சோயாமொச்சை

கந்தக (சல்பர்) பற்றாக்குறை

Sulfur Deficiency

குறைப்பாடு

சுருக்கமாக

  • இளம் இலைகள் பாதிப்படையும்.
  • இலைகளின் அளவு குறையும்.
  • இலைகளின் நிறம் மாறும் : வெளிறிய பச்சை - மஞ்சள் கலந்த பச்சை - மஞ்சள்.
  • ஊதா நிறத்தில் மெல்லிசான தண்டுப் பகுதி காணப்படும்.
  • வளர்ச்சி குன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்

58 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
சீமைவாதுழைப்பழம்
வாழைப் பழம்
மேலும்

சோயாமொச்சை

அறிகுறிகள்

கந்தகப் பற்றாக்குறையான இலைகள் முதலில் பெரும்பாலும் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும், பின்னர் மஞ்சள் - பச்சை நிறம் முதல் மஞ்சள் நிறமாக மாறும், பெரும்பாலும் ஊதா நிற தண்டுகளுடன் காணப்படும். இந்த பண்புகள் நைட்ரஜன் குறைபாடுள்ள தாவரங்களில் காணப்படுவதைப் போலவே இருக்கும், இவற்றால் எளிதில் குழப்பமடையக்கூடும். கந்தக பற்றாக்குறையை பொறுத்த வரையில், அவை புதிய மேற்புற இலைகளில் முதலில் காணப்படுகின்றன. சில பயிர்களில், இவற்றுக்குப் பதிலாக நரம்புகளுக்கு இடையேயான பச்சையசோகை அல்லது இலை பரப்புகளில் புள்ளிகள் (கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு) ஆகியவற்றைக் காணலாம். இலைகள் வழக்கமாக சிறியதாகவும் மற்றும் குறுகலாகவும் வளரும் மற்றும் நுனிகளும் சிதைந்து காணப்படும். வயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூரத்தில் இருந்து பார்க்கும்போது வெளிர் பச்சை அல்லது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் காணப்படும். குன்றிய நீள்வட்ட வளர்ச்சியுடன், தண்டுகள் மெல்லிசாக வளரும். பருவ காலத்தின் ஆரம்பத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால், தாவரங்களின் குன்றிய வளர்ச்சி, பூக்கள் பூப்பதில் குறைபாடு மற்றும் பழங்கள் / தானியங்களின் தாமதமான முதிர்ச்சி ஆகியவை ஏற்படும். நடவு செய்த பிறகு, கந்தகம் குறைபாடுள்ள மண்ணில் வளரும் நாற்றங்கால் இயல்பானதை விட அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டிருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விலங்குகளின் உரம் மற்றும் இலைகள் அல்லது தழைக்கூளங்களின் கலவை கலப்பு உரக் கலவை, தாவரங்களுக்கு கரிம பொருட்கள் மற்றும் கந்தகம் மற்றும் போரான் போன்ற ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் வழங்குகிறது. இது கந்தக குறைபாட்டை சரிசெய்ய பயன்படுத்தப்படும் நீண்ட கால அணுகுமுறை ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

  • கந்தகம் கலந்த உரங்களைப் பயன்படுத்தவும்.
  • உதாரணம் : கந்தகம் 90% WDG இலை வழித் தெளிப்பான்கள்
  • உங்கள் நிலத்தின் மண் மற்றும் பயிருக்குத் தகுந்தாற்போன்ற சிறந்த பொருளைக் கண்டறிய உங்கள் விவசாய அறிவுரையாளரிடம் ஆலோசனை பெறவும்.

பிற பரிந்துரைகள்:

  • உங்கள் பயிர்களின் மகசூலை அதிகம் பெற பயிரிடும் பருவத்திற்கு முன்பு நிலத்தில் மண் பரிசோதனை செய்யவும்.
  • நடவுக்கு முன்பு கந்தகம் பயன்படுத்துவது சிறந்தது. -உங்கள் மண்ணின் pH அளவு அதிகமாக இருப்பின், சிட்ரிக் அமிலத்தினை பயன்படுத்தவும், இது கந்தகத்தினை உட்கொள்ள பயிர்களுக்கு உதவும்.

இது எதனால் ஏற்படுகிறது

கந்தக பற்றாக்குறை குறிப்பாக இயற்கையாகவோ அல்லது வேளாண்மைகளிலோ பொதுவானது அல்ல. கந்தகம் மண்ணில் நகரக்கூடியது, ஆதலால் அவை நீரோட்டம் மூலம் கீழ் நோக்கி கசிந்துவிடக்கூடும். இவை குறைந்த கரிம பொருட்கள், அதிக வானிலையில் இருக்கும் மணல்கள், இலேசான மணல் அல்லது அதிக pH கொண்ட மணல்களுடன் ஏன் குறைபாடு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. மண்ணில் உள்ள பெரும்பாலான கந்தகம், மண்ணின் கரிமப் பொருளில் உள்ளது அல்லது களிமண் கனிமங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும். மண்ணில் உள்ள கந்தகத்தை பாக்டீரியாக்கள் தாவரங்களுக்கு கிடைக்கச் செய்யும் செயல்முறை, கனிம மயமாக்கல் என அறியப்படுகின்றன. நுண்ணுயிரிகளின் மேம்பட்ட செயல்பாடு மற்றும் அதிகரித்த எண்ணிக்கையின் காரணமாக இந்த செயல்முறை அதிக வெப்பநிலைகளால் ஆதரிக்கப்படுகிறது. இது தாவரங்களில் நகராது, பழைய இலைகளிலிருந்து இளம் இலைகளுக்கு உடனடியாக செல்லாது. எனவே, குறைபாடுகள் முதலில் இளம் இலைகளில் தோன்றுகின்றன.


தடுப்பு முறைகள்

  • உரங்களைப் பயன்படுத்தி நாற்றாங்கால் விதைப்படுகையில் கந்தகத்தைச் சேர்க்கவும்.
  • முற்றிலும் அகற்றுவதற்கு அல்லது எரிப்பதற்கு பதிலாக மண்ணில் வைக்கோலைச் சேர்க்கவும்.
  • கந்தகம் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்க அறுவடைக்குப் பிறகு உலர் உழவுகளை மேற்கொண்டு மண்ணின் மேலாண்மையை மேம்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க