அரிசி

அரிசியில் உப்பாத்தா நோய்

Balansia oryzae-sativae

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் மீது தானியங்களின் உருக்குலைவு.
  • மேல்புற இலைகள் மற்றும் இலை உறைகள் வெள்ளை நிறப் பூஞ்சைகளினால் சூழப்பட்டு வெள்ளி போன்ற தோற்றத்துடன் காணப்படும்.
  • குன்றிய தாவர வளர்ச்சி.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

கதிர்கள் வளரத் தொடங்கும்போது நோய் அறிகுறிகள் தென்படும். நோய் தொற்றுக்கள் முறையாக பக்கக் கன்றுகளையும் சேர்த்து பாதிக்கும். பாதிக்கப்பட்ட பயிர்களின் வளர்ச்சி குன்றும் மற்றும் இதனை வெள்ளைப் பூஞ்சைகள் கதிர்களின் கிளைகளில் சேர்த்திருப்பதைக் கொண்டு அறியலாம். கதிர்கள் தனியாக, நேராக, அசிங்கமான நிறங்களுடன், உருளை வடிவக் கம்பிகள் உறைகளில் இருந்து வெளிவந்தது போன்ற தோற்றத்துடன் காணப்படும். மேல்புற இலைகள் மற்றும் இலை உறைகளும் கூட சிதைந்து வெள்ளி போன்ற தோற்றத்துடன் இருக்கும்.வெள்ளை மைசீலியம் நரம்புகள் நெடுகிலும் குறுகிய கோடுகளை உருவாக்கும். பாதிக்கப்பட்ட பயிர்காதுகளில் எவ்வித தானியங்களும் உருவாகாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைகளை 50-54 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் சூடான நீர் கொண்டு சிகிச்சையினை 10 நிமிடங்கள் செய்துவிட்டு, பின்னர் அந்த விதைகளை விதைத்தால் நோய் கட்டுப்படுத்தப்படும். விதைகளில் உள்ள நுண்ணுயிரி நோய்க்காரணிகளை அழிக்க சூரிய சிகிச்சையினையைப் பயன்படுத்துவது சிறந்த பயனைத் தரும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கேப்டான் அல்லது திரம் துணையுடன் விதை சிகிச்சை செய்யலாம். ஆரியோஃபங்கின் (பூஞ்சைக்கொல்லி - நோய் எதிர்ப்பு பொருள்), இப்ரோபென்ஃபோஸ் மற்றும் மான்கோஸெப் போன்றவற்றின் மாறுபட்ட கலவைகள், நோய் பாதிப்பு அளவினைக் குறைப்பதுடன் சில சமயங்களில் பல வகையான அரிசி பயிர்களில் மகசூலையும் அதிகரிக்கும். திரம் மட்டும் அல்லது அதனைத் தொடர்ந்து பிற பூஞ்சை கொல்லிகளை பயன்படுத்தி மண் சிகிச்சை செய்வது, விதை சிகிச்சை செய்வதை விட சிறந்த பலனைக் கொடுக்கும், அத்துடன் மகசூலையும் அதிகரிக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

தென்னிந்தியாவின் அதிகமான அளவில் பாதிக்கக்கூடிய நோய்களுள் இதுவும் ஒன்று. வெகு சீக்கிரமாகவே விதைத்தல் அல்லது வெகு தாமதமாக விதைத்தல் போன்றவற்றில் இதன் பாதிப்பு குறைவாக இருக்கும். பயிரிடலுக்கு முன்னர் நிலத்தில் மற்றும் நிலத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விதைகள் அல்லது நெற்பயிரின் இலைகள், பிற புரவலன்கள் போன்றவற்றில் நோய்க்கான பூஞ்சைகள் காணப்படும்.அறுவடைக்குப்பின் பயிர்க் கழிவுகளில் வாழும் பூஞ்சை வித்துக்கள் காற்று அல்லது தண்ணீர் மூலம் பிற இடங்களுக்குப் பரவுகிறது.இந்த பூஞ்சைகளானது, இஸாச்னே எலெகன்ஸ், சியனடன் டாக்டைலான், பென்னிசெடம் எஸ்பி மற்றும் எரக்ரோஸ்டிஸ் டெனுயிஃபோலியா போன்ற புல்களை இணையான புரவலன்களாகக் கொண்டுள்ளது. சூடான வெப்பநிலை மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் பூஞ்சைகள் பரவ ஏதுவான சூழ்நிலைகளாகும். நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளில், பயிரிடுதல் மற்றும் நாற்றுக்களின் வளர்ச்சி நிலைகள் மிக அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. இருப்பினும், கதிர்கள் உருவாகத் தொடங்கும்போதே அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.


தடுப்பு முறைகள்

  • நோயற்ற விதைகள் மற்றும் எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளை உபயோகிக்கவும்.
  • நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலங்களில் இருந்து கிடைக்கும் விதைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • நோயால் பாதிக்கப்பட்ட கதிர்களைக் கண்காணித்து அவற்றினை நிலத்தில் இருந்து நீக்கிவிடவும்.
  • பருவத்திற்கு முன்னதாக அல்லது பின்னதாக பயிரிடவும்.
  • நிலத்தில் அல்லது அதனை சுற்றியிருக்கும் பகுதியில் உள்ள சாத்தியமான இணை புரவலன்களை அகற்றிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க