காபி

காபி கொட்டை நோய்

Colletotrichum kahawae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கொட்டைகளின் மேற்புறத்தில் குண்டூசி துளைகள் காணப்படும்.
  • பச்சை கொட்டைகளில் அடர் நிறத்தில் நீர் தோய்த்த காயங்கள் தென்படும்.
  • கொட்டைகள் காய்ந்து, முன்கூட்டியே மரத்திலிருந்து விழும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
காபி

காபி

அறிகுறிகள்

கொட்டைகளில் அடர் நிறத்தில் நீர் தோய்த்த காயங்கள் தென்படும், பின்னர் இதனால் கொட்டைகள் முன்கூட்டியே காய்ந்து, உதிர்ந்துவிடும். இது அவ்வப்போது இலைகளையும் பாதிக்கும். இந்த நோய் தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களிலும் பாதிக்கிறது. தொற்றானது பூக்கும் கட்டத்திலிருந்து தொடங்கலாம் ஆனால் அறிகுறிகள் பச்சை மற்றும் பழுத்த கொட்டைகளில் மட்டுமே காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளை நடவு செய்யவும்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். பூக்கும் காலத்தின் தொடக்கத்திலேயே முதல் தெளிப்பைப் பயன்படுத்துங்கள். காப்பர் அடங்கிய பூஞ்சைக் கொல்லிகளை மாதத்திற்கு இருமுறை பாதுகாப்புக்காக தெளிப்பது நோயைக் கட்டுப்படுத்த உதவும். நீங்கள் தடுப்பு சிகிச்சையைப் பயன்படுத்தவில்லை என்றால், ஆரம்ப அறிகுறிகள் தோன்றத் தொடங்கும் போது செயல்படவும்.

இது எதனால் ஏற்படுகிறது

கோலேடோட்ரிச்சம் கஹாவே என்ற பூஞ்சையால் இந்நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. இது மழைச் சாரல், காபி பறிப்பவர்கள், பறவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நாற்றுகளின் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இது ஒரு தீவிர நோயாகும், இது விளைச்சலை 80% வரை குறைக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • சுத்தமாகவும், சரியான நேரத்திலும் அறுவடை செய்வதை கடைப்பிடிக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட வகைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.
  • பருவம் தாண்டி காய்க்கும் கொட்டைகளையும் கழிவுகளையும் அப்புறப்படுத்தவும்.
  • நோய் பரவாமல் தடுக்க, தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.
  • பழைய தண்டுகளை அகற்றி, நோயுற்ற கொட்டைகளை அப்புறப்படுத்தவும் அல்லது நோயின் ஆதாரங்களைக் குறைக்கவும்.
  • இலைத்திரள்கள் வழியாக காற்றோட்டத்தை அதிகரிக்க காபி மரங்களை சீர்திருத்தம் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க