தினைவகைத் தானியம்

கம்பு கரிப்பூட்டை நோய்

Moesziomyces bullatus

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • தானியங்கள் பச்சை நிற ஸ்போரகக்கூட்டமாக மாறும் (பூஞ்சை செதில் கேப்சூல்கள்).
  • பின்னர் பூஞ்சை கருப்பு நிறமாகிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்


தினைவகைத் தானியம்

அறிகுறிகள்

திணைகளின் தானியங்கள் பசுமையான ஸ்போரகக்கூட்டமாக மாறும். இவை தானியங்களை விட மிகவும் பெரியவை மற்றும் அவை நீள்வட்டம் / கூம்பு கேப்சூல்கள் போல் தோன்றும். நோய் முன்னேறும்போது, ஸ்போரகக்கூட்டம் கருப்பு நிறமாகிவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், மோஸ்ஜியோமைசஸ் புல்லாட்டசுக்கு எதிராக எந்த மாற்று சிகிச்சையும் எங்களுக்கு தெரியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து தகவல் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பொருளாதார கண்ணோட்டத்தில், இரசாயன சிகிச்சை சாத்தியமானதாக இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

மோஸியோமைசெஸ் புல்லடஸ் எனும் நோய்க் காரணிகளால் இந்நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது. விதைகளின் வழியாக இந்த நோய் பரவுகிறது. இந்த நோய்க்காரணிகள் 5°C - 40°C வெப்பநிலையில் பரந்த அளவில் வளரக்கூடியது, இதன் அதிகபட்ச வளர்ச்சி 30°C வெப்பநிலையில் ஏற்படும். பூஞ்சை வித்துக்கள் மண்ணில் உயிர்வாழும். விதை, மண் மற்றும் காற்றின் வழியே இவை பரவும் தன்மை கொண்டது.


தடுப்பு முறைகள்

  • டபிள்யூசி -சி75, ஐசிஎம்எஸ் 7703, ஐசிடிபி 8203 மற்றும் ஐசிஎம்வி 155 போன்ற நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை பயன்படுத்தவும்.
  • ஆரோக்கியமான விதைகளை பயன்படுத்தவும்.
  • அதிக நைட்ரஜன் கொண்ட உரங்களை தவிர்க்கவும்.
  • மண்ணை வெள்ளை பாலிதீன் மற்றும் புல் தழைக்கூழங்களின் உதவியுடன் சூரிய ஒளியினால் உலர வைக்கும்போது கரிப்பூட்டை பாதிப்புகள் தொடர்வதைக் குறைக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க