சோயாமொச்சை

ஆஸ்கோசைடா கருகல்நோய்

Didymella rabiei

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், தண்டுகள் அல்லது காய்களில் சாம்பல் நிற புள்ளிகள் காணப்படலாம்.
  • இது இறுதியாக பழுப்பு நிறத்தில், ஒத்த மையங்களை உடைய தனித்தன்மை வாய்ந்த வளையங்களாக மாறக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்


சோயாமொச்சை

அறிகுறிகள்

அறிகுறிகளுள் செடியின் மேல் புறத்தில் உள்ள அனைத்துப் பாகங்களிலும் கிட்டத்தட்ட 1 மிமீ விட்டத்தில் காணப்படும் சிறிய கருப்பு நிற புள்ளிகளும் (பிக்னிடியா) அடங்கும். பின்னர், இந்தச் சிதைவுகள் பழுப்பு நிறமாக மாறி, கருமையான விளிம்புகளுடன் ஒத்த மைய வளையங்கள் உருவாகின்றன. இவ்வகை ஒத்த மைய வளையங்களே இந்த நோயின் சிறப்பியல்பான அறிகுறியாகும். நோய் அதிகரிக்கையில், தண்டுகளின் மீது நீளமான காயங்கள் உருவாகி, தண்டு இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும் தண்டுகள் இறந்து, கருகிப்போகவும் நேரிடலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், ஆஸ்கோசைடா ரேபிக்கு எதிரான, வேறு மாற்று சிகிச்சை குறித்து நாங்கள் ஏதும் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். விதைப்பிற்கு முன், திரம் அல்லது திரம் + தியாபெண்டஜொல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட விதை பூச்சுகளை கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். நோய்க்கான வளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக பூக்கும் நிலைக்கு முன்னர் தற்காப்பு பூஞ்சைக்கொல்லிகளை (உதாரணமாக குளோரோதலோனில்) பயன்படுத்தப்படலாம். நோய் கண்டறியப்பட்டவுடன், செயல்முறை முறைமை கொண்ட இலைத்திரள் மீதான பூஞ்சைக்கொல்லிகள் சுழற்சி முறையில் பரிந்துரைக்கப்படுகிறது (பாஸ்காலிட், மான்கோசெப், பைராகிலாஸ்டிரோபின் + ஃப்ளக்ஸோஃபைராக்ஸாட் அல்லது ட்ரைஜோலிந்தியோன் வகை தயாரிப்புகள்). கடுமையான மகசூல் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு சிகிச்சைகளை வளரும் பருவம் முழுவதும் பயன்படுத்த வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

கொண்டைக்கடலையின் ஆஸ்கோசைடா கருகல் நோய் ஆஸ்கோசைடா ரேபி என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இது பொதுவாக குளிர் காலத்தில் பிற்பகுதியில் தோன்றி, குளிர் மற்றும் ஈரமான நிலைமைகளின் கீழ் அதிகரிக்கிறது. ஆஸ்கோசைடா கருகல் நோய், தாவர மிச்சங்களில் பல வருடங்களுக்கு, குளிர் காலத்தைக் கழிக்கக்கூடும். நோய்க்கிருமி காற்று மற்றும் மழை சாரலின் மூலம் பரவக்கூடும். வித்துகளால் பல கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். தொற்று ஏற்படுவதற்கு, இலையில் குறைந்தபட்சம் 2 மணி நேர ஈரப்பதம் தேவைப்படுகிறது. வளரும் சிதைவுகளில் இருந்து, நோய் மேலும் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • எதையும் சமாளிக்கும் திறன் கொண்ட வகைகளைத் தேர்வு செய்யவும்.
  • பயிர் சுழற்சியை மேற்கொள்ளவும்.
  • மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டைக்கடலையைப் பயிரிடவும்.
  • சான்றளிக்கப்பட்ட நோய்களற்ற விதை பொருளைப் பயன்படுத்தவும்.
  • முடிந்தவரை சீக்கிரம் அறுவடையினை மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க