மற்றவை

பசைக்கசிவு

Botryosphaeria dothidea

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • மரங்களின் இளம் பட்டைகள் மீது, அதன் நடு பட்டைத்துளையை சுற்றி உப்பிய கொப்புளங்கள் வளரும்.
  • கொப்புளங்கள் சிதைந்த காயங்களாக உருவாகி, அரக்கு-பழுப்பு நிற பசையை சுரக்கின்றன.
  • முதிர்ந்த பட்டைகளில் உள்ள காயங்கள் ஒன்றிணையும்போது சொறி நோய் ஏற்படுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

7 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
மாங்கனி
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

இந்த நோயானது மரங்களின் பட்டைகளிலிருந்து கசியும் அதிகப்படியான பசையினால் இப்பெயர் பெற்றது. 1-6 மிமீ விட்டம் கொண்ட கொப்புளங்கள் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும், இது சிறுகிளைகளின் பட்டைகள், கிளைகள் அல்லது அடிமரத்தில் காணப்படும். இந்த கொப்புளங்களில் வழக்கமாக அவற்றின் மையப்பகுதியில் பட்டைதுளைகளை கொண்டிருக்கும், இது நோய்க்கிருமியின் அசல் நுழைவு புள்ளியுடன் தொடர்புடையதாகும். நோய்த்தொற்று பருவத்தின் ஆரம்பத்திலேயே ஏற்படலாம், ஆனால் அறிகுறிகள் அடுத்து வரும் ஆண்டில் மட்டுமே காணப்படலாம். மரம் வளருகையில், பட்டைத்துளை மிகச்சிறியதாக இருக்கும் அல்லது இல்லாதிருக்கும், ஆனால் அதைச் சுற்றியுள்ள பகுதி சிதைந்து, நிறமாற்றம் அடையக்கூடும். இந்த காயங்கள் அரக்கு-பழுப்பு நிற பசையை ஏராளமாக சுரக்கின்றன, இது பலத்த மழைக்கு பிறகு குறிப்பாக வெளிப்படையாக தெரியும். பசை பின்னர் காய்ந்து அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும். 2 செ.மீ க்கும் அதிகமான காயங்கள் ஒன்றிணையத் தொடங்கும் போது சொறி நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. கடுமையான தொற்றுநோய்களில், திசு அழுகல் உட்புற திசுக்களுக்கு விரிவடைந்து முழு கிளையையும் குடைந்து, இறுதியில் அதைக் கொன்றுவிடுகிறது. மலர்கள், இலைகள் மற்றும் பழங்கள் பொதுவாக பாதிக்கப்படாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு உயிரியல் சிகிச்சை எதுவும் இல்லை. சீர்திருத்தம் செய்யும் கருவிகளை கிருமி நீக்கம் செய்ய இலேசான ப்ளீச் (10%) அல்லது தேய்க்கும் ஆல்கஹால் போதுமானதாக இருக்கும், இதனால் பழத்தோட்டத்தில் பூஞ்சை பரவுவதைத் தவிர்க்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வெளிப்புற சொறிநோய் அறிகுறிகளைக் குறைக்க பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அது நோய்க்கிருமிக்கான நீண்டகால கட்டுப்பாட்டை வழங்காது. சேர்மம் க்ரேசோக்சிம்-மெத்தில் மற்றும் டிரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகள், இலைத்திரள் பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட விகிதங்களில் பயன்படுத்தப்படும்போது, தொடர்ந்து சொறிநோய்களின் நிகழ்வுகளையும் அளவையும் குறைக்கின்றன. க்ரேசோக்சிம் மெத்திலுடனான சிகிச்சை காற்று வீச்சு தெளிப்பானுடன் பயன்படுத்தப்படும்போது பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் முக்கியமாக போட்ரியோஸ்பேரியா டோதிடியா என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன, இருப்பினும் ஒரே குடும்பத்தின் பிற பூஞ்சைகள் இந்த நோயை ஏற்படுத்தலாம். இந்த நோய்க்கிருமிகள் நோயுற்ற பட்டை மற்றும் இறந்த கிளைகளில் தொற்று காலங்களுக்கு இடையில் வாழ்கின்றன. இவை வசந்த காலத்தில் வித்துக்களை உற்பத்தி செய்யத்தொடங்கி, ஒரு வருட காலம் வரை தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன. இந்த வித்துக்கள் பின்னர் மழைத்துளி மற்றும் சாரல்கள் மூலம் பரவுகின்றன அல்லது நீர்ப்பாசன நீரால் பழத்தோட்டம் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. இவை வழக்கமாக புதிய மரங்களை ஏற்கனவே இருக்கும் காயங்கள் அல்லது பட்டைத்துளை எனப்படும் பட்டைகளில் இயற்கையான காயங்கள் மூலம் பாதிக்கின்றன. நீண்ட கால ஈரப்பதம் மற்றும் ஈரப்பதமான சூழல்கள் இந்த நோய்த்தொற்று செயல்முறைக்கு சாதகமானது. உடலியல் அல்லது வேதியியல் காயங்கள் மற்றும் பிற நோய்க்கிருமி அல்லாத காரணங்கள் (எடுத்துக்காட்டாக நீர் அழுத்தம்) போன்றவையும் பசைக்கசிவை ஏற்படுத்தும். மோசமாக நிர்வகிக்கப்படும் பழத்தோட்டங்கள் குறிப்பாக நோய் சேதத்திற்கு ஆளாகின்றன. இதுவரை, கிடைக்கக்கூடிய மர வகைகளில் எதுவும் பூஞ்சை பசை கசிவுக்கு பயனுள்ள அளவிலான எதிர்ப்பைக் கொண்டிருக்கவில்லை.


தடுப்பு முறைகள்

  • நோய்க்கு எதிராக, இயற்கையாகவே மரங்களின் எதிர்ப்பு திறனை அதிகரிக்க சமச்சீர் உரங்களை இட்டு அதனை நல்ல முறையில் பராமரிக்கவும்.
  • அடிமரத்தை ஈரப்படுத்தாத நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • பயன்பாட்டிற்கு பிறகு அல்லது கடைசியாக பாதிக்கப்பட்ட மரங்களை சீர்திருத்தம் செய்தபிறகு, சீர்திருத்தம் செய்ய பயன்படுத்திய கருவிகளை கிருமி நீக்கம் செய்யவும்.
  • மழை அல்லது நீர்ப்பாசன நிகழ்வுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு அப்புறமாகவோ அல்லது இலைத்திரள்கள் ஈரமாக இருக்கும்போதோ உடனடியாக சீர்த்திருத்தம் செய்வதை தவிர்க்கவும்.
  • இலைத்திரள்களுக்கு நல்ல காற்றோட்டம் அளிக்கும் வகையில் சீர்த்திருத்தம் செய்யும் முறைகளை பயன்படுத்தவும்.
  • பழத்தோட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள களைகளை அகற்றவும்.
  • குளிர்காலத்தில் மரங்களை சீர்த்திருத்தம் செய்யும்போது, உற்பத்தி இல்லாத மற்றும் நோயுற்ற மரத்தை அகற்றவும்.
  • பழத்தோட்டத்திற்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட கிளைகளை எரிப்பதன் மூலமோ அல்லது புதைப்பதன் மூலமோ அகற்றி, அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க