Blossom drop
மற்றவை
தாவரங்கள் பூக்கும், ஆனால் பிறகு பூக்கள் அடிக்கடி வாடிப்போயி உதிர்ந்து விழும். சில நேரங்களில், விழும் முன், பூவின் தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறும்.
கரிமக் கட்டுப்பாடு என்பது முக்கியமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உள்ளடக்கியதாக இருக்கிறது. உங்கள் கரிமத் தயாரிப்புகளுக்குத் தாவர வளர்ச்சி சீராக்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். அப்படியானால், இரசாயனக் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டுதல்களைப் படிக்கவும்.
GA3 அல்லது NAA போன்ற சிறப்புத் தெளிப்புகளைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கண்ணாடிக்கூடி தாவரங்களில் அதிக பூக்களைப் பரமரிக்கலாம். அறிவுறுத்தல்களில் சொல்லப்பட்டிருப்பது போல், சரியான நேரத்தில் பூக்களில் தெளிப்பது முக்கியம். இந்தத் தெளிப்புகள் எப்போதும் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் பல்வேறு விஷயங்கள் பூப்பதை பாதிக்கலாம். இது எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வாகாது.
மகரந்தச் சேர்க்கை மற்றும் தாவர ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் காரணிகளால் அல்லது மகரந்தச் சேர்க்கையாளர்கள் இல்லாத காரணத்தால் பூ உதிர்வு ஏற்படலாம். பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு உகந்ததாக இல்லாத குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை, அதே போல் குறைந்த மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. அதிகப்படியான நைட்ரஜன் பூக்களுக்குப் பதிலாக இலைகள் வளருவதற்கு ஊக்குவிக்கிறது, இது மோசமான பழ வளர்ச்சிக்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் குறைவான நைட்ரஜன் ஆனது பழங்களை ஆதரிக்க முடியாத அளவிற்கு பலவீனமான கொடிகளை உருவாக்குகிறது. போதுமான அளவு நீர் இல்லாமை தாவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், மேலும் அதிகப்படியான நீர் அவற்றின் வேர்களை திணறடித்து பூக்களை வீழ்ச்சியடையச் செய்யும். இலைப்பேன்கள் மற்றும் பூச்சிகள் தாவர திசுக்களை சேதப்படுத்தும், இதனால் பூக்கள் உதிரும், மேலும் பூஞ்சை நோய்கள் தாவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், இது பூக்கள் உதிர்வதற்கு வழிவகுக்கும்.