விதையவரை

அவரை இலை வண்டு

Cerotoma trifurcata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • வேர்கள் மற்றும் வேர் முண்டுகளில் உண்ணும் சேதங்கள்.
  • இலைத்திரள்கள் மற்றும் வளரும் காய்களில் உண்ணும் சேதங்கள்.
  • வைரஸ்களைப் பரப்பும் காரணிகள்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்

விதையவரை

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் வேர்கள், வேர் முண்டுகள், விதையிலைகள், இலைகள் (பெரும்பாலும் அடிப்புறம்) மற்றும் காய்களை உண்ணும். வேர் மற்றும் கடத்துத் திசுக்களில் ஏற்படும் சிதைவுகள் தழைச்சத்து நிலைப்பாட்டைக் குறைக்கக்கூடும். இலைப் பரப்புகளில் ஏற்படும் சேதங்கள் சிறியதாக, இலைகள் முழுவதும் கிட்டத்தட்ட வட்டவடிவிலான துளைகளாகச் சிதறிக் காணப்படும். உண்ணப்படும் காய்கள் வடுக்களை உடைய தோற்றத்துடன் காணப்படும். காய்களின் மீதான உண்ணும் சேதங்களால் விளைச்சல் மற்றும் விதைத் தரம் குறையும். சேதமடைந்த காய்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு ஒரு நுழைவு வாயிலைக் கொண்டிருக்கும். செரோடோமா டிரிஃபர்காட்டா பருவகாலத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்டால், அது நாற்றுகளில் காயம், இலை உதிர்வு மற்றும் விதை நிறமாற்றம் முதலியவற்றுக்கு வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இதுவரை, இந்த பூச்சிக்கு எதிரான பயனுள்ள உயிரியல் கட்டுப்பாடு எதுவும் அறியப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். சேதமானது கணிசமான அளவு விளைச்சல் குறைவதற்கு காரணமாக இருந்தால், இரசாயணங்கள் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். பைரித்ராய்டு, லேம்டா-சைஹலோத்ரின் அல்லது டிமீத்தோயேட் ஆகிய குழுவைச் சார்ந்த பூச்சிக்கொல்லிகள் நோய்ப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த பூச்சிகள் சுமார் 6 மி.மீ. நீளத்தில், கருமஞ்சள் முதல் சிவப்பு நிறத்தில் காணப்படும். அவற்றின் இறக்கைகள் செவ்வகப் புள்ளிகளால் மூடப்பட்டிருக்கும், அவற்றின் கழுத்துப்பகுதியில் கருப்பு முக்கோணம் காணப்படும். முதிர்ந்த பெண் பூச்சிகள் தாவரத் தண்டுகளுக்கு அருகே முதல் இரண்டு அங்குல மண்ணில் முட்டைகளை இடும். ஒரு பெண் பூச்சி தனது வாழ்நாளில் 125 முதல் 250 முட்டைகளை இடுகிறது. மண்ணின் வெப்பநிலையைப் பொறுத்து நான்கு முதல் 14 நாட்களில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளியாகின்றன. முட்டைப் புழுக்கள் கரும் பழுப்பு அல்லது கருப்புநிற தலைப்பகுதியுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும். முதிர்ந்த பூச்சிகள் சோயாமொச்சை வயல்களைச் சுற்றிலும் பல்வேறு வாழ்விடங்களில் குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழிக்கும். அவரை இலை வண்டு பல வகை வைரஸ்களைப் பரப்பும் காரணிகளாக இருக்கிறது.


தடுப்பு முறைகள்

  • சேதங்களைக் குறைக்க சற்று தாமதமாக பயிரிடவும்.
  • பருவ காலத்தின் ஆரம்பத்தில் பூச்சிகளைக் கணக்கிட்டு, தாவர சேதங்களை மதிப்பீடு செய்யவும்.
  • வரிசையினைப் பாதுகாப்பது இந்தப் பூச்சிகளுக்கு பொருள் ரீதியான தடையினை ஏற்படுத்தும்.
  • ஆழமாக உழுது, அருகில் பிற அவரைய வகைகளை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • பெருமளவில் பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க