Colletotrichum kahawae
பூஞ்சைக்காளான்
கொட்டைகளில் அடர் நிறத்தில் நீர் தோய்த்த காயங்கள் தென்படும், பின்னர் இதனால் கொட்டைகள் முன்கூட்டியே காய்ந்து, உதிர்ந்துவிடும். இது அவ்வப்போது இலைகளையும் பாதிக்கும். இந்த நோய் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களிலும் பாதிக்கிறது. தொற்றானது பூக்கும் கட்டத்திலிருந்து தொடங்கலாம் ஆனால் அறிகுறிகள் பச்சை மற்றும் பழுத்த கொட்டைகளில் மட்டுமே காணப்படும்.
எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பூக்கும் காலத்தின் தொடக்கத்திலேயே முதல் தெளிப்பைப் பயன்படுத்துங்கள். காப்பர் அடங்கிய பூஞ்சைக் கொல்லிகளை மாதத்திற்கு இருமுறை பாதுகாப்புக்காக தெளிப்பது நோயைக் கட்டுப்படுத்த உதவும். நீங்கள் தடுப்பு சிகிச்சையைப் பயன்படுத்தவில்லை என்றால், ஆரம்ப அறிகுறிகள் தோன்றத் தொடங்கும் போது செயல்படவும்.
கோலேடோட்ரிச்சம் கஹாவே என்ற பூஞ்சையால் இந்நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. இது மழைச் சாரல், காபி பறிப்பவர்கள், பறவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நாற்றுகளின் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இது ஒரு தீவிர நோயாகும், இது விளைச்சலை 80% வரை குறைக்கலாம்.

This page is powered by millions of live Plantix diagnoses. Reach farmers at the exact moment they diagnose காபி கொட்டை நோய் with Demand Creation, part of Plantix Intelligence.