ஆப்பிள்

ஆப்பிளின் விதைப்புள்ளி நோய்

Neofabraea malicorticis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • மரத்தின் பட்டையில் சிறிய, வட்ட வடிவ, சிவப்பு முதல் ஊதா நிற புள்ளிகள் காணப்படும்.
  • மேல்நோக்கி சுருண்டிருக்கும் ஓரங்களில் சொறி போன்ற சிதைவுகளின் வளர்ச்சி ஏற்படும்.
  • அவற்றின் மையப்பகுதியில் கிரீம் வெள்ளையில் பூஞ்சை வளர்ச்சி இருப்பதைக் காணலாம்.
  • பழங்கள் மற்றும் இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள் மற்றும் திட்டுகள் காட்சியளிக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
ஆப்பிள்
பேரிக்காய்

ஆப்பிள்

அறிகுறிகள்

பழ மரங்களில் விதைப்புள்ளி நோய்த்தொற்றின் மிகவும் பொதுவான அறிகுறி என்பது சிறுகிளைகள் மற்றும் கிளைகளில் காணப்படும் சொறி போன்ற சிதைவுகளே ஆகும். ஆரம்ப கட்டங்களில், இவை சிறிய வட்ட வடிவ புள்ளிகளின் வளர்ச்சி மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன, இது சிவப்பு நிறத்தில் இருந்து ஊதா நிறம் வரையில் இருக்கும், குறிப்பாக ஈரமாக இருக்கும் போது தெளிவாகத் தெரியும். இவை பெரிதாகையில், சற்று நீளமாகவும், குழிவாகவும், ஆரஞ்சு முதல் பழுப்பு நிறம் வரையிலும் மாறும். பட்டை உருக்குலைந்து போகும் கட்டத்தில், ஓரங்களில் விரிசல்கள் உருவாகி மேல்நோக்கி சுருண்டுகொள்ள ஆரம்பிக்கும். இவற்றின் மையப்பகுதியில் க்ரீம் வெள்ளையில் பூஞ்சை வளர்ச்சியைக் காணலாம். சொறி போன்ற சிதைவு இளம் கிளைகளை குடைந்து, அவற்றைக் கொன்றுவிடும். இளம் இலைகள் அல்லது பழங்கள் கூட பாதிக்கப்படலாம், மேலும் பழுப்பு நிற புள்ளிகள் மற்றும் திட்டுகள் உருவாகலாம், இது பழங்களை சேமித்து வைக்கும்போது "கண் போன்ற மையப்புள்ளி அழுகலாக" உருவாகிறது. குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகைகளில், இது மரத்தின் இலை உதிர்வு, வீரியம் குறைவுக்கு வழிவகுக்கும். இது பழத்தின் தரம் குறைந்துபோவதற்கு வழிவகுக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அறுவடைக்குப் பின் போர்டியாக்ஸ் கலவை அல்லது காப்பர் சல்பேட் பயன்படுத்தினால் அடுத்துவரும் பருவத்தில் ஆந்த்ராக்னோஸ் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம். பழங்களில் கண் போன்ற மையப்புள்ளி அழுகல் உருவாவதைக் கட்டுப்படுத்த அறுவடைக்கு முன் இந்தக் கலவைகளைப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். ஏற்கனவே ஏற்பட்ட சொறி போன்ற காயங்களை முற்றிலும் ஒழிப்பதில் பூஞ்சைக் கொல்லிகள் எதுவும் சிறப்பாக செயல்படுவதாக நிரூபிக்கப்படுவதில்லை. இருப்பினும், அறுவடைக்கு முன்பான தடுப்பு பூஞ்சைக் கொல்லி பயன்பாடுகள் பழங்களை சேமித்து வைக்கும்போது அவற்றில் கண் போன்ற மையப்புள்ளிஅழுகல் ஏற்படுவதைக் குறைக்கக்கூடும். அறுவடைக்குப் பிறகு அதே மாதிரி பயன்படுத்தினால், அடுத்து வரும் பருவத்தில் சொறி போன்ற சிதைவு நோய்கள் ஏற்படுவதைக் குறைக்கலாம். இவற்றுக்கு கேப்டன், மான்கோசெப் அல்லது ஜிரம் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் முக்கியமாக நியோஃபாப்ரா மாலிகார்டிசிஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன, ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற பூஞ்சைகளாலும் அறிகுறிகள் ஏற்படலாம். இவை பாதிக்கப்பட்ட தாவர குப்பைகள் அல்லது மண்ணில் உயிர் வாழும். அடிக்கடி மழைப்பொழிவுடன் கூடிய ஈரமான மற்றும் வெப்பமான சூழ்நிலையில், இது வளரும். வசந்த காலத்தில், இது மீண்டும் வளர்ச்சியைத் தொடங்கி, வித்துகளை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த வித்துகள் பாசன நீர் அல்லது மழை சாரல்கள் மூலம் மற்ற மரங்கள் அல்லது செடிகளுக்கு எளிதில் பரவுகின்றன. மரங்களில் ஏற்படும் சிறிய காயங்கள் மூலம் இவை மரங்களுக்குள் நுழையலாம், ஆனால் காயமடையாத பட்டைகளை துளைத்துக் கொண்டு செல்லும். சொறி போன்ற சிதைவானது 1 வருடத்திற்கு மட்டுமே தீவிரமாக பரவும் ஆனால் பூஞ்சை தொடர்ந்து 2 முதல் 3 ஆண்டுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வித்துக்களை உற்பத்தி செய்யும். மாற்றுப் புரவலன்களில் பெரும்பாலான பேரிக்காய் போன்ற போம் பழங்கள் மற்றும் கொட்டையுடைய பழங்கள், ஹாவ்தோர்ன் மற்றும் மவுன்டெயின் ஆஷ் ஆகியவை அடங்கும். அனைத்து ஆப்பிள் வகைகளும், பல்வேறு விதமாக நோய் மூலம் எளிதில் பாதிக்கப்படுகின்றன. பேரிக்காய் மரங்களும் பாதிக்கப்படலாம்.


தடுப்பு முறைகள்

  • நோய்க்கிருமி இல்லாத சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து ஆரோக்கியமான மரங்களை நடவு செய்யவும்.
  • நோய் தாக்கம் குறைவாக உள்ள மர வகைகளை தேர்வு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என புதிய மரங்களை முழுமையாக கண்காணிக்கவும்.
  • குளிர்காலத்தில் மரங்களை கத்தரித்து சீர்திருத்தம் செய்யும்போது சொறி போன்ற சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கிளைகளை கத்தரித்து விடவும்.
  • கிளைகள் மற்றும் தண்டுகள் நோயுற்றதாக கண்டுபிடிக்கப்பட்டவுடனே அவற்றை வெட்டி விடவும்.
  • பழத்தோட்டத்தில் இருந்து தாவர எச்சங்களை அகற்றவும்.
  • பழத்தோட்டத்தைச் சுற்றி மாற்று புரவலன்களை நடவு செய்ய வேண்டாம்.
  • நல்ல உரமிடுதல் திட்டம் மற்றும் வலுவூட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மரத்தின் வீரியத்தை ஊக்குவிக்கவும்.
  • மண்ணில் உகந்த வடிகால் வசதியை உறுதி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க