ஆலிவ்

ஆலிவ் இலைப்புள்ளி நோய்

Venturia oleagina

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் மேற்பரப்பில் கருமையான, பூசணப் புள்ளிகள் காணப்படும், இவை படிப்படியாக வளர்ச்சி அடையும்.
  • ஒவ்வொரு புள்ளியையும் சுற்றி மஞ்சள் நிற ஒளிவட்டம் தென்படும்.
  • இலை உதிர்வு ஏற்படும், மரக்கிளைகள் பட்டுப்போகும் மற்றும் மரம் பூ பூக்காமல் போகலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
ஆலிவ்

ஆலிவ்

அறிகுறிகள்

வசந்த காலத்தின் பிற்பகுதியில், விதானதம் குறைவாக இருப்பவற்றின் இலைகளின் மேற்பரப்பில் பூசண புள்ளிகள் (பொதுவாக மயில் புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன) தோன்றும். இந்தப் புள்ளிகள் தண்டு மற்றும் பழங்களிலும் தோன்றலாம், ஆனால் இலை மேற்பரப்பில் இது மிகவும் பொதுவானவை. இலைகளின் கீழ்ப் பக்கம் வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாது. பருவகாலம் தொடருகையில், கரும்புள்ளிகள் வளர்ந்து, இலையின் கணிசமான பகுதியை (0.25 மற்றும் 1.27 செ.மீ விட்டம்) மூடிவிடும். இந்தப் புள்ளிகளைச் சுற்றி மஞ்சள் நிற ஒளிவட்டம் படிப்படியாக வெளிப்பட்டு முழு இலைக்கும் பரவும். மரங்களில் இலை உதிர்வு ஏற்படலாம் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் கிளைகள் பட்டுப்போகலாம். பூ பூக்காமல் போகலாம், இதன் விளைவாக பயிர் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இலையுதிர்காலத்தில் பழங்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகும், குளிர்காலத்தின் பிற்பகுதியில் அடிக்கடி மழை பெய்தாலும், போர்டியாக்ஸ் கலவை போன்ற கரிம தாமிர கலவைகளை இலைத்திரள் தெளிப்பாக மரங்களில் தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இலையுதிர் காலத்தில் பழங்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகும், குளிர்காலத்தின் பிற்பகுதியில் சூழல் மிகவும் ஈரமாக இருந்தாலும், செப்பு சேர்மங்களை (எ.கா. காப்பர் ஹைட்ராக்சைடு, காப்பர் ஆக்ஸிகுளோரைடு, ட்ரைபேசிக் காப்பர் சல்பேட் மற்றும் காப்பர் ஆக்சைடு) இலைத்திரள் தெளிப்பாக மரங்களில் தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் ஃபுசிக்லேடியம் ஓலிஜினியம் என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன, இவைதாழ்வான பகுதிகள் அல்லது குறைந்தளவே சூரிய ஒளியைப் பெறும் அல்லது மூடிய மர விதானங்களைக் கொண்ட சூழலில் ஜீவிக்கும். இது இலைகள் முளைப்பதற்கு இலேசானது முதல் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் தேவை, எனவே இது பொதுவாக இலையுதிர், குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் மழை பொழியும் சூழலில் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. மூடுபனி, பனி மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை நோய் பரவுவதற்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளாகும். மாறாக, கோடையில் வெப்பமான மற்றும் வறண்ட சூழல்கள் பூஞ்சையை செயலிழக்கச் செய்கிறது, அது இறுதியில் செயலற்ற நிலைக்குச் செல்லும். இது புள்ளிகளின் நிறமாற்றம் மூலம் அடையாளம் காணப்படும், இது வெள்ளை மற்றும் மேலோடு போல மாறும். முதிர்ந்த இலைகளை விட இளம் இலைகள் தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றன. விருப்பமான வெப்பநிலை வரம்பு 14-24° செல்சியஸ் ஆகும், இருப்பினும் இது 2-27° செல்சியஸ் வரை நீடிக்கலாம். மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகள் மரங்களின் பாதிப்பை அதிகரிக்கலாம். உதாரணமாக, அதிகப்படியான நைட்ரஜன் மற்றும் கால்சியம் குறைபாடு மரங்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாக கருதப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • நோயின் அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா என சாகுபடி தளத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நைட்ரஜன் உரத்தை அதிகமாகப் பயன்படுத்துதல் மற்றும் கால்சியம் குறைபாடு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • உங்கள் பகுதியில் கிடைத்தால், எதிர்ப்புத் திறன் கொண்ட அல்லது மீள் தன்மை கொண்ட வகைகளைத் தேர்வு செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க