கத்திரிக்காய்

சாம்பல் நோய்

Erysiphaceae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், தண்டுகள் மற்றும் சில நேரங்களில் பழங்கள் மீது வெள்ளை நிறப் புள்ளிகள்.
  • இலைகளின் மேற்பரப்பு மற்றும் அடிப்பரப்பில் வெள்ளைப்படுதல்.
  • குன்றிய வளர்ச்சி.
  • இலைகள் சுருங்கி, உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

34 பயிர்கள்
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
விதையவரை
பாகற்காய்
மேலும்

கத்திரிக்காய்

அறிகுறிகள்

இலைகள், தண்டுகள் மற்றும் சில சமயங்களில் கனிகளில் கூட வட்டமான, வெள்ளை நிறப்புள்ளிகள் தோன்றுவது இந்நோயின் ஆரம்பகால அறிகுறியாகும். வழக்கமாக இவை இலைகளின் மேற்பரப்பில் பாதிப்பினை உருவாக்கும் பின்னர் அடிப்புறத்திற்கு பரவத் தொடங்கும். ஒளிச்சேர்க்கையினை இந்தப் பூஞ்சைகள் இடையூறு செய்வதால் இலைகள் மஞ்சள் நிறமாகும். அத்துடன் இலைகள் வறண்டு போதல், திருகுதல், உடைதல் அல்லது சிதைக்கப்பட்ட உருவம் பெறுதல் போன்ற மாறுதல்களுக்கு உள்ளாகும். இதன் பிந்தைய நிலைகளில் மொட்டுக்கள் மற்றும் வளரும் நுனிகள் சிதைந்த தோற்றத்துடன் காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சல்பர், வேப்ப எண்ணெய், கவோலின் அல்லது அஸ்கார்பிக் அமிலம் ஆகியவற்றின் அடிப்படையிலான இலைத்திரள் தெளிப்பான்கள் கடுமையான தொற்றுநோயைத் தடுக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாவு போன்ற சாம்பல் நோயால் பாதிக்கப்படக் கூடிய பயிர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், எந்த ஒரு குறிப்பிட்ட இரசாயன சிகிச்சையையும் பரிந்துரைப்பது கடினம். ஈரமாகக் கூடிய சல்பர் (3கி/லி), ஹெக்ஸ்சாகொனாஸோல், மைக்ளோபூட்டனில் (அனைத்தும் 2 மிலி/லி) போன்றவகளை அடிப்படையாக கொண்ட பூஞ்சைக் கொல்லிகள், சில பயிர்களில் பூஞ்சை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

இலை மொட்டுகள் மற்றும் பிற தாவர சிதைவுகளுக்கு உள்ளே பூஞ்சை வித்துக்கள் குளிர் காலத்தைச் சமாளித்து வாழ்கின்றன. காற்று, நீர் மற்றும் பூச்சிகள், அருகிலுள்ள தாவரங்களுக்கு இந்த வித்துக்களைப் பரப்புகின்றன. பூஞ்சை காளானாக இருந்தாலும், இந்த மாவு போன்ற சாம்பல் நோய், பொதுவாக உலர்ந்த நிலையிலும் உருவாகலாம். இது 10-12° செல்சியஸ் வெப்பநிலையில் உயிர் வாழ்கிறது, ஆனால் உகந்த நிலைகள் 30 ° செல்சியஸில் காணப்படுகின்றன. அடிச்சாம்பல் நோய்க்கு மாறாக, சிறிய அளவிலான மழையும், வழக்கமான காலைப் பனியும் மாவு போன்ற சாம்பல் நோய் பரவுவதை துரிதப்படுத்துகிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி உள்ள அல்லது சகிப்புத் தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நல்ல காற்றோட்டத்தைக் கொடுக்கும் வகையில், போதுமான இடைவெளிவிட்டு பயிர்களை நடவும்.
  • நோய் அல்லது நோய்ப்பூச்சி ஏற்படுவதை கண்காணிக்க வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • முதல் புள்ளிகள் தோன்றும்போதே பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றிவிடவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை தொட்ட பிறகு ஆரோக்கியமான தாவரங்களை தொடாதீர்கள்.
  • அடர்ந்த தழைக்கூளத்தின் அடுக்குகள், நிலத்திலிருந்து இலைகளுக்கு வித்துக்கள் பரவுவதைத் தடுக்கும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்வதை பயிற்சி செய்யவும்.
  • சீரான ஊட்டச்சத்து வழங்கும் உரங்களை இடவும்.
  • தீவிர வெப்பநிலை மாற்றங்களைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப்பின் நன்கு உழுது தாவர குப்பைகளை மண்ணில் ஆழமாக புதைக்கவும் அல்லது அறுவடைக்குப்பின் தாவர குப்பைகளை அகற்றி விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க