கோதுமை

கோதுமையின் தண்டுத் துரு நோய்

Puccinia graminis

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிவப்பு நிற, முட்டைவடிவ மற்றும் பொடி போன்ற கொப்புளங்கள் தண்டுகள், இலை உறைகள் மற்றும் சில சமயங்களில் இலைகளிலும் காணப்படும்.
  • இந்தக் கொப்புளங்கள் வளர்ந்து மற்றும் ஒன்று சேர்ந்து பெரிய பகுதிகளை ஆக்கிரமித்து, பயிரின் மேல்தோலிற்கு முரட்டுத்தனமான கடினத் தோற்றத்தினை அளிக்கும்.
  • தண்டுகள் பலவீனமாகும் மற்றும் பயிர்கள் அதிக காற்று மற்றும் மழை பொழிவால் வீழ்ந்துவிடக்கூடும்.
  • பலவீனமான பயிர்கள் பிற நோய்க்காரணிகளினால் பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.
  • தானியங்கள் முழுமையாக நிரப்பப்படுவதற்கு முன்னர் நோய்த்தாக்கப்பட்டால் விளைச்சல் இழப்புக்கள் தீவிரமாக இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

கோதுமை

அறிகுறிகள்

நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட 7-15 நாட்களுக்குள் முதல் அறிகுறிகள் தென்படும். சிவப்பு- பழுப்பு நிற, முட்டைவடிவில் நீட்சி பெற்ற, பொடி போன்ற கொப்புளங்கள் தண்டுகள், இலை உறைகள், இலைகள் மற்றும் சில சமயங்களில் பூக்களிலும் காணப்படும். தண்டுகள் மற்றும் இலை உறைகள் முக்கியமாகப் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பொடி போன்ற கொப்புளங்கள் வளர்ந்து மற்றும் ஒன்று சேர்ந்து பெரிய பகுதிகளை ஆக்கிரமிக்கும். இதனால் பயிரின் மேல்தோல், முரட்டுத்தனமான கடினமான தோற்றம் பெறும். நோய்ப் பாதிப்பு அதிகமிருப்பின், தண்டுகள் பலவீனமாகும் மற்றும் பயிர்கள் அதிகக் காற்று மற்றும் மழைப் பொழிவால் வளையும் அல்லது வீழ்ந்துவிடக்கூடும். இந்தப் பூஞ்சைகள் நீர் மற்றும் சத்துக்கள் பயிருக்குள் செல்வதைத் தடுக்கும், எனவே நீர் இழப்பு, பயிரின் வீரியம் குறைதல் மற்றும் சத்துக்கள் தானியத்திற்கு செல்லுதல் போன்றவை குறையும். தானியங்கள் சுருங்கி, இதனால் மகசூல் பாதிக்கப்படும். மொத்தமாக முழுப் பயிரும் பலவீனமாகும், மற்ற நோய்க்கிருமிகளால் தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகப்படுத்துகிறது. தானியங்கள் முழுமையாக நிரப்பப்படுவதற்கு முன்னர் நோய்த்தாக்கப்படுவதால் விளைச்சல் இழப்புக்கள் தீவிரமாக இருக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், புசினியா டிரிடிசினா எனும் இப்பூஞ்சைகளுக்கு எதிராகத் தற்போது எங்களிடம் எவ்வித மாற்றுச் சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். டெபுகோனஸோல் அல்லது ப்ரோதியோகோனஸோல் கலந்திருக்கும் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தலாம். பாதுகாப்பு சிகிச்சை முறையாக, டிரையஸோல் மற்றும் ஸ்ட்ரோபிலுரின்ஸ் உள்ள பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். ஸ்டிராபிலூரின்ஸ் பூஞ்சைக்கொல்லிகளுக்கு சில எதிர்ப்புத் திறன் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

புசினியா க்ராமினிஸ் எனும் பூஞ்சைகளால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இது ஒரு கட்டாய ஒட்டுண்ணி, இவை உயிர்வாழ உயிருள்ள பயிரின் திசுக்கள் வேண்டும். காற்றின் மூலம் வெகுதொலைவில் உள்ள நிலத்திற்கும் இவற்றின் வித்துக்கள் சென்று பரவும் மற்றும் நீர் பட்டவுடன் இவை முளைக்க ஆரம்பிக்கும். இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள், கருவிகள், துணிகள் மற்றும் காலணிகளின் மூலமும் இவை பரவுகின்றன. இலையின் மேற்புறத்தில் உள்ள இயற்கையான துளைகளின் வழியே பூஞ்சைகள் உள்நுழைகின்றன, குறைந்த வெளிச்ச செறிவு (அதிகாலை அல்லது நண்பகலின் பிற்பகுதி) மற்றும், அடிக்கடி ஏற்படும் பனி அல்லது மழையினால் ஏற்படும் இலையின் நீண்டகால ஈரத்தன்மை ஆகியவை இந்தச் செயல்முறைக்குச் சாதகமானவை. தண்டுத் துரு நோய்க்கு, வெப்பமான நாட்கள் (25-30 டிகிரி செல்சியஸ்) மற்றும் பனி உருவாக்கும் மித வெப்பநிலை கொண்ட இரவுகள் (15-20 டிகிரி செல்சியஸ்) போன்றவையும் இவற்றுக்கு ஏற்ற சூழலாகும். இந்த நோயானது கோதுமையை மட்டுமே குறிப்பாகத் தாக்கும், ஆனால் பிற பயிர்கள் இவற்றின் நோய்க் காரணியாக இருக்கக்கூடும் அல்லது பாதிக்கப்படவும் கூடும் (பிற தானியங்கள், புற்கள் மற்றும் பெர்பெரிஸ் புதர் இனங்கள்).


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத்திறன் மிக்க கோதுமை வகைப் பயிர்களைப் பயிரிடவும்.
  • முன்னதாகவே முதிர்ச்சி பெறும் பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • முடிந்தவரை முன்னதாக வசந்தகாலத்திலேயே பயிரிடவும்.
  • இலையுதிர் காலத்திற்கு பிறகு முடிந்தவரை தாமதமாகப் பயிரிட்டு மோசமான சூழல்களைத் தவிர்க்கவும்.
  • நோய் அறிகுறிகள் குறித்து தினமும் களத்தினைக் கண்காணிக்கவும்.
  • நிலத்தில் களைகள், தானாக வளரும் தாவரங்கள், பெர்பெரிஸ் புதர்களின் இனங்கள் வளர்வதை அகற்றவும்.
  • அதிகப்படியான நைட்ரஜன் உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • நல்ல காற்றோட்டத்துடன் பயிர்கள் வளர போதுமான இடைவெளிவிட்டுப் பயிரிடுவதை உறுதி செய்து கொள்ளவும்.
  • பயிரின் அனைத்து எஞ்சிய பாகங்களையும் நீக்கி மற்றும் அழிப்பதன் மூலம் பூஞ்சைகள் களத்தில் உயிரோடிருப்பதைத் தவிர்க்கலாம்.
  • காலணிகள், கருவிகள், கைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றை மற்றொரு களத்திற்குள் நுழையும் முன்பு சுத்தமாக வைத்திருக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க