துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

பயறு வகையின் செர்கோஸ்போரா இலை புள்ளி நோய்

Cercospora canescens

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் மீது சிவந்த பழுப்பு நிற ஓரங்களால் சூழப்பட்ட சிறிய வெளிர்-பழுப்பு நிற வளைய புள்ளிகள் காணப்படும்.
  • கிளைகள் மற்றும் பச்சைக் காய்களில் புள்ளிகள் காணப்படும்.
  • கடுமையான இலையுதிர்வு ஏற்படும்.
  • விளைச்சல் இழப்பு ஏற்படும்.


துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

அறிகுறிகள்

நோய்க்கான அறிகுறிகளானது நோய்கிருமிகளின் வலிமை மற்றும் தாவர வகைகளை பொறுத்து சற்று மாறுபடும். பயிர் விதைத்த 3-5 வாரங்களில், பழுப்பு நிற மையப்பகுதி மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் சிறிய நீர் தோய்த்த வளைய புள்ளிகளாக இலைகளில் முதன் முதலில் தோன்றும். நோயின் பிந்தைய நிலையில், புள்ளிகள் அதிகரித்து (கரும்பழுப்பு நிற) சிதைவுகளாக மாறி, சிவந்த பழுப்பு நிற ஓரங்களுடன் சற்று அழுத்தத்தோடு காணப்படும். இவை தாவரங்களின் பிற பகுதிகளிலும், குறிப்பாக பச்சை காய்களிலும் தோன்றும். சாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ், பூக்கள் மற்றும் காய்கள் உருவாகும் சமயம் ஏற்படும் கடுமையான இலை புள்ளிகள் கடுமையான இலை உதிர்வுக்கு வழிவகுக்கும். காய்களினுள் மற்றும் மேற்பரப்பில் ஏற்படும் பூஞ்சைகள் அவற்றை முழுமையாக சேதப்படுத்தி, பெரும்பாலும் 100% விளைச்சல் இழப்புக்கு வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகளுக்கு சூடான நீர் சிகிச்சை அளிப்பது சாத்தியமாகும். வேப்ப எண்ணெய் சாறுகளின் பயன்பாடு நோய் தீவிரத்தைக் குறைக்கும் திறன் கொண்டது (அதிக அளவிலான காய் மற்றும் விதைகளின் எண்ணிக்கை, ஆரோக்கியமான காய்கள், அதிக எடை).

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக்கொல்லிகளின் சிகிச்சை தேவைப்பட்டால் மான்கோசெப், குளோரோத்தலோனில் @ 1 கிராம் / லி அல்லது தியோபனேட் மெத்தில் @ 1 மில்லி ஆகியவற்றை கொண்ட தயாரிப்புகளை 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இலை புள்ளி நோய் செர்கோஸ்போரா கேன்செசன்ஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது உளுந்து, பச்சைப்பயறு இரண்டையும் பாதிக்கிறது. இந்த பூஞ்சை விதைகள் மூலம் பரவக்கூடியது மற்றும் மண்ணில் உள்ள தாவரக் கழிவுகளில் 2 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்வாழக் கூடியது. வேர் அமைப்பைத் தொடர்ந்து இது மண்ணிற்குள் மிக அதிக ஆழத்திற்கு செல்லும். இது வயல்களில் உள்ள மாற்று புரவலன்கள் மற்றும் தன்னார்வ பயிர்களிலும் வாழும். கீழ் புற இலைப் பகுதிகளுக்கு நீர் தெளிப்பு மற்றும் காற்று மூலம் இது பரவுகிறது. காலை மற்றும் இரவு உயர் வெப்பநிலை, ஈரமான மண், உயர் காற்று ஈரப்பதம் அல்லது கடுமையான புயல் மழை ஆகியவை இந்தப் பூஞ்சை பரவுவதற்கு சாதகமான சூழ்நிலைகளாகும்.


தடுப்பு முறைகள்

  • மண்ணில் நல்ல வடிகாலை உறுதிபடுத்தவும்.
  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றிதழ் பெற்ற நோய் பாதிப்பில்லாத ஆதாரங்களில் இருந்து விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்பு திறன் அல்லது சகிப்புத்தன்மை கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • மலர் கட்டமைப்பு சேதங்களை தவிர்க்க தாமதமாக நடவு செய்யவும்.
  • வரிசைகளுக்கு இடையே நோய் பரவுவதைத் தவிர்க்க உயரமாக வளரும் தானியங்கள் மற்றும் கம்பு கொண்டு ஊடுபயிர் செய்யவும்.
  • நல்ல காற்றோட்டத்தை பராமரிக்க தாவரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி விடவும்.
  • பூஞ்சைகள் கீழ்ப்புற இலைகளுக்கு பரவுவதைத் தவிர்க்க தாவரங்களை தழைக்கூளம் கொண்டு பாதுகாக்கவும்.
  • நல்ல முறையில் வயல் வரப்பை பராமரிக்க, அனைத்து தாவரக் கழிவுகளையும் அகற்றி, அழித்து விடவும்.
  • அசுத்தமான உபகரணங்களைச் சுத்தம் செய்யவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும் போது வயலில் வேலை செய்வதை தவிர்க்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர்கள் கொண்டு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க