Puccinia substriata
பூஞ்சைக்காளான்
இலைகளின் இருபுறங்களிலும் மஞ்சள் அல்லது வெள்ளை நிற புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகள் உப்பக்கூடியது. நோய் அதிகரிக்கும் போது, இந்த புள்ளிகள் ஒன்றாகி சிவந்த - ஆரஞ்சு துரு போன்ற கொப்புளங்களை உருவாக்குகின்றன. இந்த கொப்புளங்கள் மஞ்சள் விளிம்புகளைக் கொண்டிருக்கலாம். பின்னர் இந்த கொப்புளங்கள் கருக்கும். மேலும், நோய்தொற்றினால் இலைகள் இறந்து போக நேரிடும் மற்றும் கடுமையான பாதிப்புகளில் தாவரங்கள் கூட இறக்க நேரிடும்.
மன்னிக்கவும், புசினியா சப்சிடிரியெட்டாவிற்கு எதிரான மாற்று சிகிச்சை எதுவும் நாங்கள் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
செம்பு கலவைகள், குளோரோத்தலோனில், சல்பர் அல்லது மான்கோஸெப் போன்ற பூஞ்சைக் கொல்லிகளை திணைதாவரங்களின் மீது ஏற்படும் துருநோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். சிறிய அளவில் தாவரங்கள் நடவு செய்பவர்களுக்கு, பூஞ்சைக் கொல்லிகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொருளாதாரத்திற்கு கட்டுப்படி ஆகாது.
இந்த நோய்க்கிருமி கத்திரிக்காய் போன்ற பல்வேறு விதமான மாற்று புரவலன்கள் மற்றும் பல புல் வகைகளைக் கொண்டுள்ளன. பூஞ்சைகள் காற்று மூலம் நீண்ட தொலைவிற்கு பரவுகிறது. மேலும் நோய்க்கிருமி மண்ணில், தாவர கழிவுகளில் மற்றும் பிற புரவலன்கள் மீது உயிர் வாழுகிறது. பூஞ்சைக்கு சாதகமான நிலைகள் குளிர்ந்த இரவுகள் மற்றும் சூடான நாட்கள் ஆகும், மேலும் இலைகளில் பனித்திவலைகள் உருவாகி, இது அதிக ஆபத்தான நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கிறது.