Ustilago maydis
பூஞ்சைக்காளான்
தாவரங்களின் அனைத்து வளரும் பாகங்களும் இந்தப் பூஞ்சையால் பாதிக்கப்படக்கூடும். இவற்றை காயங்களுக்கு உட்படுத்துதல் மற்றும் வளர்ச்சித் திறன், இவற்றை மிகவும் வியத்தகு அறிகுறிகளைக் காண்பிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. நாற்று நிலையில் இருக்கும் தாவரங்கள் நோய்த் தொற்றுகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சந்தர்ப்பங்களில், தாவரங்களின் வளர்ச்சி குன்றி மற்றும் இவை மஞ்சரிகள் அல்லது சோளக்காதுகளை உற்பத்தி செய்யாது. முதிர்ந்த தாவரங்களில், நோய்த் தொற்றானது கட்டி போன்ற வளர்ச்சி உருவாவதற்கு வழி வகுக்கிறது, இது புரவலன் மற்றும் பூஞ்சை திசுக்களின் கலவையாகும். கரிப்பூட்டை பைகள் ஆரம்ப கட்டங்களில் பச்சை வெள்ளை நிறத்திலும் மற்றும் முதிர்ச்சியடைகையில், கருப்பு நிறமாகவும் மாறும். இவை சோளக்காதுகளில் குறிப்பாக சிறப்பியல்புடையவை, இதில் உள்ள ஒவ்வொரு தானியங்களும் அதன் சொந்த பை போன்றவற்றை உருவாக்கும். அவை உடையும்போது, அவற்றுள் தூளான கருப்பு உள்ளடக்கங்கள் காணப்படும். இலைகளில், கட்டி போன்ற வளர்ச்சியானது பொதுவாகச் சிறியதாக இருக்கிறது, மற்றும் இவை உடையாமலேயே உலர்ந்து விடுகிறது.
பூஞ்சையின் நேரடிக் கட்டுப்பாடு கடினமானது மற்றும் இந்த நோய்க்கிருமி பூஞ்சைக்கு எதிராக எந்தவொரு பயனுள்ள முறையும் இதுவரை உருவாக்கப்படவில்லை.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக் கொல்லிகளின் விதை மற்றும் இலைத்திரள் பயன்பாடு மக்காச் சோளத்தில் பொதுப்படையான கரிப்பூட்டை நோய்த்தொற்று ஏற்படுவதைக் குறைக்காது.
மக்காச் சோளத்தின் பொதுப்படையான கரிப்பூட்டை நோயானது உஸ்டிலாகோ மேடிஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது பல ஆண்டுகளுக்கு மண்ணில் உயிர் வாழக் கூடியது. காற்று, மணல் தூசு மற்றும் மழைத்துளிகள் மூலம் வித்துக்கள் தாவரங்களுக்குப் பரவுகிறது. பூச்சிகள், விலங்குகள், மோசமான சாகுபடி நடைமுறைகள் அல்லது ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் ஏற்படுகின்ற காயங்கள் நோய்த்தொற்றுச் செயல்முறைக்கு ஆதரவாக உள்ளது. ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரங்களுக்குப் பரவும் நேரடியான இரண்டாம் நிலை பரிமாற்ற காரணிகள் எதுவும் இல்லை. இந்த நோய்க்கான அறிகுறிகள் குறிப்பாக அதிக வளர்ச்சி திறன் (சோளக்காதுகள் அல்லது வளரும் நுனிகள் போன்ற) கொண்ட திசுக்களில் கடுமையாக இருக்கும். வானிலையின் இரு எதிர் துருவங்களால் (கடுமையான மழையைத் தொடர்ந்த வறட்சி போன்றவை) ஏற்படும் குறைவான மகரந்த உற்பத்தி மற்றும் மோசமான மகரந்தச் சேர்க்கை விகிதங்கள் போன்றவை பூஞ்சை பரவுவதற்கு உகந்ததாக உள்ளன.

Put your product in front of farmers the moment they diagnose மக்காச்சோளம் கரிப்பூட்டை நோய் — right when they need a solution.
Explore
Explore the live agronomic data that powers Plantix disease pages.
Discover