நிலக்கடலை

நிலக்கடலை இலை சுரங்கப்பூச்சி

Aproaerema modicella

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் மேல் பகுதிகளில் துளைக்கப்பட்ட சிற்றிலைகள்.
  • இலைகளில் சிறிய பழுப்பு நிற கறைகள் அல்லது கொப்புளங்கள் ஏற்படுதல்.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட வயல் தூரத்திலிருந்து பார்க்கும்போது எரிந்தது போன்ற தோற்றம்.
  • மடிக்கப்பட்ட சிற்றிலைகள்.

இதிலும் கூடக் காணப்படும்


நிலக்கடலை

அறிகுறிகள்

இலையின் நடுதிசுக்களை உண்ணுவதால் குடையப்பட்ட சிற்றிலைகள் மற்றும் இலையில் சிறிய பழுப்பு நிற கொப்புளங்கள்/கறைகள் போன்றவை ஏற்படுகின்றன. முட்டைப்புழுக்கள் சிற்றிலைகளை ஒன்றாக இணைத்து அவற்றை உண்ணும், மீதம் அந்த மடிப்புகளுக்குள் இருக்கும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, கடுமையாக தாக்கப்பட்ட வயல்கள் எரிந்ததை போன்று தோற்றமளிக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் உலர்ந்து போகுதல் மற்றும் தாவரங்கள் வாடிப்போகுதல் போன்றவை ஏற்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிலந்திகள், நீண்ட கொம்புகள் கொண்ட வெட்டுக்கிளிகள், பூச்சி தின்னும் பெரும் பூச்சி வகைகள், எறும்புகள், பெண் வண்டுகள், சில்வண்டுகள் போன்றவற்றின் இயற்கையான உயிரி கட்டுப்பாட்டு எண்ணிக்கையைப் பாதுகாக்கவும். இலை சுரங்கப்பூச்சி மீது ஒட்டுண்ணி கோனியோசஸ் இனத்தை மேம்படுத்த நிலக்கடலையுடன் பென்னிசெட்டம் குலௌகம் என்பவற்றை ஊடு பயிர் செய்யவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நாற்று முளைத்த 30 நாட்களுக்குப் பிறகு (டி.ஏ.ஈ) ஒரு தாவரத்திற்கு 5 முட்டைப்புழுக்கள் இருக்கும்போது அல்லது பூக்கும் நிலையில் ஒரு தாவரத்திற்கு 5 முட்டைப்புழுக்கள் இருக்கும்போது அல்லது காய் நிரப்பப்படும் நிலையில் ஒரு தாவரத்திற்கு 15 முட்டைப்புழுக்கள் இருப்பது கவனிக்கப்படும்போது மட்டுமே இரசாயன தெளிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பூச்சியின் எண்ணிக்கை பொருளாதார வரம்பு மட்டத்திற்கு மேல் இருந்தால், விதைத்த 30-45 நாட்களுக்கு இடையில் டைமேதோயேட் 200-250 மில்லி /ஹெக்டேர் (குளோர்பைரிஃபோஸ் @ 2.5 மிலி / லி அல்லது அசெபேட் @ 1.5 கிராம் /லி) அல்லது ப்ரெஃபெனோபோஸ் 20 ஈ.சி. @ 2 மில்லி / லி என்ற அளவில் இரசாயன தெளிப்பை பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

நிலக்கடலை பயிருக்கு ஏற்படும் சேதமானது இலை சுரங்க முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இலை சுரங்க பூச்சியின் முட்டைகள் பளபளப்பான வெள்ளை நிறமாகவும், சிற்றிலைகளின் கீழ் பக்கத்தில் தனித்தனியாகவும் இடப்படுகின்றன, அதே நேரத்தில் முட்டைப்புழுக்கள் வெளிர் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் அடர் நிற தலை மற்றும் முன் நெஞ்சுப்பகுதியை கொண்டிருக்கும். முதிர்ந்த இலை சுரங்கப் பூச்சி ஒரு சிறிய அந்துப்பூச்சி ஆகும், இது சுமார் 6 மிமீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகள் பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். முதிர்ந்த பூச்சியின் ஒவ்வொரு முன் இறக்கையிலும் வெள்ளை நிற புள்ளிகள் உள்ளன. முட்டைப்புழுக்கள் இலைகளை துளையிட்டு சிற்றிலைகளுக்குள் உண்ணுகின்றன. இவை 5-6 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து வெளியே வந்து பக்கத்து இலைகளுக்கு இடம்பெயர்ந்து வலை பின்னப்பட்ட இலைகளை உண்டு, கூட்டுப்புழுவாகின்றன. இலையில் குடைந்த பகுதிகள் வறண்டு போகின்றன. இலை சுரங்க பூச்சிகள் மழை மற்றும் பிந்தைய மழைக்காலங்களில் செயல்பாட்டில் உள்ளன, மேலும் பயிர் இழப்புகள் 25% முதல் 75% வரை மாறுபடும்.


தடுப்பு முறைகள்

  • ஐசிஜிவி 87160 மற்றும் என்சிஏசி 17090 போன்ற எதிர்ப்பு வகைகளைப் பயன்படுத்துங்கள், இவை அதிக இலை சுரங்க பூச்சிகள் தாக்கும் பகுதிகளில் சிறந்த விளைச்சலைக் கொடுக்கும்.
  • பிந்தைய தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்க சீக்கிரம் நடவு செய்யுங்கள்.
  • கம்பு அல்லது தட்டைப்பயறு போன்ற பொறி பயிர்களை நிலக்கடலையுடன் ஊடுபயிர் செய்யுங்கள்.
  • இரவு நேரங்களில் அந்துப்பூச்சிகளை ஈர்க்கவும், பூச்சிகளின் எண்ணிக்கையை கண்காணிக்கவும் ஒளி பொறிகளைப் பயன்படுத்துங்கள்.
  • பூச்சியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சோயா மொச்சை போன்ற மாற்று புரவலன்களையும் லூசர்ன் (குதிரைமசால்), அமராந்தஸ், பெர்சீம் (புரதப்புல்) மற்றும் இண்டிகோஃபெரா ஹிர்சுட்டா போன்ற களைகளையும் அகற்றவும்.
  • அரிசி வைக்கோலுடனான தழைக்கூளமிடுங்கள், இது இலை சுரங்க பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கிறது.
  • மக்காச்சோளம், பருத்தி, சோளம் போன்ற பயிர்களுடன் பயிர் சுழற்சியைப் பயிற்சி செய்யுங்கள், இது சிறந்த விளைச்சலைக் கொடுக்கும் மற்றும் இலை சுரங்க பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க