Didymella fabae
பூஞ்சைக்காளான்
இந்த நோய்க்கான அறிகுறிகள் வேர்கள் தவிர, அனைத்து வளர்ச்சி நிலைகள் மற்றும் அனைத்து தாவர பகுதிகளிலும் தோன்றும். இலைகளில் அடர் பழுப்பு நிற ஓரங்களுடன் தோல் நிற பகுதிகள் காணப்படும். சிதைவுகளின் நடுப்பகுதி பின்னர் சாம்பல் நிறமாக மாறி, சிறிய கரும் புள்ளிகளாக மாறும். இந்த தோற்றம் பிற வகை கருகல் நோயிலிருந்து இந்த நோயை வேறுபடுத்திக்காட்டுகிறது. கடுமையான நோய்த்தொற்று, சிற்றிலைகள் முதிர்ச்சியடைவதற்கு முன்னே கீழே விழுதல் மற்றும் தண்டுகளின் நுனி கருகிப்போகுதல் போன்றவற்றை ஏற்படுத்தும், இவை தாவரங்களுக்கு கருகிப்போனதை போன்று தோற்றத்தை அளிக்கும். இந்த நோயின் மற்றொரு பண்பு, விதைகளின் மேற்பரப்பில் பழுப்பு நிற திட்டுக்களுடனான நிறமாற்றம் ஆகும். அதிகம் பாதிக்கப்பட்ட விதை ஊதா-பழுப்பு நிறத்துடன், சுருங்கி, அளவில் சிறியதாக இருக்கும். விதைகளின் இந்த நிறமாற்றம், அதன் தரம் மற்றும் சந்தை மதிப்பை குறைக்கும்.
இன்றுவரை, இந்த நோய்க்கு எதிராக எந்த உயிரியல் சிகிச்சையும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விதை சிகிச்சைகள் நடவு செய்வதற்கு முன் விதைகளை ஊறவைக்க பயன்படுத்தலாம். இலைவழி பூஞ்சைக்கொல்லிகளும், குறிப்பாக, நோய்பாதிப்பு ஏற்படக்கூடிய தாவர வகைகள் வளர்க்கப்பட்டால், பயனுள்ளதாக இருக்கும். பைராகிளாஸ்டிரோபின் அல்லது குளோரோதலோனில் ஆகியவை பாதுகாப்பு பொருளாக பயன்படுத்தப்படலாம், மேலும் அவற்றை தற்காப்புக்காக பயன்படுத்தும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பூக்கும் காலத்தின் ஆரம்பத்தில் தெளிப்பது, நெற்று மற்றும் விதை நோயைத் தடுக்க உதவும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் டிடிமெல்லா ஃபேபியே என்னும் பூஞ்சை நோய்கிருமியால் ஏற்படுகிறது. இது பல ஆண்டுகளுக்கு, முன்னர் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகள் அல்லது விதைகளில் வாழ கூடியது. பாதிக்கப்பட்ட விதைகள் மோசமான வளர்ச்சியுடன் கூடிய நோயுற்ற நாற்றுகளாக வளர்கின்றன. தரமாக உற்பத்திசெய்யப்பட்ட வித்துக்கள் மற்றும் அதன் கழிவுகள் வினையூக்கங்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன, மேலும் இவை மலைச்சாரல்கள் வழியாக தாவரங்களின் கீழ் பகுதிக்கு பரவுகின்றன. சிதைவுகளில் காணப்படும் இருண்ட புள்ளிகளும் வித்துக்கள் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகள் ஆகும், மேலும் இவை பிற பயிர்களுக்கு மழை வழியாக பரவுகின்றன. அடிக்கடி மழை பொழிவு மற்றும் நீண்ட கால இலைகளின் ஈரப்பதம் (குறிப்பாக வசந்த காலத்தில்) நோய்த்தாக்கம் மற்றும் நோய் வளர்ச்சியை ஆதரிக்கின்றன. பருவக்காலத்தின் பிந்தைய நிலைகளில் ஏற்படும் ஈரப்பதம் நெற்று மற்றும் விதை நோய்க்கான சிறந்த நிலைமைகளை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமாக காணப்படும் விதைகள் அதிக அளவு பூஞ்சைகளைக் கொண்டிருக்கக்கூடும்.