Blumeria graminis
பூஞ்சைக்காளான்
5 mins to read
நோய்க்கான அறிகுறிகள் கீழ்ப்புற இலைகளில் இருந்து மேல்புறத்திற்கு பரவும் மற்றும் அவை தாவரங்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் ஏற்படும். இவை இலைகள், தண்டுகள் மற்றும் தானியக்கதிர்களில் வெள்ளை, பஞ்சுபோன்ற பிட்சுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த தூள் பகுதிகள் உண்மையில் தாவர திசுக்களில் மஞ்சள் வெளிறிய புள்ளிகளுடன் துவங்குகிறது, இதனை வயல்வெளிகளில் ஆராயும் போது எளிதில் கண்காணிக்க முடியும். சில பயிர்களில், இந்த திட்டுக்களுக்கு பதிலாக பெரிய, உப்பிய கொப்புளங்கள் காணப்படும். பூஞ்சை அதன் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கையில், இந்த துகள் மண்டலங்கள் சாம்பல் நிறமாக மாறும். பருவத்தின் இறுதியில், வெளிப்படையான கருப்பு புள்ளிகள் வெள்ளை திட்டுகளுக்கு மத்தியில் தோன்றும். பூதக்கண்ணாடி மூலம் இதனை நெருக்கமாக காண முடியும். கீழ்புற, முதிர்ந்த இலைகள், அவற்றை சுற்றியுள்ள அதிகமான ஈரப்பதத்தினால் மோசமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். அடர்ந்த செடிகள், அதிகப்படியான நைட்ரஜன் பயன்பாடு மற்றும் ஒற்றையின வளர்ப்பு ஆகியன சாம்பல் நோய் வளர்ச்சிக்கான உகந்த நிலைகளாக விளங்குகின்றன.
சிறிய அளவில் பயிர் செய்பவர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் பால் கரைசல்களை சாம்பல் நோய்க்கு எதிரான சிகிச்சையாக வெற்றிகரமாக பயன்படுத்துகின்றனர். பாலை தண்ணீரில் (பொதுவாக 1:10 ) என்ற விகிதத்தில் கரைத்து, நோய் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் காணப்படும் பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கலாம் அல்லது பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளலாம். நோயை கட்டுப்படுத்துவதற்கு அல்லது அகற்றுவதற்கு மீண்டும் மீண்டும் வாராந்த பயன்பாடுகள் தேவைப்படுகின்றது.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். டிபெனோகொனாஜொல், அதனைத் தொடர்ந்து ஃப்ளுடிரியாபோல், டிரிடிகொனாஜொல் ஆகியவற்றை கொண்டு விதை சிகிச்சை அளித்தல் இந்த பூஞ்சை நோய் மற்றும் பிற பூஞ்சை நோய்களுக்கும் எதிராக கோதுமையை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டன. ஃபென்பிராப்பிடின், ஃபெரானிமோல், டெபுகொனாஜொல், சிப்ரோகொனாஜொல், மற்றும் பிராப்பிகொனாஜொல் போன்ற பூஞ்சைக்கொல்லிகளை கொண்டு குணப்படுத்தும் இரசாயனக் கட்டுப்பாடும் சாத்தியமாகும். தாவரங்களை பாதுகாப்பதற்கான மற்றொரு வழி, சிலிக்கான்- அல்லது கால்சியம் சிலிகேட்-அடிப்படையிலான கரைசல்கள் இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை தாவரங்களில் வலுப்படுத்தும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் புளூமேரியா கிராமின்ஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகின்றன, இது உயிர்வாழும் புரவலன்களின் மீது வளர்ந்து, இனப்பெருக்கம் மட்டும் செய்யக்கூடிய நோய் உண்டாக்கும் கிருமியாகும். புரவலன்கள் கிடைக்கவில்லை என்றால், வயலில் உள்ள தாவரக் கழிவுகளின் மீது செயலற்ற கட்டமைப்புகளாக பருவங்களுக்கு இடையில் இது அதிகரிக்கிறது. தானியங்களைத் தவிர, இது டஜன் கணக்கான பிற தாவரங்களில் குடியேறிக்கொள்ளும், இவற்றை இது இரண்டு பருவங்களையும் கடக்க பயன்படுத்திக்கொள்ளக்கூடும். நிலைமைகள் சாதகமானதாக இருக்கும்போது, அது வளர்ச்சியை மீண்டும் சிதல்களை உற்பத்தி செய்யத் தொடங்கி, பின்னர் இவை காற்று மூலம் ஆரோக்கியமான தாவரங்களுக்கு பரவுகிறது. இது இலைகளை அடைந்தவுடன், சிதல்கள் முளைத்து, உண்ணும் கட்டமைப்புகளை உற்பத்தி செய்து, பூஞ்சையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் புரவலன் உயிரணுக்களில் இருந்து சத்துக்களை உறிஞ்சிகிறது. ஒப்பீட்டளவில் குளிர் மற்றும் ஈரப்பதமான நிலைகள் (95% ஈரப்பதம்) மற்றும் மேகமூட்டமான வானிலை இதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. இருப்பினும், சிதல்கள் முளைப்பதற்கு இலைகளின் ஈரப்பதம் தேவையில்லை, உண்மையில் ஈரப்பதம் பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. 16 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை மிகவும் உகந்ததாகவும், 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கிறது. இதன் எங்கும் பரவும் தன்மை மற்றும் காற்று மூலம் பரவும் தன்மையின் காரணமாக இந்த நோய்க்கிருமிக்கான தடுப்பு நெறிமுறைகள் ஏதும் அறியப்படவில்லை.