சோயாமொச்சை

ரிசோக்டோனியா இலைக்கருகல் நோய்

Rhizoctonia solani

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • வட்டம் முதல் ஒழுங்கற்ற வடிவங்கள் வரையில், சாம்பல் முதல் பச்சை வரையிலான நீர் தேங்கிய சிதைவுகள் இலைகளில் காணப்படும்.
  • சிவப்பு-பழுப்பு ஓரங்கள் கொண்ட பழுப்பு நிறச் சிதைவுகளாக இந்தப்புள்ளிகள் வளரும்.
  • சிதைவுகள் இலைக்காம்புகள், தண்டுகள் மற்றும் காய்கள் வரை பரவக்கூடும்.
  • பருத்திப் பூஞ்சை வளர்ச்சியுடன் இலைகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
  • பயிர்களில் பூஞ்சைகளின் குடியேற்றத்தினால் இலை உதிர்தல் ஏற்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
சோயாமொச்சை
புகையிலை

சோயாமொச்சை

அறிகுறிகள்

முதலில், வட்டம் அல்லது ஒழுங்கற்ற சிவப்பு-பழுப்பு ஓரங்களாக நீர் தேங்கிய சிதைவுகள் முதிர்ந்த இலைகளில் காணப்படும், சில நேரங்களில் தனியாக இருக்கும் சிற்றிலைகளில் காணப்படும். நோயின் பிந்தைய நிலைகளின் போது, சிதைவுகள் பழுப்பு நிறமாகும் அல்லது வெளிறிய நிறத்திற்கு மாறும் மற்றும் காம்புகள், தண்டுகள் மற்றும் இளம் காய்களில் இவை காணப்படும். தண்டுகள் மற்றும் இலைக்காம்புகளில் பழுப்பு நிறத்தில் வெளித்துருத்தல் ஏற்படும். தண்டுகள் மற்றும் காம்புகளில் வளரும். இலைகளின் ஒட்டுத்திரளுடன் பஞ்சுப் பூஞ்சை வளர்ச்சி பொதுவானது. மிகவும் மோசமான பாதிப்புகளில் இலை மற்றும் காய்களில் கருகல் பாதிப்பினை ஏற்படுத்தும் மற்றும் இலை உதிர்தல் ஏற்படும். பொதுவாக, பயிர்களின் பிற்கால காய்கறி வளர்ச்சியில் இந்த நோய்த் தாக்கம் ஏற்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியல் பொருட்கள், தாவரங்களில் இருந்து பெறப்பட்டவை மற்றும் அடிப்படையான முக்கியமான எண்ணெய் போன்றவை நோயினைக் கட்டுப்படுத்த உதவும். டிரைகோடெர்மா ஹார்சியனம் பூஞ்சைகள் நோய்க்குக் காரணமான ரிசோக்டோனியா சொலானி பூஞ்சைகளுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. வெங்காயம், பூண்டு மற்றும் மஞ்சள் போன்றவற்றில் இருந்து பெறக்கூடிய பொருட்கள் பூஞ்சையின் வளர்ச்சியினை இதே வகையில் குறைக்கவல்லது. மென்ந்தா, சிட்ரோனெல்லா, பெப்பர்மின்ட், பால்மரோஸா மற்றும் ஜெரனியம் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட முக்கியமான எண்ணெய் நோய்த் தாக்கத்தினைக் குறைக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக் கொல்லிகள் தேவைப்பட்டால் ஃப்லக்ஸபைரோக்ஸாட் உடன் பைராக்ளோஸ்ட்ரோபின் கலந்துள்ள பொருட்களைத் தெளித்தல் முறையில் அளிக்கவும். பருவத்திற்கு இருமுறைக்குமேல் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டாம். அறுவடை செய்ய 21 நாட்களுக்குக் குறைவாக இருக்கும்போது எவ்விதச் சிகிச்சை முறையினையும் செய்ய வேண்டாம்.

இது எதனால் ஏற்படுகிறது

ரிசோக்டோனியா சொலானி எனும் இந்த பூஞ்சைகள் மண் அல்லது பயிரின் எஞ்சிய பாகங்களில் உயிர்வாழ்கின்றன. இவை களைகள் போன்ற பிற மாற்றுப் புரவலன்களில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். நீண்ட காலமாக சூடான வெப்பநிலையாக இருப்பது (25-32 டிகிரி செல்சியஸ்) மற்றும் அதிக ஒப்பு ஈரப்பதமாக இருப்பது போன்றவற்றால் காற்று மற்றும் மழையின் காரணமாக பூஞ்சைகள் அதிகளவில் பரவுகின்றன. இலைகளுக்கிடையே நெய்தல் போன்ற செயல்பாட்டினால் அவை வலை போன்ற உள்ளூர் பாய் போன்ற அமைப்புகளைக் கொடுக்கின்றன, இவை தாவரத்திற்கு ஒரு சிறப்பியல்பு அம்சத்தைக் கொடுக்கும்.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத் தன்மை கொண்ட பயிர்வகைகளைப் பயிரிடவும்.
  • நோய்க்காரணிகளின் பரவலைத் தடுக்கும் வகையில் விதைப்படுகைகள் மற்றும் நிலத்தினைத் தயார் செய்யவும்.
  • பயிர்களுக்கு சிறந்தமுறையில் காற்றோட்டம் கிடைக்குமாறு, போதுமான அளவிற்கு இடைவெளி கொடுத்துப் பயிரிடவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு (சோளம் மற்றும் மக்காச் சோளம்) பயிர் சுழற்சியினை 2 ஆண்டுகளுக்கு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • அதிகப்படியான களைகளை நீக்கவும் (இவை நோய்க்காரணிகளுக்கு தங்குமிடமாக அமைந்துவிடும்).
  • மண்ணில் இருக்கும் எஞ்சிய நோய்க்காரணிகளை அழிக்க நன்கு ஆழமாக உழுதல் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க