முலாம்பழம்

பஞ்சொழுக்கு நோய்

Pythium aphanidermatum

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழத்தில் பழுப்பு நிறத்தில் மென்மையான அழுகிய பகுதிகள் காணப்படும்.
  • வெள்ளை நிறத்தில், பஞ்சு போன்ற வளர்ச்சியை பழத்தில் காணலாம்.
  • புதிதாக முளைத்த நாற்றுகள் பட்டுப் போவதையும் காணலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

4 பயிர்கள்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்
சீமை சுரைக்காய்

முலாம்பழம்

அறிகுறிகள்

அறிகுறிகள் பழுப்பு நிறப் பகுதிகளாகத் தொடங்குகின்றன, இவை மண்ணில் நேரடியாக படும் பழங்களில் மென்மையான, அழுகிய பகுதிகளாக உருவாகின்றன. ஈரப்பதமான சூழ்நிலைகளில், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற வளர்ச்சி தோன்றும் மற்றும் இது பழத்தின் இந்த அழுகிய பகுதியை மூடிவிடும். நாற்றுப்பண்ணையில், அதே நோய்க்கிருமி இளம் மற்றும் முதிர்ந்த நாற்றுகளை சேதப்படுத்தி, அவை பட்டுப் போவதற்கு வழிவகுக்கும். நோய்க்கிருமி வேர்களை சேதப்படுத்தி அவற்றை அழுகச் செய்யும்: இலைகள் மஞ்சள் நிறமாக மாறும், ஏனெனில் தாவரத்தால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாது. பைத்தியம் என்பதனால் ஏற்படும் பழ அழுகல் நோய் பைட்டோப்தோரா மற்றும் ஸ்க்லெரோடினியா போன்றவற்றினால் ஏற்படும் பழ அழுகலைப் போல தோற்றமளிக்கும். இவற்றை எப்படி வித்தியாசப்படுத்துவது என்றால், நினைவில் கொள்ளுங்கள்: பைத்தியம் பருத்தி அல்லது ஷேவிங் கிரீம் போன்றிருக்கும். பைட்டோப்தோரா மாவு அல்லது தூள் போல் தோற்றமளிக்கும். ஸ்க்லெரோட்டினியா தண்டுகளைப் பாதிக்கும் கருப்பு நிற, கடினமான புள்ளிகளுடன் அடர்த்தியான வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சான்றளிக்கப்பட்ட மற்றும் பொருந்தக்கூடிய உயிரியல் கட்டுப்பாடு எதுவும் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

அறிகுறிகள் தோன்றியவுடன், பாதிக்கப்பட்ட நாற்றுகள் அல்லது பழங்களைச் சேமிக்க முடியாது. தொற்றுநோயைத் தடுக்க, விதைகள் மற்றும் நாற்றுகளுக்கு இரசாயன சிகிச்சையைப் பயன்படுத்துங்கள். நடவு செய்வதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்து, பரிந்துரைக்கப்பட்ட செறிவுக் கரைசலில் நாற்றுகளை நனைத்திடுங்கள். கூடுதலாக, மேற்பரப்பில் மண் சிகிச்சைகளைப் பயன்படுத்திடுங்கள். இந்தச் சிகிச்சைகளின் செயல்திறன், நீர்ப்பாசனம் அல்லது மழையின் மூலம் மண்ணின் மேல் அங்குலத்திற்கு வரும் பூஞ்சைக் கொல்லியைப் பொறுத்தது.

இது எதனால் ஏற்படுகிறது

பஞ்சொழுகு நோயை உண்டாக்கும் நோய்க்கிருமி மண்ணில் வாழ்கிறது! வெப்பமான, ஈரப்பதமான வானிலை இக்கிருமிக்கு ஏற்ற வாநிலையாகும் மற்றும் இது தேங்கி நிற்கும் தண்ணீரை விரும்புகிறது. இது பாசன நீர் மூலம் பரவுகிறது. இது தாவரத்தின் உயிரணுக்களுக்குள் எளிதாக நுழைந்து, தாவரம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சிதைக்கிறது. இலைகளைக் கத்தரிப்பது, கலைவது அல்லது அகற்றுவது ஆகியவற்றால் ஏற்படும் காயங்கள் தாவரங்களை எளிதில் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது, இதனால் நோய்க்கிருமி எளிதில் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • முறையான மண் வடிகாலை உறுதி செய்யுங்கள்.
  • சாத்தியமானால் பாத்திகளை உயர்த்தி, சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்துங்கள்.
  • புற்கள் மற்றும் தானியங்கள் போன்ற புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யுங்கள்.
  • குளிர்ச்சியான நாட்களில் நடவு செய்யுங்கள்.
  • அடர்த்தியான கொடி படர்வைத் தவிர்க்க அகலமான இடைவெளி விட்டு தாவரங்களை நடவு செய்யுங்கள்.
  • பழங்களுக்கும் மண்ணுக்கும் இடையில் தடுப்புகளை உருவாக்குங்கள், இது சிறு விவசாயிகளுக்கு சாத்தியமானதாக இருக்கும்.
  • கம்பி, மரம் அல்லது கொடிகளின் மேல் பழங்களை வைக்கவும்.
  • வறண்ட பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தி பிளாஸ்டிக் தழைக்கூளம் பயன்படுத்துங்கள், ஆனால் மழை பெய்யும் பகுதிகளில் எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அது தண்ணீரைத் தேங்கச் செய்து, அழுகலுக்கு வழிவகுக்கும்.
  • உங்கள் கருவிகள், பானைகள் மற்றும் தட்டுகளை ப்ளீச் கரைசலைக் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள், மேலும் அசுத்தமான மண்ணைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
  • ஈரமான காலநிலையில் அறுவடை செய்யவோ, அறுவடை செய்த பழங்களைப் பேக் செய்யவோ வேண்டாம்.
  • ஆரோக்கியமான தோற்றமுடையவற்றை மட்டுமே அறுவடை செய்து பேக் செய்யுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க