Magnaporthe oryzae
பூஞ்சைக்காளான்
இந்த நோய் முதலில் நீர் தோய்ந்த புண்களாக இலைகளில் தோன்றும், பின்னர் பெரிதாகி சாம்பல் நிற நடுவுடன் சிதைவுகளாக(பழுப்பு நிறம்) மாறும். புண்கள் நீள்வட்டம் அல்லது வைர வடிவில், சுமார் 2.5 மிமீ விட்டத்தினை கொண்டிருக்கும். அவை பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும், இது வளருகையில், சிதைவுகளாக மாறி, ஒரே மையத்தை கொண்ட வளையங்கள் தோற்றத்தைக் கொடுக்கும். தண்டுகளும் பாதிக்கப்படக்கூடும், பொதுவாக இலை உறைகள் கடுமையான பாதிப்பின் போது சரியக்கூடும். முறிவுப்பகுதியால் பாதிக்கப்படும் கதிர்கள் நிலையற்றதாகிவிடுகின்றன, மேலும் அவ்வாறு அது வளருமானால், தானியங்கள் சுருங்கிவிடும். கடுமையான தொற்றுநோய்களில், விரிவான பச்சையசோகை இளம் இலைகளை முன்கூட்டியே வாடி விட செய்யும்.
நாற்றங்காலில் 8-10 நாள் இடைவெளிக்கு ஒரு முறை மற்றும் முக்கிய வயல்வெளியில் 14 நாட்களுக்கு ஒருமுறை போர்டாக்ஸ் கலவை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்ச சேதம் கழுத்துப் பகுதியில் ஏற்படும் தொற்றிலிருந்து வருவதால், கதிர்கள் வெளிவருவதற்கு முன் பயிர்களில் இவற்றை தெளிப்பது, தொற்றுநோயை குறைப்பதற்கு மிகவும் முக்கியம். பூண்டு குமிழ்த்தண்டு சாறு, வேப்பஞ்சாறு, அல்லது ஹினோசன் (கரிமப் பாஸ்பேட்) ஆகியவற்றைக் கொண்ட தெளிப்பான்கள் பூஞ்சைகளை சிறப்பாக கட்டுப்படுத்துகின்றன. நோய் திறனை குறைக்க, பாதரசம் கலந்த மருந்து வகை கலவையைக் கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அழிப்பது மிகவும் உதவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். டிரைசைக்லோஜோல் என்பவற்றுடன் ஹேக்சாகொனாஜோல் கொண்ட பூஞ்சைக்கொல்லிகள் பூஞ்சைகளை அழிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ப்ரோகுளோராஜ் சிகிச்சைகள் கூட பூஞ்சைகளை போதுமான அளவிற்கு குறைத்தது. திறன்மிக்க கட்டுப்பாடு மற்றும் அதிக தானிய விளைச்சலை அடைவதற்கு நடவு காலத்திலிருந்து தொடங்கி வார இடைவெளியில் இந்த கலவைகளை மூன்று முறை தெளித்தல் வேண்டும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் மேக்னாபோர்தே ஆரிகே என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட கதிர்களின் தாவரக் கழிவுகள் அல்லது சுருங்கிய தானியங்களில் இருக்கும். இது பெரும்பாலும் காற்று மூலம் பரவக்கூடியது, ஆரம்பத்தில் களைகளிலிருந்து அல்லது மாற்று புரவலனாக செயல்படும் பிற தானிய தாவரங்களிலிருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட விதைகள் நாற்றங்காலில் நோய் தொற்றை ஏற்படுத்தி, அதனை பிறகு முக்கிய வயல்வெளியில் உள்ள பயிர்களிடையே பரவ செய்யும். ஈரப்பதமான சூழ்நிலை மற்றும் வெதுவெதுப்பான வெப்பநிலை, இந்த நோய்க்கு மிகவும் சாதகமாக இருப்பதோடு, விதைமூலங்களை கொண்ட ஆலிவ்-சாம்பல் நிற வரம்பு மீறிய வளர்ச்சியைக் கொண்டிருக்கும். முளைத்தல், விதைமூலங்கள் உருவாகுதல் மற்றும் புரவலன் உயிரணுக்களின் படையெடுப்பு 25 டிகிரி செல்சியஸில் மிக அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட கதிர்களிலிருந்து வரும் தானியங்கள் பூஞ்சைகளைக் கொண்டிருப்பதால், அவற்றின் விதைகளை அடுத்த பருவ காலத்திற்கு பயன்படுத்தக்கூடாது.