பார்லிகோதுமை

வலை போன்ற கொப்புளங்கள்

Pyrenophora teres

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • வலை போன்ற வடிவத்தை உடைய இந்த நோயானது இலைகளின் மீது வலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் துல்லியமான பழுப்பு நிறக் காயங்கள் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.
  • இலைப் பரப்புகளின் நெடுகிலும், குறுக்கிலும் காயங்கள் வளரும்; இவை பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும்.
  • 3-6 மி.மீ.
  • விட்டம் கொண்ட திடமான, பழுப்பு நிறத்தில், நீள்வட்ட வடிவிலான புள்ளிகள் இந்த நோயின் புள்ளி வடிவிலான அடையாளமாகும்.
  • உமியடிச் செதில்களில் காணப்படும் சிறிய பழுப்பு நிறக் கோடுகள் விதைகளைச் சுருங்கச் செய்யும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

பார்லிகோதுமை

அறிகுறிகள்

வலைக் கொப்புளங்கள் இரண்டு வடிவத்தினைக் கொண்டுள்ளன : புள்ளி வடிவம் மற்றும் வலை போன்ற வடிவம். அறிகுறிகளானது பெரும்பாலும் இலைகளில் காணப்படும், ஆனால் அவ்வப்போது இலை உறைகளிலும், பூவடிச்செதில்களிலும் காணப்படும். வலை வடிவமானது துல்லியமான பழுப்பு நிறக் காயங்களாக ஆரம்பிக்கும்; இது நீண்டு, இலைப் பரப்புகள் நெடுகிலும் குறுக்கிலும் மெல்லிசான, கரும்பழுப்பு நிறக் கோடுகளாக மாறி, தனித்துவமான வலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். முதிர்ந்த காயங்கள் இலை நரம்புகள் நெடுகிலும் தொடர்ந்து நீளும், மேலும் அவை பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். ஆரம்பத்தில், புள்ளிகளானது மஞ்சள் நிற விளிம்புகளால் சூழப்பட்ட சிறிய திடமான பழுப்பு நிறமுடைய நீள்வட்டப் புண்களாக இருக்கும். பின்னர் இந்த புள்ளிகள் 3-6 மிமீ விட்டம் உடைய வெளிர் அல்லது கரும் பழுப்பு நிறக் கொப்புளங்களாக உருவாகும். காதுகளும் பாதிக்கப்படக் கூடும். பூவடிச்செதில்களில் உருவாகும் வலையில்லாத தோற்றத்தை உடைய சிறிய பழுப்பு நிறக் கோடுகள் விளைச்சல்களைக் குறைத்து, விதைகளை சுருங்கச் செய்யும். பாதிக்கப்பட்ட உட்கருவின் அடிப்பகுதியில் தெளிவான பழுப்பு நிறக் காயங்கள் தென்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், பைரெனோபோரா டெரிஸ் பூஞ்சைக்கு எதிரான மாற்றுச் சிகிச்சை முறைகள் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். டிரையஜோல் மற்றும் ஸ்டிராபிலுரின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலைத்திரள் பூஞ்சைக் கொல்லிகள் இரண்டு வடிவ வலைக் கொப்புளங்களையும் திறம்படக் கட்டுப்படுத்துகின்றன. டெபுகொனாஜோல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகம் மழை பொழியும் சுற்றுச்சூழலில், இரண்டு தெளிப்புகள் பயன்படுத்த வேண்டியிருக்கும். முடியும் போதெல்லாம், பல்வேறு செயல் முறைகளை உடைய பூஞ்சைக் கொல்லிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தவும். இது எதிர்ப்புத் திறன் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். விதைகளைச் சீர்ப்படுத்துவது வலை வடிவிலான வலைக் கொப்புளங்களுக்கு எதிராக மட்டுமே திறம்பட செயல்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

வலைக் கொப்புளங்கள் பைரெனோபோரா டெரெஸ் என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இது பயிர்க் குப்பைகள் மற்றும் புரவலன் தாவரங்களில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். பாதிக்கப்பட்ட விதைகளில் இருந்தும் நோய் ஏற்படும்; ஆனால் பொதுவாக குறைவான அளவிலேயே ஏற்படும். நோயானது காற்று மூலம் பரவும் வித்துக்கள் மற்றும் மழைச் சாரல்கள் மூலம் பரவும். 10 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரி செல்சியஸ் ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பநிலையில் ஆறு மணி நேர ஈரப்பதமான சூழ்நிலைக்குப் பிறகு முதன்மைப் பயிர்த் தொற்று ஏற்படுகிறது. நிலைமைகள் சாதகமாக இருக்கும் போது, முதன்மை நோய்த் தொற்று ஏற்பட்ட 14 முதல் 20 நாட்களுக்குப் பிறகு காற்றின் மூலம் வித்துக்கள் பரவுகிறது. கடுமையான தொற்று பச்சை நிற இலைப்பரப்பு மற்றும் தாவர உற்பத்தியைக் குறைக்கிறது, மேலும் இது இலைகளை முதிர்ச்சி அடைவதற்கு முன்னதாகவே அழித்துவிடும். தண்டுகளிலும் பூஞ்சையானது வளரக்கூடும். அறுவடைக்குப் பிறகு பூஞ்சையானது பயிர்த்தாள்களில் வாழும், அதிலிருந்து அடுத்துவரும் பருவங்களுக்கு நோய் பரவும். வலைக் கொப்புளங்களானது முக்கியமாக விதையின் எடையையும், தானியத்தின் தரத்தையும் குறைக்கும்.


தடுப்பு முறைகள்

  • நோய்க்கிருமி இல்லாத சான்றளிக்கப்பட்ட ஆதாரங்கள் அல்லது ஆரோக்கியமான தாவரப் பொருட்களில் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சகிப்புத்தன்மை உடைய வகைகளைப் பயன்படுத்தவும்.
  • சாத்தியமானால் பருவத்தின் பிந்தைய பகுதியில் விதைக்கவும்.
  • நடவு செய்யும்போது விதைப்படுகை வெதுவெதுப்பாகவும், ஈரமாகவும் மற்றும் நன்கு வடிந்தும் இருக்க வேண்டும்.
  • விதைகளுக்குப் போதுமான ஈரப்பதத்தை வழங்குவதற்குத் தேவையான அளவை விட ஆழமாக நடவு செய்யக்கூடாது.
  • போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்கவும்.
  • மண்ணில் போதுமான அளவு சாம்பல் சத்துக்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
  • கொடியிலை முளைக்கும் பகுதிகளைச் சுற்றிப் பயிர்களைக் கவனமாக கண்காணிக்கவும்.
  • ஏதேனும் பிற பயிரைக் கொண்டு பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ளவும்; இரண்டு ஆண்டு இடைவெளி தேவைப்படலாம்.புற்கள் மற்றும் புரவலன் பயிர்களைக் கட்டுப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின் மேற்பரப்பின் கீழ் தாவரக் குப்பைகளைப் புதைக்க ஆழமாக நிலத்தை உழவும்.
  • முடிந்த அளவுக்கு பயிர்த்தாள் குப்பைகள் அடுத்த பருவங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதைக் குறைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க