்றும் சூடான வானிலை. நைட்ரஜன் உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் நோய்த் தாக்கம் அதிகரிக்கும். நோய் பெரும்பாலும் வயல்களில் சமமாக பரவாது, பொதுவாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும், இது அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்தக்கூடும். இது உலகளவில் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் மிகவும் அழிவுகரமான இலைத்திரள் நோய்க்கிருமியாகும். சிறிய அளவிலான புள்ளிகள் மற்றும் புண்களின் நடுப்பகுதியில் கருப்பு நிற புள்ளிகள் ஆகியவை செர்கோஸ்போரா நோய்த்தொற்றுகள் மற்ற இலை நோய்களிலிருந்து (ஆல்டர்னேரியா, ஃபோமா மற்றும் பாக்டீரியா இலைப் புள்ளிகள்) வித்தியாசப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட, நோயற்ற விதைகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • கிடைத்தால், எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களை நடவும்.
  • மண்ணின் அமிலத்தன்மை அதிகமாக இருந்தால், அதன் pH ஐ அதிகரிக்க சுண்ணாம்பு பயன்படுத்தவும்.
  • மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நீண்ட கால இலை ஈரத்தை ஏற்படுத்தும், அதற்குப் பதிலாக சொட்டுநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தவும்.
  • மதிய நேரத்தில் நீர்ப்பாசனம் செய்யுங்கள், இது இலைகள் முழுமையாக உலர அனுமதிக்கும்.
  • பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் போரான் உரங்களைக் கொண்டு சீரான உரமிடுதலை உறுதி செய்யவும்.
  • வயல்களில் இருந்து களைகளை அகற்றவும்.
  • தாவர குப்பைகளை அகற்றி ஆழமாக புதைத்து அல்லது எரித்து அழித்து விடவும்.
  • மண்ணின் நல்ல வடிகால் வசதியை உறுதி செய்வதற்காக ஒற்றை சால் கலப்பை மூலம் ஆழமாக உழவும்.
  • அறுவடைக்குப் பின் மண்ணை உழுவது மண்ணின் மேலோட்டத்தில் இருக்கும் கட்டிகளை நீக்கி மண்ணின் காற்றோட்டத்தை மேம்படுத்தும்.
  • 2-3 வருட பயிர் சுழற்சியை திட்டமிடுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க