Dichocrocis punctiferalis
பூச்சி
முட்டைப்புழுக்கள் தளிர்கள் மற்றும் காப்ஸ்யூல்களைத் துளைப்பதன் மூலம் சேதப்படுத்தும், பெரும்பாலும் காப்ஸ்யூல்களை ஒன்றாக வலைகளால் பிண்ணும். அவை உள்ளே கழிவுகளைச் சேர்த்து பட்டு நூலினாலான சுரங்கங்களை உருவாக்குகின்றன. சில நேரங்களில், இலை தண்டுடன் சேரும் இடத்திலோ அல்லது தடித்த இலைகளுக்கு நடுவில் அரிதாகவோ காணப்படும். சேதத்தின் அறிகுறிகளில் சேதமடைந்த தளிர்கள் மற்றும் வலை பிண்ணப்பட்ட காப்ஸ்யூல்கள் ஆகியவை அடங்கும்.
முக்கிய பயிர்களில் உள்ள துளைப்பான்களை திசை திருப்ப பொறி பயிர்களை நடவு செய்யவும். இயற்கை எதிரிகளை அறிமுகப்படுத்தவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இரசாயன சிகிச்சைகள் மூலம் முட்டைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது கடினம், ஏனெனில் அவை பழங்களைத் துளைக்கும். தெளிக்கும்போது, மஞ்சரி உருவான காலத்திலிருந்தும் 20 நாட்களுக்குப் பிறகும் மீண்டும் தொடங்க வேண்டும்.
தண்டுகள், தளிர்கள், மொட்டுகள், பழங்கள் மற்றும் விதைகளில் துளையிடும் முட்டைப்புழுக்களால் சேதம் ஏற்படுகிறது. இந்தச் சேதம் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். பெண் பூச்சிகள் சிறிய, ஓவல் வடிவ, வெளிர் மஞ்சள் நிற முட்டைகளை பழங்கள் அல்லது விதைகளில் அல்லது அதற்கு அருகில் இடும். 6-7 நாட்களுக்குப் பிறகு, முட்டைகள் அடர் பழுப்பு நிறமாக மாறும். பெரிய பூச்சிகள் நடுத்தர அளவில் வெளிர் மஞ்சள் நிற இறக்கைகள் மற்றும் சிறிய கருப்பு நிற புள்ளிகளுடன் இருக்கும். முட்டைப்புழுக்கள் விதைகள், காப்ஸ்யூல்கள் மற்றும் இளம் தளிர்கள் ஆகியவற்றை உண்கின்றன. முழுமையாக வளர்ந்த முட்டைப்புழுக்கள் 24 மிமீ நீளம், இளஞ்சிவப்பு நிறத்துடன் வெளிர் பச்சை நிறத்துடன் மெல்லிய முடிகள், கருமையான தலை மற்றும் கவசத்தைக் கொண்டிருக்கும். இவை தண்டு அல்லது காப்ஸ்யூலில் கூட்டுப்புழுவாகும்.