வெங்காயம்

வெள்ளை அழுகல் நோய்

Stromatinia cepivora

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நுனியிலிருந்து தொடங்கி இலைகள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் வாடுதல்.
  • பஞ்சு போன்ற, வெள்ளை பூஞ்சை வளர்ச்சி சிறிய கருநிற புள்ளிகளுடன் தாவரத்தின் அடிப்பாகத்தில் காணப்படும்.
  • வேர் அழிந்துபோகுதல்.
  • தண்டுகள் மற்றும் குமிழ்த்தண்டுகள் குறைந்துபோகுதல்.
  • தாவரங்கள் மடிந்து, நுனியிலிருந்து இறந்து போகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்
வெள்ளைப் பூண்டு
வெங்காயம்
பட்டாணி

வெங்காயம்

அறிகுறிகள்

அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் நோய் தொற்று ஏற்படலாம், ஆனால் பொதுவாக பழமையான தாவரங்களில் இது முதலில் தோன்றும். இலைகளின் நுனியிலிருந்து தொடங்கி, கீழ்நோக்கிய திசையில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இலைகள் வாடி, பிறகு இறந்துவிடக்கூடும். மேலே கூறப்பட்ட இந்த அறிகுறிகள் வெளிப்படும்போது, நோய்க்காரணி ஏற்கனவே வேர்கள், குமிழ், தண்டுகள் மற்றும் இலை உறைகளில் குடியேறியிருக்கும். வெள்ளை பூஞ்சை வளர்ச்சி பெரும்பாலும் மண்ணில் காணப்படும் மற்றும் இது வேர் சிதைவுகளின் அடையாளம் ஆகும். வெளியே இழுத்துப்பார்க்கும் போது, குமிழ்தண்டில் வெள்ளை பஞ்சுபோன்ற பூஞ்சை வளர்ச்சி காணப்படும், பெரும்பாலும் அதன் அடித்தளத்தில் காணப்பட்டால், அது நன்கு அழுகிய நிலையை குறிக்கும் அடையாளம் ஆகும். வெள்ளை பூஞ்சையின் மத்தியில் சிறிய, வட்ட வடிவ திட்டுக்கள் காணப்படும். முக்கிய வேர்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு , முற்றிலும் காணாமல் போய்விடும். இரண்டாம்நிலை வேர்கள் வளர்ந்து, கிடைமட்டமாக விரிவடைந்து, மற்ற தாவரங்களில் நோய் பரவுவதற்கான நேரடி பாதையாக அமையலாம். தாவரங்கள் சில நாட்கள் முதல் வாரங்களுக்குள் சரிந்துவிடக்கூடும். ஏன் அறிகுறிகள் வயல்களில் மொத்தமாக காணப்படும் என்பதை இது விளக்குகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி பல நிலை நோய் காட்டுப்பாடு கிடைக்கப்பெறுகிறது, முக்கியமாக எதிர்வினை பூஞ்சைகளைப் பயன்படுத்துதல். உதாரணமாக, டிரிகோடெர்மா, ஃபுஷேரியம், கிளைகோகிளாடியம் அல்லது சாட்டோமியம் ஆகியவற்றின் இனங்கள் வெள்ளை அழுகல் நோயின் ஒட்டுண்ணிகளாகும், இது பூஞ்சையின் வளர்ச்சியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. பிற பூஞ்சைகள், உதாரணமாக டிரிகோடெர்மா ஹர்ஜியானம், டெரட்டோஸ்பெர்மா ஒலிகோகிளாடியம் அல்லது லேட்டரிஸ்போரா ப்ரெவிராமா ஆகியவையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வயல்கள் தரிசாக இருக்கும் போது வித்துக்களை உற்பத்தி செய்யவும் பூண்டு சாற்றை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். இது பின்வரும் காலங்களில் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. பூண்டு குமிழ்களை உரித்து, நசுக்கி, 10 லி தண்ணீருடன் கலக்க வேண்டும். பின்னர் அதனை 2 சதுர அடிகளுக்கு 10 லி என்ற விகிதத்தில் வயலில் சேர்க்க வேண்டும். பயன்பாட்டிற்கான சிறந்த வெப்பநிலை 15-18° செல்சியஸ் ஆகும், ஏனெனில் இது பூஞ்சைக்கு உகந்ததாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக வெள்ளை அழுகல் நோயை பொறுத்த வரை கலாச்சார மற்றும் உயிரியல் முறைகள் நோய்த்தொற்றைக் குறைப்பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், டெபுகொனாசோல், பெண்தியோபைரெட், ஃப்ளுடோஆக்சோனில் அல்லது இப்ரோடியோன் போன்றவற்றை கொண்டிருக்கும் தயாரிப்புகளை, நடுவதற்கு முன்னர் மண்ணில் பயன்படுத்தலாம் அல்லது நடவு செய்த பிறகு இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறையானது, சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் செயல்பாட்டு காரணியை பொறுத்தது மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்கு முன்னர் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

வெள்ளை அழுகல் நோய் ஸ்க்லெரோடியம் செபிவரம் என்னும் மண்ணில் தோன்றும் பூஞ்சையால் ஏற்படுகிறது. பெரும்பாலும் தாவரங்கள் மண்ணின் மூலமாக பாதிக்கப்படும். அங்கு செயலற்ற நிலையில் நோய்க்கிருமி 20 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடும். நோயின் தாக்கம் மண்ணில் வளரும் பூஞ்சைகளின் எண்ணிக்கையோடு வலுவான தொடர்புடையது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால், இந்த நோய் கிருமியை அழிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. வெங்காய இன செடி வகையின் வேர்கள், இந்த பூஞ்சையின் வாழ்க்கை சுழற்சி மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமானது. குளிர்ந்த (10-24 டிகிரி செல்சியஸ்) மற்றும் ஈரமான மணல் இந்த நோய் ஏற்படுவதற்கு மிகவும் ஏற்புடையது. மேலும் இது நிலத்தடி பூஞ்சை வலைப்பின்னல், வெள்ள நீர், கருவிகள் மற்றும் தாவர பொருள் மூலம் பரவக்கூடியது. வெள்ளை அழுகல் நோய் வெங்காய தாவரத்தை அச்சுறுத்தும் முக்கிய நோய்களில் ஒன்றாகும் மற்றும் இது மிகப்பெரிய விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். பிற வயல்களில் பணியை துவங்கும் முன் கருவிகள் மற்றும் உபகரணங்களை தொற்று நீக்கவும்.


தடுப்பு முறைகள்

  • குறைவாக பாதிக்கப்படக்கூடிய தாவர வகைகளை நடவும்.
  • உதாரணமாக, சிகப்பு வெங்காயம்.
  • சான்றளிக்கப்பட்ட மூலத்திலிருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான விதைகள் அல்லது நடவு பொருட்களை பயன்படுத்துங்கள்.
  • நடவு செய்வதற்கு முன்னர் பூஞ்சையின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என குமிழ்களின் அடிப்பாகத்தை சோதிக்கவும்.
  • சான்றளிக்கப்பட்ட நடவுப் பொருள் கிடைக்கப்பெறவில்லை என்றால், குமிழ் தண்டுகளுக்கு பதிலாக விதைகள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  • நோய் பரவல் இயந்திரமாக நீர் தேங்கி நிற்பதை தவிர்க்க நல்ல வடிகால்களை உறுதி செய்யவும்.
  • தழைச்சத்து அதிகமாக இருக்கும் உரங்களை தவிர்க்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தவறாமல் தாவரங்கள் அல்லது வயல்களை சரிபார்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அவற்றை எரித்து அழித்து விடவும்.
  • நோய் பரவுவதை மேலும் தவிர்க்க, பாதிக்கப்பட்ட தாவரங்களை கொண்டு உரம் தயாரிக்காதீர்கள்.
  • பணி மேற்கொள்வதற்கு முன் கவனமாக உபகரணங்கள் மற்றும் கருவிகளை சுத்தம் செய்து அல்லது தொற்று நீக்கவும்.
  • புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • ஆழமாக மண்ணை தோண்டி, சூரிய வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க