சோயாமொச்சை

சோயாமொச்சையின் இலக்குப் புள்ளி நோய்

Corynespora cassiicola

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் மீது ஒழுங்கற்ற சிவந்த-பழுப்பு நிறக் காயங்கள் காணப்படும்.
  • காயங்களானது வெளிர் பச்சை முதல் மஞ்சள் நிற ஓரங்களைக் கொண்டிருக்கும்.
  • பெரிய காயங்கள் வெளிர் அல்லது அடர் நிற வளையங்களைக் கொண்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

இலக்குப் புள்ளி நோய் பெரும்பாலும் இலைத்திரள் நோயாகும். இலைகளில் வட்டவடிவம் முதல் ஒழுங்கற்ற சிவந்த பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும், இவை மஞ்சள் பச்சை நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். இந்த புள்ளிகளின் வளர்ச்சியானது பெரும்பாலும் வெளிர் அல்லது அடர் பழுப்பு நிற வளையங்களை உடைய மண்டலப் பகுதிகளாக மாறும், எனவே இது இலக்குப் புள்ளி நோய் என்ற பொதுவான பெயர் பெற்றது. தண்டுகள் மற்றும் காம்புகள் கூட பாதிக்கப்படக் கூடும் மற்றும் இவை பொதுவாக கரும் பழுப்பு நிறப் புள்ளிகளாகவோ அல்லது நீண்ட காயங்களாகவோ உருவாகும். சிறிய, வட்ட வடிவ கருப்பு நிறப் புள்ளிகள் பின்னர் காய்களில் தோன்றும். கடுமையானத் தொற்றுக்கள் இலைகளை முன்கூட்டியே உதிரச் செய்துவிடக் கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இலக்குப் புள்ளி நோய்க்கு எதிராக மாற்று சிகிச்சை எதுவும் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடு அரிதாக பொருளாதார ரீதியாக சாத்தியமானது. பைராகுளோஸ்ட்ரோபின், எபோக்ஸிகொனாஸோல் மற்றும் ஃப்ளுக்சாபைரோக்சாட் அல்லது பிக்சஃபென், பிரோத்தியோகொனாஸோல் மற்றும் டிரிஃப்லோக்சிஸ்ட்ரோபின் போன்ற கலவைகளை உடைய தயாரிப்புகள் பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

காரினெஸ்போரா கேஸ்ஸிகோலா என்னும் பூஞ்சையானது மண்ணிலும், பயிர்க் குப்பைகளின் மீதும் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். தொற்று நோய்க்கான சாதகமான நிலைகள் அதிக ஈரப்பதம் (> 80%) மற்றும் ஈரப்பதம் இல்லாத இலைகளும் ஆகும். உலர் வானிலை நோய் வளர்ச்சியை நசுக்கும். தாமதமாக முதிர்ச்சியடையும் இரகங்களில் அல்லது அதிகம் மழைப்பொழிவு உடைய பருவங்களில் எளிதில் நோய்ப் பாதிப்பு ஏற்படக்கூடிய இரகங்களில் இந்த நோய் மிகவும் தீவிரமாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • பொருளாதார சேதத்தைத் தவிர்க்க அதிக விளைச்சல் தரும் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய்ப்பூச்சியின் உச்சக்கட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க, சீக்கிரம் முதிர்ச்சியடையும் இரகங்களைக் கொண்டு சீக்கிரம் நடவு செய்யவும்.
  • அறுவடைக்குப் பின் தாவரக் குப்பைகள் எதுவும் இல்லாமல் வயல்களை நன்கு சுத்தப்படுத்தவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்யவும் மற்றும் அதே பகுதியில் ஒற்றைப் பயிர் செய்யும் முறையைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க