Aproaerema modicella
பூச்சி
இலையின் நடுதிசுக்களை உண்ணுவதால் குடையப்பட்ட சிற்றிலைகள் மற்றும் இலையில் சிறிய பழுப்பு நிற கொப்புளங்கள்/கறைகள் போன்றவை ஏற்படுகின்றன. முட்டைப்புழுக்கள் சிற்றிலைகளை ஒன்றாக இணைத்து அவற்றை உண்ணும், மீதம் அந்த மடிப்புகளுக்குள் இருக்கும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, கடுமையாக தாக்கப்பட்ட வயல்கள் எரிந்ததை போன்று தோற்றமளிக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் உலர்ந்து போகுதல் மற்றும் தாவரங்கள் வாடிப்போகுதல் போன்றவை ஏற்படுகிறது.
சிலந்திகள், நீண்ட கொம்புகள் கொண்ட வெட்டுக்கிளிகள், பூச்சி தின்னும் பெரும் பூச்சி வகைகள், எறும்புகள், பெண் வண்டுகள், சில்வண்டுகள் போன்றவற்றின் இயற்கையான உயிரி கட்டுப்பாட்டு எண்ணிக்கையைப் பாதுகாக்கவும். இலை சுரங்கப்பூச்சி மீது ஒட்டுண்ணி கோனியோசஸ் இனத்தை மேம்படுத்த நிலக்கடலையுடன் பென்னிசெட்டம் குலௌகம் என்பவற்றை ஊடு பயிர் செய்யவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நாற்று முளைத்த 30 நாட்களுக்குப் பிறகு (டி.ஏ.ஈ) ஒரு தாவரத்திற்கு 5 முட்டைப்புழுக்கள் இருக்கும்போது அல்லது பூக்கும் நிலையில் ஒரு தாவரத்திற்கு 5 முட்டைப்புழுக்கள் இருக்கும்போது அல்லது காய் நிரப்பப்படும் நிலையில் ஒரு தாவரத்திற்கு 15 முட்டைப்புழுக்கள் இருப்பது கவனிக்கப்படும்போது மட்டுமே இரசாயன தெளிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பூச்சியின் எண்ணிக்கை பொருளாதார வரம்பு மட்டத்திற்கு மேல் இருந்தால், விதைத்த 30-45 நாட்களுக்கு இடையில் டைமேதோயேட் 200-250 மில்லி /ஹெக்டேர் (குளோர்பைரிஃபோஸ் @ 2.5 மிலி / லி அல்லது அசெபேட் @ 1.5 கிராம் /லி) அல்லது ப்ரெஃபெனோபோஸ் 20 ஈ.சி. @ 2 மில்லி / லி என்ற அளவில் இரசாயன தெளிப்பை பயன்படுத்தவும்.
நிலக்கடலை பயிருக்கு ஏற்படும் சேதமானது இலை சுரங்க முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இலை சுரங்க பூச்சியின் முட்டைகள் பளபளப்பான வெள்ளை நிறமாகவும், சிற்றிலைகளின் கீழ் பக்கத்தில் தனித்தனியாகவும் இடப்படுகின்றன, அதே நேரத்தில் முட்டைப்புழுக்கள் வெளிர் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் அடர் நிற தலை மற்றும் முன் நெஞ்சுப்பகுதியை கொண்டிருக்கும். முதிர்ந்த இலை சுரங்கப் பூச்சி ஒரு சிறிய அந்துப்பூச்சி ஆகும், இது சுமார் 6 மிமீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகள் பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். முதிர்ந்த பூச்சியின் ஒவ்வொரு முன் இறக்கையிலும் வெள்ளை நிற புள்ளிகள் உள்ளன. முட்டைப்புழுக்கள் இலைகளை துளையிட்டு சிற்றிலைகளுக்குள் உண்ணுகின்றன. இவை 5-6 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து வெளியே வந்து பக்கத்து இலைகளுக்கு இடம்பெயர்ந்து வலை பின்னப்பட்ட இலைகளை உண்டு, கூட்டுப்புழுவாகின்றன. இலையில் குடைந்த பகுதிகள் வறண்டு போகின்றன. இலை சுரங்க பூச்சிகள் மழை மற்றும் பிந்தைய மழைக்காலங்களில் செயல்பாட்டில் உள்ளன, மேலும் பயிர் இழப்புகள் 25% முதல் 75% வரை மாறுபடும்.

This page is powered by millions of live Plantix diagnoses. Build plant-disease detection like this into your own products with the API Toolkit, part of Plantix Intelligence.