Passalora manihotis
பூஞ்சைக்காளான்
அறிகுறிகளானது பயிர் செய்யும் வகை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்தது. பொதுவாக, சேதமானது முதிர்ந்த இலைகளில் அதிகமாகவும், படிப்படியாகக் குறைந்து அது இளம் இலைகளில் குறைவாகவும் காணப்படும். இலைகளின் மேல் பக்கத்தில் நீரில் தோய்த்த, வெள்ளை நிற, கோண அல்லது வட்ட வடிவிலான புள்ளிகள் உருவாகின்றன, இவை பெரும்பாலும் ஒழுங்கற்ற செந்நிற கோடு மற்றும் பெரிய மஞ்சள் நிற ஒளிவட்டத்தால் சூழப்படுகின்றன. இலை மேற்பரப்பின் கீழ் பக்கத்தில், இந்தப் புள்ளிகள் விரவிய வண்ண ஓரத்துடன் தோன்றும். பூஞ்சை உருவாகி, அறிகுறிகள் அதிகரிக்கையில், புள்ளிகள் சாம்பல் நிறத்தில், வெல்வெட் போன்ற அம்சத்தைப் பெறுகின்றன, இது ஈரப்பதமான வானிலையில் குறிப்பாகத் தெரியும் வகையில் இருக்கும். இந்த நோய் பொதுவாக ஈரப்பதமான ஆனால் குளிர்ச்சியான பகுதிகளில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் காணப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, பூஞ்சை பரவுவதைக் கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிகைகள் எதுவும் இல்லை. நோயைத் தவிர்க்க, நோய் இல்லாத நடவுப் பொருளைப் பயன்படுத்துவதும், பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதும் அவசியம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். மரவள்ளிக்கிழங்கில் உள்ள வெள்ளை நிற இலைப்புள்ளி நோயை மாதாந்திர இடைவெளியில் தியோபனேட் (0.20%), குளோர்தலோனில் கொண்ட பூஞ்சைக்கொல்லி தெளிப்பு மூலம் திறம்படக் கட்டுப்படுத்தலாம். காப்பர் பூஞ்சைக் கொல்லிகள், மெட்டலாக்ஸைல் மற்றும் மான்கோசெப் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. களத்தில் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த களைக்கொல்லியையும் பயன்படுத்தலாம்.
பயோராமுலேரியா மனிஹோடிஸ் என்ற பூஞ்சையால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இது உலர்வான பருவத்தில் தாவரத்தில் உள்ள முதிர்ந்த, பாதிக்கப்பட்ட இலைகளில் அல்லது தரையில் கிடக்கின்றவற்றில் உயிர் வாழ்கிறது. சாதகமான சூழ்நிலையில், இது இலைகளின் கீழ் மேற்பரப்பில் நிறமற்ற திட்டுகளுக்கு கீழே வித்துக்களை உருவாக்குகிறது. அங்கிருந்து, இந்த வித்துக்கள் காற்று அல்லது மழைச் சாரல் மூலம் புதிய செடிகளுக்கு பரவுகின்றன. ஆரோக்கியமான திசுக்களுக்குள் ஊடுருவுவது என்பது இலைகளில் உள்ள இயற்கை துவாரங்கள் வழியாக ஏற்படுகிறது, மேலும் இந்தப் பூஞ்சை மெதுவாக தாவரத்தை காலனித்துவப்படுத்துவதால், அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. நோயுற்ற நடவுப் பொருட்களை மற்ற வயல்களுக்கு அல்லது விளைநிலங்களுக்கு கொண்டு செல்லும்போது நீண்ட தூர பரவல் ஏற்படலாம். சில களைகள் மாற்று புரவலன்களாகவும் செயல்படுகின்றன. தொற்று கடுமையாக இல்லாவிட்டால், மரவள்ளிக்கிழங்கு தாவரங்களுக்கு இது பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை, மேலும் மகசூலையும் கணிசமாக பாதிக்காது. இருப்பினும், குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான, மழைக்காலம் பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சியை ஆதரிக்கிறது, மேலும் நோயின் தீவிரத்தை அதிகரிக்கிறது.

Put your product in front of farmers the moment they diagnose மரவள்ளிக்கிழங்கின் வெள்ளை நிற இலைப்புள்ளி நோய் — right when they need a solution.
Explore
Explore the live agronomic data that powers Plantix disease pages.
Discover