Podosphaera aphanis
பூஞ்சைக்காளான்
இலைகள் ஓரங்களை நோக்கி சுருண்டிருக்கும், இலைகளின் அடிப்புறத்தில் வெள்ளை நிறம் கொண்ட பூஞ்சை திட்டுக்கள் சூழ்ந்திருக்கும். இந்த திட்டுக்கள் ஒன்றுசேர்ந்து இலையின் அடிப்புறம் முழுவதையும் ஆக்கிரமிக்கும். ஊதா மற்றும் சிவப்பு நிற சிதைவுகள் மற்றும் கருப்பு புள்ளிகள் இலையின் இருபுறங்களிலும் காணப்படும். பாதிக்கப்பட்ட பூக்கள் உருமாற்றம் பெற்ற கனிகளை உற்பத்தி செய்யும் அல்லது கனிகளற்ற நிலையினை உருவாக்கும். அதிகப்படியான பாதிப்பிற்குட்பட்ட ஸ்ட்ராபெர்ரியில் மந்தமான தோற்றம் தென்படும், அவை வறண்ட, வெடித்த மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் துருவேற்றம் பெற்றது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும். இலைகளின் பிசிர் போன்ற தன்மையினால் பூஞ்சைகள் இருப்பதை சிலவேளைகளில் அடையாளம் காண இயலாது. இதற்கு பூதக் கண்ணாடியினைப் பயன்படுத்தி பார்க்கலாம். கடுமையான நோய்த்தொற்று ஒளிச்சேர்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தி, அதனைக் குறைக்கும், இதனால் முழுப் பயிரின் வீரியமும் குறைந்து, கனி உற்பத்தி மற்றும் அதன் தரம் பாதிக்கப்படும்.
இயற்கையான பூஞ்சைக் கொல்லியான பால்-நீர் கரைசலை இலைகளில் தெளித்து அவற்றினைக் கழுவி குறைந்தளவில் பரவியிருக்கும் நோய்தொற்றினைக் குறைக்கலாம். ஒவ்வொரு இரண்டாம் நாளும் இந்த கரைசலை இலைகளின் மீது பயன்படுத்தவும். சிலிக்கான் ஊட்டச்சத்து கொண்ட தெளிப்பான்களை பயன்படுத்துவதும் பூஞ்சைகளின் எண்ணிக்கையினைக் குறைக்கும். சான்றளிக்கப்பட்ட கரிம கந்தக கரைசல்களை பாதுகாப்புக் காரணியாக பயன்படுத்தலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். குயினோஃக்ஸிஃபென், டிரைஃப்லுமிஸோல், மைக்லோபுடனில், மைக்ரோனைஸ்ட் சல்ஃபர் அல்லது அஸாஃக்ஸிஸ்ட்ரோபிம் போன்றவை அடங்கிய பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த பூஞ்சைக்கொல்லிகளுக்கான எதிர்ப்பு திறன் உருவாகுதல் இந்த சாம்பல் நோயின் பிரச்சினையாகும். கந்தகத்தினை பாதுகாப்பு பொருளாக பயன்படுத்தலாம்.
போரோஸ்பெரா அபனிஸ் எனும் நோய்க்காரணிகளினால் இந்நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது குளிர்காலம் முழுவதும் பிற மாற்று புரவலன்கள் அல்லது பாதிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி இலைகளில் செயலற்ற நிலையில் இருக்கும். பாதிக்கப்பட்ட நாற்றுகளை விளைநிலங்களில் நடுவதாலும் இப்பாதிப்பு ஏற்படும். சாதகமான சூழ்நிலைகளில், பூஞ்சைகள் வளர் தொடங்கி, வித்துக்களை உருவாக்கும். இந்த வித்துக்கள் காற்றின் மூலம் பிற ஆரோக்கியமான பயிர்களுக்கு பரவும். காற்று சூழல்கள், நடுத்தரம் முதல் அதிக ஈரப்பதம், உலர்ந்த இலை மேற்பரப்பு மற்றும் 15-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை போன்றவை இதன் வாழ்க்கைச் சுழற்சிக்கு ஏதுவாக அமையும். பூஞ்சை நோய்க்காரணிகளின் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, தொற்று மற்றும் முளைக்கும் செயல்முறைக்கு ஓடும் நீர் தேவையில்லை. அதிக ஈரப்பதத்துடன் கூடிய சூடான வெப்பநிலை சூழல்கள், தூள் போன்ற வளர்ச்சி கனிகளில் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலாகும். மேல்நிலை நீர்ப்பாசனம், மழை மற்றும் பனி போன்றவை நோயின் வளர்ச்சி மற்றும் பரவலை தடுக்கின்றன, எனவே இவை கண்ணாடிக்கூடிகள் மற்றும் உயர் மலையடி பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

This page is powered by millions of live Plantix diagnoses. See where ஸ்ட்ராபெர்ரியின் சாம்பல் நோய் is spreading — district by district — with Crop Insights, part of Plantix Intelligence.