நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

மால் ஸெக்கோ

Phoma tracheiphila

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தளிர்களிலும், இலைகளின் நரம்புகளுக்கு இடையேயும் சோகை உருவாகி, வசந்த காலத்தில் கிளைகள் நுனியிலிருந்து உள்நோக்கி இறந்துவிடும்.
  • முளைகளும், உறிஞ்சிகளும் முறையே நோய்த் தொற்றுடைய கிளைகளின் அடிப்பகுதியிலும், அடி வேரிலும் வளரும்.
  • உட்புற நாளங்களில் கோந்து உற்பத்தி ஆகி, இளஞ்சிவப்பிலோ ஆரஞ்சிலோ நிறமாற்றமாகத் தோன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

அறிகுறிகள் தனிப்பட்ட கிளைகளிலோ, பகுதிகளிலோ முதலில் தோன்றக்கூடும். மேலும் இவை திருத்தப்படாவிட்டால், மரத்தின் மீதமிருக்கும் பகுதிகளுக்கும் பரவி அவை பின்னர் இறக்க நேரிடலாம். முதல் அறிகுறிகள், வசந்த காலத்தில், தளிர்களிலும், இலைகளில் நரம்புகளுக்கு இடையேயும் சோகையாக உருவாகின்றன. அதைத் தொடர்ந்து, கிளைகளும், துணை கிளைகளும் நுனியிலிருந்து உள்நோக்கி இறந்துவிடும். காய்ந்த சுள்ளிகளில், ஈயத்தின் நிறத்திலோ, சாம்பல் நிறத்திலோ இருக்கும் பகுதிகளுக்குள், சற்றே எழும்பிய கரும்புள்ளிகள் இருப்பது வித்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. கிளைகளின் அடிப்பகுதியில் முளைகளும், அடிவேரில் உறிஞ்சிகளும் தோன்றுவது, மூலப் பயிரில், நோயின் பொதுவான விளைவாகும். பாதிக்கப்பட்ட கிளைகள், துணை கிளைகள் அல்லது அடிமரத்தை வெட்டியோ, மரப்பட்டையை உரித்தோ பார்த்தால், இந்த நோய்க்கே இயல்பான சால்மனின் இளம் சிவப்பிலிருந்து, ஆரஞ்சு சார்ந்த சிவப்பு வரையான நிற மாற்றம் மரத்தில் தென்படலாம். உட்புற அறிகுறி நாளங்களுக்குள் கோந்து உற்பத்தியோடு தொடர்புடையது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

காப்பரை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை நோய்க்கு எதிராகப் பயன்படுத்தலாம். மிகுந்த பாதிப்புக்குள்ளான காலப் பகுதியான, இலையுதிர்காலத்தில் இருந்து வசந்த காலம் வரை, பாதுகாப்பு சார்ந்த காப்பர் பூஞ்சைக் கொல்லிகளை அடிக்கடி உச்சியில் பயன்படுத்த வேண்டும். ரைசோஸ்பியரில் வசிக்கும் சூடோமோனாஸ் பாக்டீரியா, உதாரணமாக சூடோமோனாஸ் ஃப்ளூரோசன்ஸ் மற்றும் சூடோமோனாஸ் ப்யுடிடா ஆகியவையும், செயற்கை வளர்ப்பில் ஃபோமா ட்ராக்கைஃபிலா-வின் வளர்ச்சியைத் தடுப்பதாக காட்டப்பட்டுள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். ஜிராம் (ஜிங்க் டைமெதில்டைதையோகார்பமேட்) அடிப்படையிலான தயாரிப்புகள் ஃபோமா ட்ராக்கைஃபிலா-வை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கார்பாக்சின் மற்றும் பென்சிமிடஸால் போன்ற அமைப்புமுறை தயாரிப்புகள், தடுப்பு சிகிச்சைகளுக்கு பயனுள்ளவை. பாதுகாப்பு பூஞ்சைக் கொல்லி மற்றும் அமைப்புமுறை பூஞ்சைக் கொல்லியின் கலவையும் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை அல்லது கடுமையான காற்று போன்ற மரங்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் வானிலைக்குப் பின்.

இது எதனால் ஏற்படுகிறது

இலைகள், கிளைகள், வேர்கள் ஆகியவற்றின் சிதைவுகளின் மூலம் பூஞ்சை உள்ளே நுழைகிறது. வித்துகள் தண்ணீரால் கொண்டுவரப்படுபவை எனக் கருதப்படுகின்றன. நான்கு மாதங்களுக்கும் மேலாக, இந்தப் பூஞ்சையால் மண்ணில் பாதிக்கப்பட்ட கிளைகளிலோ, துணைக் கிளைகளிலோ வாழ முடியும். பல வாரங்களுக்கு இது ஒரு முக்கிய தடுப்பு மருந்தாகச் செயல்படலாம். மரங்களிலிருந்தும், குப்பைகளிலிருந்தும் மழைப்பொழிவுகளாலும், மேல்நிலை பாசனங்களாலும் வித்துகள் சிதறடிக்கப்படுகிறது. சில, காற்று வழியாகவும் பரவலாம். பூஞ்சை, வழக்கமாக ஒரு குறுகிய தொலைவில் மட்டுமே, ஆரம்ப மூலத்திலிருந்து 15 முதல் 20 மீட்டருக்கு இடையில், பரவுகிறது, ஆனால் அடிக்கும் காற்றின் திசையைப் பொறுத்து இந்தத் தூரம் அதிகரிக்கலாம். தொற்று ஏற்படக்கூடிய வெப்பநிலை வரம்பு 14 - முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதற்கு உகந்தது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட இடங்களில் இருந்து விதைகளை வாங்கவும்.
  • எதிர்ப்பு சக்தி வாய்ந்த வகைகள், அந்தப் பகுதியில் கிடைக்குமென்றால், அவற்றை நடவும்.
  • நோய் பொதுவாக இருக்கும் இடங்களிலுள்ள நாற்றங்காலில் இருந்து பெற்ற தாவரங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  • முதல் அறிகுறிகள் தோன்றிய உடனேயே மரங்களின் நுனிகளை கத்திரித்து விடவும்.
  • பழத்தோட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து, நோய்த் தொற்றுடைய தாவரங்களை உடனே அழிக்கவும்.
  • கலாச்சார சம்பிரதாயங்களின் போது ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க