பாதாம் பருப்பு

பாதாம் பயிரின் சிவப்பு இலை கொப்புள நோய்

Polystigma ochraceum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பழுப்பு நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்ட இலைகளில் வெளிர் பச்சை முதல் மஞ்சள் கலந்த ஆரஞ்சு அல்லது அடர் நிற ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்.
  • நுனி அல்லது ஓரங்களில் இலைகள் சுருண்டு காய்ந்துவிடும்.
  • முன்கூட்டியே இலை உதிர்ந்து போகக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு

அறிகுறிகள்

அறிகுறிகளானது இலைகளின் இருபுறமும் வெளிறிய பச்சை நிறப் புள்ளிகளாகத் தொடங்கி, பின்னர் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத் திட்டுகளாக மாறும். இந்தத் திட்டுகள் வசந்த காலம் முழுவதும் வளர்ந்து படிப்படியாக ஒன்றிணைந்து, கோடையின் பிற்பகுதியில் இலை பரப்பின் பெரும்பகுதியை மூடிவிடும். இவை பரவும்போது, இவற்றின் மையப்பகுதி கருமையாகவும், ஒழுங்கற்றதாகவும், பழுப்பு நிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருக்கும். நோய் வளர்ச்சியின் முற்றிய கட்டங்களில், நுனியில் அல்லது ஓரங்களில் தொடங்கி இலைகள் சுருண்டு, நச்சுத்தன்மையுடையதாக மாறும். சிவப்பு இலை கொப்புளம் முன்கூட்டிய இலை உதிர்வுக்கு வழிவகுக்கும், இது ஒளிச்சேர்க்கை திறனைக் குறைத்து, விளைச்சலை பாதிக்கலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கிருமிக்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறை எதுவும் தெரியவில்லை. தாமிர ஆக்ஸிகுளோரைடு (2 கிராம்/லி), காப்பர் ஹைட்ராக்சைடு (2 கிராம்/லிட்டர்) மற்றும் போர்டாக்ஸ் கலவை (10 கிராம்/லி) ஆகியவை இலைத் தொற்றைக் கணிசமாகக் குறைக்கும் ஆர்கானிக் (இயற்கையான) பூஞ்சைக் கொல்லிகளாகும். மலர் இதழ் உதிரும் நிலையில் பூஞ்சைக் கொல்லியை ஒரு முறையும், பிறகு 14 நாள் இடைவெளியில் இரண்டு முறை பயன்படுத்துவது நோயைக் குறைக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இலைத் தொற்றைக் கணிசமாகக் குறைக்கும் பூஞ்சைக் கொல்லிகள் மான்கோசெப் மற்றும் தொடர்புடைய டைதியோகார்பமேட்ஸ் (2 கிராம்/லிட்டர்) ஆகும். மலர் இதழ் உதிரும் நிலையில் பூஞ்சைக் கொல்லியை ஒரு முறையும், பிறகு 14 நாள் இடைவெளியில் இரண்டு முறை பயன்படுத்துவது நோயைக் குறைக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

பாலிஸ்டிக்மா ஓக்ரேசியம் என்ற பூஞ்சையால் இந்நோய்க்கான அறிகுறிகள் ஏற்படும், இது உயிருள்ள இலைகளில் பிரகாசமான வண்ண பூஞ்சை கட்டமைப்புகளை உருவாக்கும், பிறகு மட்குண்ணிகளாக தரையில் உள்ள மர எச்சங்களில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும். இந்த உதிர்ந்த இலைகளில், பூஞ்சை இனப்பெருக்க கட்டமைப்புகளை உருவாக்கும், இவை நிலைமைகள் சாதகமாக இருக்கும் போது அடுத்த வசந்த காலத்தில் வித்துக்களை வெளியிடும். வித்துக்களின் வெளியீடு பூக்கும் காலத்தில் தொடங்கும், இதன் உச்சம் இதழ் உதிர்வுடன் சேர்ந்து நடக்கும். இந்தப் பூஞ்சை ஒளிச்சேர்க்கை விகிதங்கள் மற்றும் மரங்களின் உற்பத்தித்திறனை பாதிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத்திறன் அல்லது குறைவாக பாதிக்கப்படக்கூடிய வகைகள், உங்கள் பகுதியில் கிடைத்தால் (பல சந்தையில் கிடைக்கின்றன), அவற்றை நடவு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என பழத்தோட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • நோய் பரவும் காரணி உட்செலுத்தப்படுவதைக் குறைக்க இறந்த, பாதிக்கப்பட்ட மரத்தை சீர்திருத்தம் செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட பாதாம் மரத்தின் பாகங்கள், அழுகும் இலைகள், மீதமுள்ள மலர் பாகங்களை அகற்றி அப்புறப்படுத்தவும்.
  • அப்புறப்படுத்தப்பட்ட திசுக்களை எரித்து அல்லது ஆழமாக புதைத்து அழிக்க வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க