மக்காச்சோளம்

சோளத்தின் சாம்பல் இலை புள்ளி நோய்

Cercospora zeae-maydis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • கீழ்ப்புற இலைகளில், பொதுவாக பூப் பூப்பதற்கு முன்னர், மஞ்சள் நிற வெளிறிய ஒளிவட்டங்களுடன் சிறிய பழுப்பு நிற அல்லது வெளிறிய நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • இந்தப் புள்ளிகள் சாம்பல் நிறமாகி மற்றும் நீளமான சதுர வடிவப் புண்களாக பெரிதாகி இலை நரம்புகளுக்கு இணையாக ஓடும்.
  • உகந்த சூழலில், அவை இணைந்து மற்றும் முழு இலைகளையும் விழுங்கிவிடும்.
  • இலைகளின் கருகல் தாவரங்களைப் பலவீனப்படுத்துகிறது மற்றும் சில நேரங்களில் தண்டுகளை மென்மையாக மாற்றி மற்றும் கீழே விழச் செய்கிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

கீழ்ப்புற இலைகளில், பொதுவாக பூப் பூப்பதற்கு முன்னர், மஞ்சள் நிற வெளிறிய ஒளிவட்டங்களுடன் சிறிய சிதைந்த புள்ளிகள் ( பழுப்பு நிறத்தில் அல்லது வெளிறிய நிறத்தில்) காணப்படும். படிப்படியாக இந்தக் காயங்கள் சாம்பல் நிறமாகி மற்றும் இளம் இலைகளிலும் தோன்றும். நோய் அதிகரிக்கும் போது, இந்தப் புள்ளிகள் சாம்பல் நிறமாகி, நீளமான சதுர வடிவப் புண்களாகப் பெரிதாகி இலை நரம்புகளுக்கு இணையாக ஓடும். உகந்த சூழல்களில் (சூடான வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் ஈரமான இலைகள்) அவை ஒன்றாக இணைந்து மற்றும் முழு இலைகளையும் விழுங்கிவிடும். தானியங்கள் உருவாகும் முன் இவ்வாறு நடந்தால், கணிசமான மகசூல் இழப்பு ஏற்படலாம். இலைகளின் கருகல் தாவரங்களை பலவீனப்படுத்துகிறது மேலும் சில நேரங்களில் தண்டுகளை மென்மையாக மாற்றி, கீழே விழச் செய்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோயைக் கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டுச் சிகிச்சைகள் எதுவும் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வளர்ச்சி காலத்தின் ஆரம்பத்தில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால், இலைத் தொகுதி பூஞ்சை சிகிச்சையானது இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாகும், ஆனால் வானிலை நிலைமைகள், சாத்தியமான விளைச்சல் இழப்பு மற்றும் தாவரங்களின் நோய் ஏற்புத்திறன் ஆகியவற்றிற்கு எதிராக இதனைப் பரிசீலித்து பார்க்க வேண்டும். பைராகிளாஸ்டுரோபின் மற்றும் ஸ்டிராபிலுரின், அல்லது அசாக்சிஸ்டிராபின் மற்றும் பிராப்பிகோனாஜொல் ஆகியவற்றின் சேர்க்கை, பிராத்தியோகோனாஜொல் மற்றும் டிரிஃபிளாக்ஸ்டிரோபின் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக்கொல்லிகள் பூஞ்சையைக் கட்டுப்படுத்துவதில் நன்றாக வேலை செய்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

சாம்பல் இலைப் புள்ளி நோய் செர்க்கோஸ்போரா ஜீ -மேடிஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு மண்ணில் உள்ள தாவரக் கழிவுகளில் வாழ்கிறது. வசந்த காலத்தில், வித்துக்கள் மழைப்பொழிவு மற்றும் காற்று மூலம் கீழ்ப்புற இலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உயர்ந்த வெப்பநிலை (25 முதல் 30 டிகிரி செல்சியஸ்), அதிக ஈரப்பதம் (பனிதுளி,மூடுபனி) மற்றும் நீண்ட கால இலை ஈரப்பதம் ஆகியவை இதன் வாழ்க்கை சுழற்சிக்கு சாதகமானவை ஆகும். சூடான, வறண்ட வானிலை இதன் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதன் அறிகுறிகள் பல்வேறு தாவர வகைகளுக்கு இடையே சற்று வேறுபடுகின்றன. நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் கொண்ட தாவர வகைகளில் 14-21 நாட்களில் பூஞ்சை அதன் வாழ்க்கைச் சுழற்சியை (நோய்த்தொற்றிலிருந்து புதிய வித்துக்கள் உற்பத்தி செய்தல் வரை) நிறைவு செய்கிறது, மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளில் 21-28 நாட்களில் அதன் வாழ்க்கை சுழற்சி நிறைவடைகிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • தாவரங்களின் பாதகமான நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக தாமதமாக நடவு செய்யுங்கள்.
  • தாவரங்களுக்கு இடையில் இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் நல்ல காற்றோட்டத்தைப் பேணுங்கள்.
  • அறுவடைக்குப் பின் ஆழமாக உழுது மற்றும் அனைத்துத் தாவர கழிவுகளையும் புதைத்து விட வேண்டும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு நீண்ட காலப் பயிர் சுழற்சி முறைக்குத் திட்டமிடுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க