அரிசி

அரிசி வண்டு

Leptocorisa spp.

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • உச்சிப்பகுதியில் உண்ணும் சேதங்கள்.
  • நிரப்பப்படாத அல்லது வெறுமையான தானியங்கள்.
  • நிறமாற்றம்.
  • தானியங்களின் உருக்குலைவு.
  • இவற்றின் அறிகுறிகள் பாக்டீரியா மலர் கருகல் நோயினை ஒத்து காணப்படுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

தானியங்களின் வளர்ச்சி நிலையினைப் பொறுத்து, பூச்சிகளின் தாக்குதலால் தானியமற்ற கதிர்கள், அல்லது சிறிய, சுருங்கிய, புள்ளிகள் மற்றும் நிறமாற்றத்துடன் வடிவமாற்றம் அடைந்த கதிர்கள் உருவாகலாம். சில நேரங்களில் வித்தியாசமான வாசனையையும் ஏற்படுத்தலாம். நிமிர்ந்த கதிர்கள் உருவாகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

தெளிப்பு வாசனை (எலுமிச்சை புல் போன்றவை) சோப்பு கரைசல்களைப் பயன்படுத்தி அரிசி பூச்சிகளை பயிரிலிருந்து வெளியேற்றலாம். “ப்ராஹோக்” (கம்போடியாவில் கிடைக்கும் "பாலாடைக்கட்டி") போன்ற பூச்சிகளைக் கவரும் பொறியினை நிலத்திற்கு அருகே பயன்படுத்தி அரிசி பூச்சிகளை கவர்ந்து, அழிக்கலாம். கொசுவலைகளை அதிகாலை அல்லது மதிய வேளைக்கு அப்பால் பயன்படுத்தி அரிசி பூச்சிகளை நீக்கலாம், அழிக்கலாம் மற்றும் அவற்றினை நீரில் நனைத்து பயிர்களில் தெளித்து அரிசி பூச்சிகளை வெளியேற வைக்கலாம். வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலந்திகள் போன்ற இயற்கை எதிரிகளைப் பயன்படுத்தி அரிசி பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகளை அழிக்கலாம். இயற்கையான கட்டுப்படுத்திகளான : சில வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலந்திகள் அரிசி வண்டுகள் அல்லது அவற்றின் முட்டைகளைத் தாக்கக் கூடியவை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் அளவுகளை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் அவை ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம். வயல் ஓரத்திலிருந்து தொடங்கி மையப்பகுதி வரை வட்ட வடிவத்தில் மாலை நேரங்களில் குளோர்பைரிபோஸ் 50 இசி @ 2.5 மிலி + டிக்ளோர்வோஸ் @ 1 மிலி/லி என்பவற்றை தெளிக்கவும். இது வண்டுகளை வயலின் மையப்பகுதிக்கு கொண்டு வந்து, அதனை திறன்மிக்க வகையில் நிர்வகிப்பதற்கு உதவுகிறது. மாற்று பயன்பாடாக அபமெக்டின்-ஐக் கூட பயன்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகளைக் கண்மூடித்தனமாக அதிகளவில் பயன்படுத்தினால் பூச்சிகள் மீண்டும் எழுச்சி பெறவும் வாய்ப்புள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

அரிசி வண்டுகள் நெற்பயிரில் தானியங்கள் உருவாகும் காலகட்டங்களில் அதிகம் தாக்குகின்றன மற்றும் மாலை வேளைகளில் வயலில் துர்நாற்றத்தினையும் கொடுக்கின்றன. அனைத்து நெற்பயிரின் சூழ்நிலைகளிலும் அரிசி பூச்சிகள் காணப்படுகின்றன. அதிகப்படியான களைகள் நிலத்திற்கு அருகே வளர்ந்திருப்பது, கால்வாய்க்கு அருகே அதிகப்படியான காட்டு புல்கள் மற்றும் தேக்கிவைக்கப்பட்ட நாற்றுக்கள் போன்றவை அதிகப்படியான அளவில் பரவ காரணமாகின்றன. பருவமழை தொடங்கியதும் பூச்சிகளின் வரத்து அதிகரித்துவிடும். வெதுவெதுப்பான வானிலை, மேகமூட்டமான வானிலை, மற்றும் அடிக்கடி ஏற்படும் சாரல் போன்றவை பூச்சிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும். வறண்ட காலங்களில் இவற்றின் செயல்பாடு சற்று குறைவு. இவற்றின் அறிகுறிகள் பாக்டீரியா மலர் கருகல் நோயினை ஒத்து காணப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகளின் எண்ணிக்கையினைக் குறைக்க, முடிந்தவரை தாமதமாக முதிர்வடையும் வகையிலான பயிர்களைப் பயன்படுத்தவும்.
  • ஒத்திசைவான பயிரிடல் மூலம் அரிசி வண்டு பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
  • பூ பூக்கும் காலத்திற்கு முன்பாகவே வயல்வெளியில் பூச்சிகள் இருப்பது குறித்து முறையாக கண்காணிக்கவும்.
  • புல், நெல்லி மற்றும் பீன்ஸ் போன்ற பிற பயிர்களைக் களையவும்.
  • வயல்வெளியில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையற்ற களைகளை அகற்றவும்.
  • அரிசி வண்டுகளைக் கவரும் வகையிலான பயிர்களை வயலைச் சுற்றி பயன்படுத்தவும்.
  • சமநிலையிலான உரமிடுதல் திட்டத்தினை பயன்படுத்தவும்.
  • தொடர்ச்சியாக பாசனம் செய்யவும், ஆனால் அதிகப்படியான ஈரப்பதத்தினைத் தவிர்க்கவும்.
  • அதிகாலையில் மற்றும் மாலை வேளைகளில் வலைகளைப் பயன்படுத்தி வண்டுகளைப் பிடிக்கவும்.
  • பயிர்களின் அடிப்புறத்தில் இருக்கும் வண்டுகளை அடித்துச் செல்ல அல்லது பயிரின் மேற்பரப்பிற்கு கொண்டு வர, அதிகப்படியான நீர்பாசனம் செய்து பின்னர் வடிய வைக்கவும்.
  • பயிரின் மேற்பரப்பிற்கு வண்டுகள் வந்த பிறகு பூச்சிக்கொல்லிகள் மூலம் அவற்றை எளிதில் அழிக்கலாம்.
  • பயன்படும் வகையிலான பூச்சிகளை (வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலந்திகள்) அழிப்பதைத் தவிர்க்க பரந்த அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சரியான நேரத்தில் பயிரிடுதல் அரிசி பூச்சிகள் பாதிப்பதை வெகுவாகக் குறைக்கும்.
  • கதிரில் பூ பூக்கும் நிலைக்கு முன்பு தினமும் கண்காணிக்கவும்.
  • பீன்ஸ், நண்டு புல் மற்றும் வாத்துப்புல் போன்ற தேவையற்ற பயிர்களை களைந்துவிடவும்.
  • உரங்கள் மற்றும் சரியான அளவிலான தண்ணீர் போன்றவை நெற்பயிர் நன்கு வளர்வதற்கு உதவும்.
  • குறைவான அளவில் பூச்சிக்கொல்லிகளை தெளித்து நன்மை பயக்கும் பூச்சிகளை பாதுகாக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க