மக்காச்சோளம்

வெப்பமண்டலத் துரு நோய்

Physopella zeae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் இருபுறங்களிலும் இலை நரம்புகளுக்கு இணையாக வட்டம் முதல் நீள்வட்ட வடிவ வெள்ளை நிறக் கொப்புளங்கள் கொத்துக்களாகக் காணப்படும்.
  • இவை பெரிதாகையில், கொப்புளங்கள் கருப்பு நிறமாக மாறி, அதன் நடுப்பகுதியில் வெளிப்படையான பிரகாசமான பிளவுபட்ட புண்கள் காணப்படும்.
  • கடுமையான நோய்த்தொற்றுகளின் போது, இந்த கொப்புளங்கள் ஒன்றாகி, முதிர்ச்சியடைவதற்கு முன்பே இலை உதிர்தல் மற்றும் கடுமையான விளைச்சல் இழப்பு போன்றவற்றுக்கு வழி வகுக்கிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

நோய்க்கான அறிகுறிகளானது முக்கியமாக இலைகளின் மேல்புற தோலுக்கு அடியில் வட்ட வடிவம் முதல் நீள் வட்ட வடிவிலான வெள்ளைக் கொப்புளங்கள் காணப்படும். இந்தக் கொப்புளங்கள் இலைகளின் இருபுறங்களிலும் இலை நரம்புகளுக்கு இணையாக வட்டம் முதல் நீள்வட்ட வடிவ வெள்ளை நிறக் கொப்புளங்கள் கொத்துக்களாகக் காணப்படும். இவை பெரிதாகையில், கொப்புளங்கள் கருப்பு நிறமாக மாறி, அதன் நடுப்பகுதியில் வெளிப்படையான பிரகாசமான பிளவுபட்ட புண்கள் காணப்படும். கடுமையான நோய்த்தொற்றுகளின் போது, இந்தக் கொப்புளங்கள் ஒன்றாகி, முதிர்ச்சியடைவதற்கு முன்பே இலை உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. பூ பூப்பதற்கு முன்பு இந்தப் பூஞ்சை தாவரங்களைப் பாதித்தால், இது அதிகப்படியான அழிவையும் மற்றும் கடுமையான விளைச்சல் இழப்பையும் ஏற்படுத்தும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பிஸோபெல்லா ஜீக்கு எதிரான மாற்று சிகிச்சைகள் எதுவும் இல்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட அல்லது இந்த நோய் ஏற்படுவதைக் குறைக்க உதவும் வகையில் ஏதேனும் உயிரியல் சிகிச்சைகள் உங்களுக்குத் தெரிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அதிக மதிப்புகளைக் கொண்ட பயிர்களில் முதல் அறிகுறிகள் தென்படும் போது, பூஞ்சைக் கொல்லிகளின் இலைதிரள் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அஜாக்சிஸ்டிராபின், டெபுகோனாஜொல், பிராப்பிகோனாஜொல், அல்லது இவற்றின் கலவைகள் போன்றவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகள், நோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்தப் பூஞ்சை ஒரு சிதறலானது மற்றும் இது அமெரிக்கக் கண்டத்தின் சூடான, ஈரப்பதமான வெப்ப மண்டலத்தில் மட்டுமே ஏற்படுகிறது. இவை பொருத்தமான புரவலன் இல்லாமல், தனது வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய இயலாத பிணைப்பான ஒட்டுண்ணிகளாகும். இவற்றால் மண்ணிலோ அல்லது தாவரக் கழிவுகளிலோ செயலற்ற நிலையில் குளிர்காலத்தைக் கழிக்க இயலாது, இதனால் அதே வயலில் ஏற்படும் பருவங்களுக்கு இடையேயான நோய்த்தாக்கங்களை எளிதில் தவிர்க்கலாம். இது முக்கியமாகக் காற்று மூலம் மரத்திற்கு மரம் அல்லது பல்வேறு பகுதிகளுக்கு இடையே பரவுகிறது. அதிகப்படியான வெப்பநிலை (22 முதல் 30 டிகிரி செல்சியஸ்), அதிக ஈரப்பதம் மற்றும் அதிக அளவிலான சூரிய வெளிச்சம் ஆகியவை வெப்ப மண்டல துரு நோய்க்குச் சாதகமானதாக உள்ளது. இலை மேற்பரப்பில் காணப்படும் தண்ணீர் வித்துக்கள் முளைப்பதற்கு வழி வகுக்கிறது. பருவ காலத்திற்குப் பின்னர் தாழ்வு நிலைகளில் மக்காச்சோளங்களை நடவு செய்வதால், வெப்பமண்டலத் துரு நோய் முக்கியமாக நிகழ்கிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் சந்தையில் கிடைக்கக்கூடிய எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் தன்மை கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய்க்குச் சாதகமற்ற காலங்களில் மக்காச்சோளங்களை நடவு செய்யவும்.
  • அதிக உயரத்தில் வயல்களில் நடவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும்.
  • களைகள் மற்றும் பூஞ்சைகளின் பிற மாற்றுப் புரவலன்களைக் கட்டுப்படுத்தவும்.
  • புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க