சோயாமொச்சை

சோயாபீன் ஊதா விதைக் கறை

Cercospora kikuchii

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • மேல்புற இலைகளில் பல்வண்ண ஊதா முதல் பழுப்பு நிறமாற்றம் காணப்படும்.
  • தண்டுகள் மற்றும் காய்களிலும் சிவந்த பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • விதைகளில் அளவில் மாறுபடும் (புள்ளிகள் முதல் பெரிய திட்டுக்கள் வரை) இளஞ்சிவப்பு முதல் ஊதா நிறமாற்றம் காணப்படும்.
  • முளைக்கும் விகிதங்கள் மற்றும் நாற்றுகளின் வெளிப்பாடு பாதிக்கப்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

தாவர வளர்ச்சியின் பிந்தைய நிலைகள், பூக்கும் மற்றும் காய்க்கும் நிலைகளில் மட்டுமே அறிகுறிகள் காணும்வகையில் தோன்றும். இந்த நோயானது மேல்புற இலைகளில் காணப்படும் பல்வண்ண ஊதா முதல் பழுப்பு நிறமாற்றம் மற்றும் அவற்றின் வேனிற்கட்டி மூலம் வகைப்படுத்தப்படுகிறது. தண்டுகள் மற்றும் காய்களிலும் சிவந்த பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். பாதிக்கப்பட்ட விதைகள் ஆரோக்கியமானதாகவும் காணப்படும் அல்லது விதை தோலில் புள்ளிகள் முதல் பெரிய திட்டுக்கள் வரை அளவில் மாறுபடும் இளஞ்சிவப்பு முதல் ஊதா நிறமாற்றம் காணப்படும். இது விளைச்சல் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் முளைப்பு விகிதங்கள் மற்றும் நாற்றுகளின் வெளிப்பாடு பாதிக்கப்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், செர்க்கோஸ்போரா கிக்குச்சிக்கு எதிரான வேறு எந்த மாற்று சிகிச்சையும் எங்களுக்குத் தெரியாது. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருதில் கொள்ளுங்கள். நிறமாற்றம் ஏற்பட்ட விதைகள் அதிகப்படியான விகிதங்களில் இருந்தால், அவற்றை பூஞ்சைக் கொல்லிகளை கொண்டு சிகிச்சை அளிக்கவும். இது நோயைப் பரப்புவதில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது. இலை கருகல் மற்றும் காயின் மீது ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்க காய் வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் இலைத்திரள் தெளிப்பான் பூஞ்சைக்கொல்லிகள் , உதாரணமாக மான்கோசெப் (ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம்) பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

செர்க்கோஸ்போரா இலைப் புள்ளி நோயானது செர்க்கோஸ்போரா குக்குச்சி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது மண்ணில் உள்ள தாவரக் கழிவுகள் மற்றும் விதைகளில் செயலற்ற நிலையில் கழிக்கிறது. உயர் ஈரப்பதங்கள், சூடான வெப்பநிலை (சுமார் 22 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை),காற்று மற்றும் மழைத் துளிகள் பூஞ்சை இலைகளில் பரவுவதை மற்றும் நோயின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஆரம்ப நோய்த் தொற்றானது பெரும்பாலும் வெளியே தெரியாது மற்றும் பூக்கும் அல்லது காய்கள் உருவாகும் நிலைகள் வரை வெளியே தெரியாது. பூஞ்சை படிப்படியாக காய்களில் நுழைந்து, விதைகளில் வளர்ந்து, அவற்றுக்கு பல்வண்ண ஊதா அல்லது பழுப்பு நிறத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட நோய்க்கிருமி இல்லாத விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெறுகிறது.
  • நோய் ஏற்படுவதைக் குறைக்க புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • பயிர் கழிவுகளில் வாழும் பூஞ்சைகளின் எண்ணிக்கையைக் குறைக்க மண்ணை உழுது, சூரிய வெளிச்சம் மற்றும் காற்றில் வெளிப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின் தாவரக் கழிவுகளை நீக்கி மற்றும் அவற்றை அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க