கரும்பு

கரும்பின் வெள்ளை வண்டினப்புழு

Lepidiota stigma

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • வேரில் ஊட்டம் பெறுவதால் பயிருக்கு குறைந்த அளவு ஊட்டச்சத்து மற்றும் குறைந்த அளவு நீர் மட்டுமே செல்லும்.
  • அதிகப்படியான நேரத்தில், இலைகள் பழுப்பாக மாற்றம் பெற்று, முதிர்ந்த தண்டுகள் சீர்கேடு அடையும்.
  • மோசமான வானிலைகளில் தாவரங்களில் இவை குடிபெயரலாம்.
  • கரும்பின் தண்டுகளில் இளம் உயிரிகள் சுரங்கங்களை உருவாக்கலாம்.

இதிலும் கூடக் காணப்படும்


கரும்பு

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் கரும்பு வேர்களை உண்டு, பயிருக்கு செல்லும் ஊட்டச்சத்து மற்றும் பயிருக்கு செல்லும் நீரின் அளவு போன்றவற்றை குறைத்துவிடும். இவற்றின் ஆரம்பகால அறிகுறிகள் வறட்சி அறிகுறிகள் போன்றே இருக்கும், அதனுடன் இலைகள் ஆரம்பகாலத்தில் மஞ்சள் நிறமாகும் மற்றும் உதிரும். பின்னர், இலைகள் பழுப்பு நிறமாக மாறும் மற்றும் முதிர்ந்த தண்டுகள் சீர்குலையும். அதிகப்படியான பாதிப்புகளில், வேரின் அடிப்பகுதி மொத்தமும், வேர்களில் இருந்து அகன்று, அவற்றின் எடையின் காரணமாக நிலத்தில் இருந்து வெளியேறும். சிலவேளைகளில், கரும்பு தண்டுகளில் இளம் உயிரிகள் சுரங்கங்களை உருவாக்கலாம். மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட வேளைகளில் கரும்பின் ஆரம்ப வளர்ச்சியில், மீண்டும் பயிர்செய்வது அவசியமானதாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கரும்பு நிலத்திற்கு அருகிலுள்ள வெள்ளை வண்டினப் புழுக்களை பொறி மரங்களைப் பயன்படுத்தி எளிதாக கவரவும் பின்னர் அவற்றினை அழிக்கவும். இதன் மூலம் சிறப்பான முறையில் புழுக்களின் எண்ணிக்கை குறையும். ஜெயன்டி (ஸெஸ்பனியா செஸ்பன்), டுரி (ஸெஸ்பனியா கிராண்டிஃப்ளோரா), அகசியா டோமென்டோசா, அசாம் (டாமரின்டஸ் இன்டிகா), ஜெங்கால் (பிதெசெல்லோபியம் ஜிரிங்கா) மற்றும் முந்திரி (ஆனாகார்டியம் ஓக்சிடென்டலே) போன்றவற்றினைப் பயன்படுத்தலாம். முந்திரி மிகவும் பொருத்தமான ஒன்று, அவை மோசமான மண்ணிலும் வளர்ந்து விவசாயிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கும். கேம்ப்சோமெரிஸ் இயற்கை எதிரிகளை பயன்படுத்தவும். பெயூவெரியா போன்றவை அடங்கிய உயிரிக்கொல்லிகளை பூச்சிகளின் பாதிப்பை குறைக்க பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். மண் பூச்சிக்கொல்லிகளின் மூலமாக இரசாயன கட்டுப்பாடுகள் வழக்கமாக செயல்படுத்தப்படுகின்றன. குளோர்பைரிஃபோஸ் அல்லது குளோர்பைரிஃபோஸ்-மெத்தில் போன்ற பிற பூச்சிக்கொல்லிகள் கொண்ட தயாரிப்புகளைப் பயிரிடலின்போது பயன்படுத்தவும் மற்றும் சிறந்த சிகிச்சைக்கு, வேர்கள் பாதிக்கப்படும் முன்னரே பூச்சிக்கொல்லிகளை வேர்களில் பயன்படுத்தவும். இருப்பினும் இவை வெட்டப்பட்ட கரும்புகளில் இருந்து வரும் தளிர்களுக்கு பயன்படுவதில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

பல்வேறு வகையிலான வண்டுகளினால் பாதிப்புகள் ஏற்படலாம், அதில் லெபிடியோடா ஸ்டிக்மா மிக முக்கியமானது ஆகும். பைல்லோபக ஹெல்லெரி, பஸ்னெஸா நிகோபரிகா, லியோகோபோலிஸ் மற்றும் ப்சிலோபோலிஸ் போன்றவை பிற உயிரினங்கள் ஆகும். கிரீம் போன்ற வெள்ளையான நிறத்தில் C-வடிவில் இளம் உயிரிகள் இருக்கும் என இந்தப்புழுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவை வளரும்போது பெருவேட்கையுடையதாக மாறுகிறது, இதனைக் கண்டறியாமல் விட்டால் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது. தாக்குதலின்போது இருக்கும் கரும்பின்நிலை, வேர் புழுவின் எண்ணிக்கை , அவற்றின் வயது மற்றும் அவற்றின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்து அவற்றின் பாதிப்பு அமையும். முதிர்ந்த கரும்பினை பாதித்தால் அது மகசூலில் குறைவை ஏற்படுத்தும்.


தடுப்பு முறைகள்

  • அதிக சகிப்புத் தன்மை கொண்ட பயிர்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றை அதிகமாக வளர்க்கவும்.
  • வெள்ளை வண்டினப்புழு இருப்பதற்கான அறிகுறிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையினைக் குறைக்க பொறிகளைப் பயன்படுத்தவும் அல்லது முதிர்ந்த பூச்சிகளை மொத்தமாக பிடிக்க பயன்படுத்தவும், அல்லது புழுக்களை அல்லது வண்டுகளை வெறும் கைகளால் சேகரிக்கவும்.
  • மாற்றாக, பயிர்களை உலுக்கி அதிலிருந்து விழும் பூச்சிகளை துணியின் மூலம் பிடிக்கவும்.
  • பொறி மரங்களைப் பயன்படுத்தி முதிர்ந்த பூச்சிக்களை கவர்ந்து பின்னர் கைகளால் அவற்றை நீக்கவும்.
  • ஈரமான களிமண்ணாக இருக்கும்போது கரும்பினை சாகுபடி செய்வதைத் தவிர்க்கவும்.
  • மண்ணின் வளத்தினை சமச்சீரான உரங்கள் அளிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • பயன் தரக்கூடிய பூச்சிகளை அளிக்கும் அளவிற்கு அதிகப்படியாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டாம்.
  • ஆழமாக உழுதல் செய்து எஞ்சியவற்றை புதைக்கவும், இதன் மூலம் அவற்றை சிதைவு பெறச் செய்யலாம் மற்றும் புழுக்களை அவற்றின் எதிரிகளுக்கு வெளிக்கொணரலாம்.
  • அறுவடைக்குப்பின், எஞ்சிய பயிர்கள் மற்றும் பயிர்த்தாள் போன்றவற்றை ஆழமாக உழுது புதைக்கவும் அல்லது எரித்து விடவும்.
  • புரவலன் அல்லாத பருப்பு வகை பயிர்களைக் கொண்டு மறுபயிரிடலை மேற்கொள்ளவும்.
  • அறுவடைக்குப் பின்னர் தரிசாக நிலமாக சில வாரங்கள் நிலத்தினை வைத்திருப்பதன் மூலம் புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சியினைத் தடுக்க முடியும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க