திராட்சை

எஸ்கா

Togninia minima

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைத்திரள்களில் கோடுகள், பின்னர் சிதைந்து உலர்ந்து, முதிர்ச்சி அடைவதற்கு முன்பே இலை உதிர்ந்துவிடுதல்.
  • பெர்ரிகளில் சிறிய, வட்ட வடிவிலான, கரும் புள்ளிகள் காணப்படும், இதன் விளைவாக விரிசல் ஏற்படுகிறது.
  • மரத்தின் குறுக்கு வெட்டுகளில் செறிவுடைய வளையங்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

இந்த நோய் வளரும் பருவத்தில் எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதன் முக்கிய அறிகுறிகள் இலைகளில் காணப்படும் 'நரம்புகளுக்கு இடையேயான' கோடுகளாகும். இது முக்கிய நரம்புகளைச் சுற்றியுள்ள திசுக்களின் நிறமாற்றம் மற்றும் அவை உலர்ந்து போவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இது பொதுவாக சிவப்பு வகைகளில் அடர் சிவப்பு நிறமாகவும், வெள்ளை வகைகளில் மஞ்சள் நிறமாகவும் காணப்படுகிறது. இலைகள் முற்றிலுமாக வறண்டு முன்கூட்டியே உதிரக்கூடும். பெர்ரிகளில், சிறிய, வட்ட வடிவிலான, அடர் நிற புள்ளிகள், பெரும்பாலும் பழுப்பு-ஊதா வளைய ஓரங்களாக இருக்கலாம். இந்த பழ புள்ளிகள் பழம் உருவாதல் மற்றும் பழுத்தல் ஆகியவற்றுக்கு இடையில் எந்த நேரத்திலும் தோன்றக்கூடும். கடுமையாக பாதிக்கப்பட்ட கொடிகளில், பெர்ரி பெரும்பாலும் விரிசல் பெற்று, உலர்ந்து போகிறது. பாதிக்கப்பட்ட தண்டுகள், பூத்தேன்குழல், திராட்சை குலை காம்புகள் அல்லது மர பட்டைகளை குறுக்காக வெட்டிப்பார்க்கும்போது, கரும்புள்ளிகளால் ஆன செறிவுடைய வளையங்கள் காணப்படும். "செயலிழப்பு" என்று அழைக்கப்படும் எஸ்காவின் கடுமையான வடிவம் முழு கொடியையும் திடீரென இறந்துவிடச்செய்யும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

செயலற்ற துண்டுகளை 30 நிமிடங்களுக்கு சூடான நீரில் சுமார் 50 ° செல்சியஸ் வெப்பநிலையில் ஊற வைக்கவும். இந்த சிகிச்சை எப்போதும் பயனுள்ளதாக இருக்காது, எனவே மற்ற முறைகளுடன் இதனை சேர்த்து செய்ய வேண்டும். சீர்திருத்தம் செய்வதால் ஏற்படும் காயங்கள், ஊடுருவும் பொருட்களின் அடித்தள முனைகள் மற்றும் ஒட்டு பதியன்களில் தொற்றுவதைத் தடுக்க டிரைக்கோடெர்மாவின் சில இனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சையை சீர்திருத்தம் செய்த 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ள வேண்டும், 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இரசாயன உத்திகள் கடினம், ஏனெனில் பாரம்பரியமாக காயங்களை பாதுகாக்கும் பொருட்கள் பூஞ்சைகளைப் பாதிக்கும் வகையில் செயலற்ற திராட்சைத மரத் துண்டுகளில் ஆழமாக ஊடுருவுவதில்லை. தடுப்பு நடைமுறைகள் அனைத்து தண்டு நோய்களுக்கும் மிகவும் பயனுள்ள மேலாண்மை அணுகுமுறையாகும்.எடுத்துக்காட்டாக, பதியன் செய்த பிறகு, செடி கொடிகளை தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டு பொருள்கள் அல்லது பூஞ்சைக் கொல்லியால்-செறிவூட்டப்பட்ட சூத்திரங்களைக் கொண்ட சிறப்பு மெழுகுகளை கொண்டு நனைக்கலாம். இது பூஞ்சை மாசுபாட்டைத் தடுக்கும் அதே வேளை பதியனை ஒட்டச்செய்யும் கால்லஸ்(பட்டை மேற்தடிப்பு) வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் முக்கியமாக டோக்னினியா மினிமா என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன, ஆனால் மற்ற பூஞ்சைகளாலும் அறிகுறிகள் ஏற்படலாம் (எடுத்துக்காட்டாக பயோமோனியெல்லா கிளமிடோஸ்போரா). நோய்த்தொற்று உண்மையில் இளைய கொடிகளில்தான் ஏற்படுகிறது, ஆனால் அறிகுறிகள் முதன்முதலில் 5-7 ஆண்டுகளுக்குப் பிறகே திராட்சைத் தோட்டங்களில் தெளிவாகத் தெரியும். கொடிகளின் மர பாகங்களில் பொதிந்துள்ள மேலதிக கட்டமைப்புகளில் பூஞ்சைகள் குளிர்காலத்தில் உயிர்வாழ்கின்றன. இலையுதிர் காலத்திலிருந்து வசந்த காலம் வரை, வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளியிடப்பட்டு, செயலற்ற சீர்திருத்தத்தின்போது ஏற்பட்ட காயங்களை பாதிக்கலாம். சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு பல வாரங்களுக்கு காயங்கள் நோய்த்தொற்றால் பாதிக்கக்கூடியதாக இருக்கலாம். சீர்திருத்தம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட காயம் பாதிக்கப்பட்ட பிறகு, நோய்க்கிருமி ஒரு நிரந்தர, உள்மயமாக்கப்பட்ட மர நோய்த்தொற்றை நிறுவுகிறது, இதனை பூஞ்சைக்கொல்லி பயன்பாடுகளால் அழிக்கமுடியாது.


தடுப்பு முறைகள்

  • தாமதமான சீர்திருத்தம் அல்லது இரட்டை சீர்திருத்தம் போன்ற மாற்று சீர்திருத்த முறைகளை பயன்படுத்தவும்.
  • வித்துக்கள் சிதற அதிக வாய்ப்புள்ள அதிக மழை பெய்யும் காலங்களில் சீர்திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.
  • வசந்த காலத்தில் திராட்சைத் தோட்டத்தைக் கண்காணித்து, இறந்த பூத்தேன்குழல் அல்லது வளர்ச்சி குன்றிய தளிர்கள் ஏதேனும் தென்படுகிறதா என கண்காணியுங்கள்.
  • கோடையின் பிந்தைய காலத்தில், கொடியின் சொறி நோய் இருக்கும் பகுதிகளை துண்டிக்கவும்.
  • திராட்சைத் தோட்டத்திலிருந்து நோயுற்ற குப்பைகளை அகற்றி அவற்றை அழிக்கவும்.
  • கொடிகள் சீரான வேர் மற்றும் தளிர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் வரை பல ஆண்டுகளுக்கு பழமாவதை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க