விதையவரை

அவரையின் சாம்பலுரிய தண்டு கருகல் நோய்

Macrophomina phaseolina

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிற்றிலைகள் வாடுதல் , தொங்குதல், மற்றும் இலைத் திசுக்கள் வெளிறிய நிறமாகுதல்.
  • தண்டுகள் வைக்கோல் நிறமாகுதல்.
  • ஆணி வேர்கள் அழுகி, கருப்பு நிறத்தில் காணப்படுதல், பட்டை துண்டாக்கப்படுதல் மற்றும் வெளியேயும், உள்ளேயும் சிறிய கரும் பூஞ்சைக் கூறுகள் காணப்படுதல்.


விதையவரை

அறிகுறிகள்

இந்த நோய்க்கான அறிகுறிகளானது மிகவும் பொதுவாக பூப்பூக்கும் பிந்தைய நிலைகளில் காணப்படுகிறது. இவை ஆரம்பத்தில் தாவரத்தின் மேல் பாகங்களில் மட்டும் காணப்படும் மற்றும் சிற்றிலைகள் தொங்குதல், காம்புகள் மற்றும் இலைத் திசுக்கள் வெளிறிய நிறமாகுதல் உள்ளிட்டவை இவற்றுள் அடங்கும். பாதிக்கப்பட்ட தாவரங்களின் கீழ்ப்பகுதி இலைகள் மற்றும் தண்டுகள் வழக்கமாக வைக்கோல் நிறம் அல்லது சில நேரங்களில், பழுப்பு நிறமாக இருக்கும். ஆணி வேர்கள் அழுகும் அறிகுறிகளுடன் கருப்பு நிறமாக மாறும் மற்றும் பெரும்பாலான பக்கவாட்டு, இரண்டாம்நிலை வேர்கள் மற்றும் சிறுவேர்கள் காணாமல் போகும். இறந்தத் திசு வேர்களை மிகவும் உடையக்கூடியதாக்கும், பட்டைகள் குடையப்படும். தாவரத்தை வேரோடு பிடுங்க முயற்சித்தால், இவை எளிதாக உடைந்து, பொதுவாக ஆணிவேரின் கீழ்ப்பகுதி மண்ணிலேயே தங்கிவிடும். கழுத்துப்பகுதியின் நீண்ட பகுதிகளில் மரப்பட்டையின் உள்ளேயும் மற்றும் உட்புறத் திசுக்களிலும் சிறிய கரும் பூஞ்சைக் கூறுகள் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரிகோடெர்மா விரிடே, சூடோமோனாஸ் ஃபுளுயோரெசன்ஸ் மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற உயிர்க் கட்டுப்பாட்டு காரணிகளுடனான விதைச் சிகிச்சை நோயை நிர்வகிப்பதில் சில நன்மைகளை அளிக்கிறது .

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தியோபனேட் மெத்தில் மற்றும் விடாவாக்ஸ் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக்கொல்லி விதை சிகிச்சையால் நோய் ஏற்படுவது கணிசமாக குறைந்துவிட்டது. கேப்டன், திரம் அல்லது பென்லேட் ஆகியவற்றைக் கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிப்பதும் நோயைக் குறைக்க உதவுகிறது (பொதுவாக ஒரு கிலோ விதைகளுக்கு மூன்று கிராம்).

இது எதனால் ஏற்படுகிறது

இது மேக்ரோஃபோமினா ஃபேசியோலினா என்னும் மண் மூலம் பரவும் பூஞ்சையின் திரிபுகள் அல்லது வித்துக்களினால் ஏற்படும் மண் மூலம் பரவும் நோயாகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை 25-30 செல்சியஸிற்கு இடையே இருக்கும் போது அறிகுறிகள் திடீரென்று தோன்றும். அதற்குள்ளாக, தாவரத் திசுக்களின் நல்ல பாகங்களில் பூஞ்சை குடியேறி, அவற்றை மெதுமெதுவாகச் சேதப்படுத்தும். அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் அடிக்கடி ஏற்படும் ஈரப்பத அழுத்தம் ஆகியவற்றால், வெப்ப மண்டல ஈரப்பகுதிகளில் ஆர். பட்டாடிகோலா மிகவும் தீவிரமாகி வருகிறது. 30 ° செல்சியஸிற்கும் மேலான உயர் பகல் வெப்பநிலை, பூக்கும் மற்றும் காய்க்கும் நிலைகளில் வறண்ட மண் நிலைகள் விரைவாக நோயின் தீவிரத்தை அதிகரிக்கும். சில நேரங்களில் ஸ்க்லெரோடியா என்றழைக்கப்படும் குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் இருக்கும் பூஞ்சைக் கட்டமைப்புகள் 6 ஆண்டுகள் வரை மண்ணில் தொடர்ந்து நீடிக்கும்.


தடுப்பு முறைகள்

  • முதிர்ச்சியின் போது உயர் வெப்பநிலைகளைத் தவிர்ப்பதற்கு சீக்கிரம் முதிர்ச்சியடையும் இரகங்களை விதைத்து, அதன்மூலம் நோய்த்தொற்றைக் குறைக்கலாம்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயலைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • 3 ஆண்டு காலப் பயிர்ச் சுழற்சியானது மண்ணில் குளிர்காலத்தைக் கழிக்கும் உயிரினக் கட்டமைப்புகளைப் பெரிதும் குறைக்க உதவும்.
  • ஆழமாக உழுது வயல்களில் உள்ள தாவரக் குப்பைகளை அகற்றி, அழித்துவிடவும்.
  • நடவு செய்ததிலிருந்து காய்கள் நிரப்பப்படும் வரை நல்ல மண் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும், ஆனால் அதிகப்படியாக நீர் பாய்ச்சக்கூடாது.
  • நோய் தாக்கத்தைக் குறைக்க அதிகப்படியான உரங்கள் இடுவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க