குடைமிளகாய் & மிளகாய்

மிளகின் கருகல் நோய்

Phytophthora capsici

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • நாற்றுகள் அழுகிய நிலைக்கு மாறும்.
  • தண்டுகளில் கருப்பு அல்லது பழுப்பு நிற சிதைவுகள் காணப்படும்.
  • அனைத்து தாவர பாகங்களும் பாதிக்கப்படும்.
  • வேர்கள் அடர் பழுப்பு நிறமாகவும், மென்மையாகவும் மாறும்.
  • அடர் பச்சை முதல் பழுப்பு நிற நீர் தோய்த்த புள்ளிகள் இலைகள் மற்றும் பழங்களில் காணப்படும்.
  • தாவரங்கள் வாடிப்போகும் மற்றும் அவற்றின் வளர்ச்சி குன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்


குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

உலர் பகுதிகளில், செடியின் வேர் மற்றும் மேல்பகுதியில் நோய்த்தொற்றுகள் தெளிவாக காணக்கூடிய நிலையில் இருக்கும். வித்தியாசமான கருப்பு அல்லது பழுப்பு நிற சிதைவுகள் மண்ணில் அருகே இருக்கும் தண்டு பகுதியில் தோன்றும். அதிக ஈரப்பதமான காலநிலையில் செடியின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட வேர்கள் கரும் பழுப்பு நிறத்துடன், சற்று கூழ் போன்று சதைப்பற்றுடன் காணப்படும். அத்துடன் நாற்று அழுகலும் ஏற்படும். இலைகள் மற்றும் காய்களில் கரும்பச்சை நிறத்தில் நீர் தோய்த்த புள்ளிகள் காணப்படும். முதிர்ந்த தாவரங்களில் மேல்பகுதி அழுகிய நிலையில் அறிகுறிகளாகத் தென்படும். கரும்பழுப்பு சிதைவுகள் தண்டுகளைப் பாதித்து பின் செடியின் அழிவிற்கு வழிவகுக்கும். அறுவடைக்குப் பின்னர் அல்லது சேமிப்பு காலத்தில் பழங்கள் அழுகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

புர்கோல்டெரியா செபசிய (எம்பிசி -7) எனும் பாக்டீரியா நோயினை உருவாக்கும் பைடோப்தோரா கேப்சிசி நுண்ணியிரிக்கு எதிராக எதிர்வினை விளைவுகளை கொடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். மெஃபெனோஃக்ஸம் கலந்த பொருட்களை பயிர்களை நடும்போது தெளிப்பானாக பயன்படுத்தலாம். இவற்றை இரு வாரங்களுக்கு பிறகு நிலையான காப்பர் பூஞ்சை கொல்லிகளுடன் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் இலைதொகுதிகள் உருவாகும் நிலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை தடுக்க முடியும். மேல்பகுதியில் பாதிப்புகள் தோன்ற துவங்கிய பின்னர், பழங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மெஃபெனோஃக்ஸை சொட்டுநீர் பாசனத்தில் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பைடோப்தோரா கேப்சிசி மண் வழியே பரவும் ஒரு நுண்ணுயிரிதான் நோய்க்குக் காரணம் ஆகும். இவை மோசமான சுற்றுசூழலிலும் கூட உயிர்வாழும் தன்மை கொண்டது. மாற்று புரவலன்களில் உள்ள தாவர கழிவுகள் அல்லது அதே மண்ணில் மூன்று ஆண்டுகள் வரை உயிருடன் வாழக்கூடியது. மேற்புற தண்ணீர் அல்லது நீர் பாசனம் மூலமாக இவை ஓரிடத்தில் இருந்து சிதறக்கூடியது. பைடோப்தோரா கேப்சிசி நுண்ணுயிரி 7 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வளரக்கூடியது. 30 டிகிரி செல்சியஸ் அவற்றிற்கு ஏதுவான வெப்பநிலை ஆகும். உயர்த்தப்பட்ட வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதமான காலநிலை போன்ற சூழலில் நோய் மிக விரைவாக பரவக்கூடியது. குளிர்ச்சியான காலநிலைகள் நோய் பரவுவதை சிறிது குறைக்கும்.


தடுப்பு முறைகள்

  • சாத்தியமானால் மண்ணின் ஹைட்ரோஜென் அயனிச்செறிவை சரிப்பார்த்து, சுண்ணாம்பினை கொண்டு சரிசெய்யவும்.
  • வயலை தயார் செய்யும்போது, மண்ணில் எருவை சேர்க்கவும்.
  • உங்கள் பகுதியில் கிடைக்கப்பெற்றால், எதிர்க்கும் திறன் அல்லது சகிப்பு தன்மை உடைய வகைகளை பயிர் செய்யவும்.
  • அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்ப்பதன் மூலம் மண்ணின் இறுக்கத்தைக் குறைக்கவும்.
  • உகந்த வடிகாலுக்கு குவிமாடம் வடிவில் உயர்த்தப்பட்ட படுக்கைகளைப் பயன்படுத்தவும்.
  • நடவு செய்தபின் தாவரத் தளத்தில் அழுத்தம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • மண்ணின் ஈரப்பதத்தை நிலையானதாக பராமரிக்க பிளாஸ்டிக் தழைக்கூளம் பயன்படுத்தவும்.
  • வயலிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ள களைகள் மற்றும் பிற மாற்று புரவலன்களை அகற்றவும்.
  • தழைசத்துக்களை பிரிவு பயன்பாட்டுடன் சீரான உரமிடுதலை பயன்படுத்தவும்.
  • பகலில் தாவரங்கள் உலர அனுமதிக்கும் வகையில் தவறாமல் மற்றும் காலையில் தண்ணீர் பாய்ச்சவும்.
  • குறிப்பாக, நீரின் தரம், உடைகள் மற்றும் கருவிகளைக் கொண்டு நல்ல கள சுகாதாரத்தை உறுதி செய்யவும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களுடன் 2-3 வருட பயிர் சுழற்சியை செயல்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க