மற்றவை

திராட்சை பெர்ரி அந்துப்பூச்சி

Lobesia botrana

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • முட்டைப்புழுக்கள் மலர்களை உண்டு, குறுங்காம்புள்ள பூங்கொத்து என்று அழைக்கப்படும் பட்டு கட்டமைப்பை உருவாக்கும்.
  • முதிர்ந்த கம்பளிப்புழுக்கள் பெர்ரிகளில் ஊடுருவி, அவற்றை துளைத்து, தோல் மற்றும் விதைகளை வெளிப்படுத்தும்.
  • பெர்ரிகளுக்கு இடையே பட்டு நூல்கள் ஏராளமாகக் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்

மற்றவை

அறிகுறிகள்

வசந்த காலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில், முதல் தலைமுறை முட்டைப்புழுக்கள் ஒற்றை பூ மொட்டுக்களை உண்ணும். பின்னர் ஒவ்வொரு முட்டைப்புழுவும் பல்வேறு பூ மொட்டுகளை ஒன்று சேர்த்து பட்டு நூல்கள் போன்று பிண்ணி, நம் வெறும் கண்களால் காணக்கூடிய வகையில் கட்டமைப்பை உருவாக்கும். அவை "குறுங்காம்புள்ள பூங்கொத்து" என்று அழைக்கப்படுகிறது. அவை தான் தங்குமிடத்தின் உள்ளே உள்ள மலர்களை உண்ணுகையில், நம் கண்களால் எளிதில் காணக்கூடிய வகையில் ஏராளமான கழிவுகளை உற்பத்தி செய்யும். இரண்டாவது தலைமுறை முட்டைப்புழுக்கள் (கோடைக்கால நடுப்பகுதியில்) முதலில் பச்சை பெர்ரிகளை வெளிப்புறமாக உண்ணும். அவை பின்னர் அவற்றை துளையிட்டு, ஊடுருவி, தோல் மற்றும் விதைகளை மட்டும் விட்டு வைக்கின்றன. மூன்றாவது தலைமுறை முட்டைப்புழுக்கள் (கோடைக்கால பிற்பகுதியில்) பெர்ரிகளுக்கு உள்ளேயும், கொத்துகளுக்கு உள்ளேயும் உண்டு அதிகமான சேதத்தை ஏற்படுத்துகின்றன, பின்னர் அவை படிப்படியாக உலரும். பெர்ரிகள் கீழே விழுவதை தவிர்க்க பட்டு நூல்களால் அவை கட்டப்பட்டிருக்கின்றன. இந்த உண்ணும் காயங்கள், பல வகையான சந்தர்ப்பவாத பூஞ்சைகளால் அல்லது எ.கா. உலர் திராட்சை அந்துப்பூச்சி (காட்ரா பிகுலியெல்லா), பழ ஈக்கள், மற்றும் எறும்புகள் போன்ற பூச்சிகளின் தாக்குதல்களால் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. வளர்ந்து வரும் பகுதிகள், தளிர்கள் அல்லது இலைகள் மீது முட்டைப்புழுக்களின் சேதம் அசாதாரணமானது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

திராட்சைகளில் இந்த பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல கரிம பூச்சிக்கொல்லிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இயற்கை பூச்சி வளர்ச்சி கட்டுப்பாடுகள், ஸ்பினோசின்ஸ் மற்றும் பாசிலஸ் துரிங்ஜென்சிஸ் அடிப்படையிலான கரைசல்கள் இவற்றுள் அடங்கும். ஒட்டுண்ணிகளின் சில இனங்களான டச்சினிட் ஈக்கள் மற்றும் மற்றும் பல வகையான ஒட்டுண்ணி வண்டுகள் (100 க்கும் மேற்பட்டவை) எல். போட்ரனா எண்ணிக்கையை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. திராட்சைத் பெர்ரி அந்துப்பூச்சிகளின் முட்டைப்புழுக்களை சில ஒட்டுண்ணிகள் 70% வரை அழித்துவிடும். இந்த இனங்களை திராட்சை தோட்டங்களில் வளர்க்கலாம். பெரோமோன் மூலம் அந்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்தை தவிர்க்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பல வகையான பூச்சிக்கொல்லிகள் (ஆர்கனோகுளோரின்கள், கார்பேமேட்டுகள், ஆர்கோனோபாஸ்பேட்ஸ் மற்றும் பைரித்ராய்ட்ஸ்) எல் போட்ரனாவின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படலாம், ஆனால் அவை அந்துப்பூச்சிகளும் அவற்றின் லார்வாக்களையும் கொல்லும். ஆனால் அவை வேட்டையாடி உண்ணும் இனங்கள் மற்றும் அதன் முட்டைப்புழுக்களையும் அழித்துவிடும். இந்த நடவடிக்கைகள் உயிரியல் அல்லது இரசாயன கட்டுப்பாடுடன் இணைந்து செய்ய வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் லோபேசியா போட்ரானா என்னும் அந்துப்பூச்சி கம்பளிப்புழுக்களின் உண்ணும் செயல்பாட்டால் ஏற்படுகிறது. முட்டைப்புழுக்கள் பட்டு புழுக்கூட்டினுள் கிளைகளுக்கு அடியில் , உலந்த இலைகளின் அடிப்பகுதியில், மண்ணில் உள்ள துளைகளில் அல்லது திராட்சைக் கழிவுகளில் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கிறது. முதிர்ந்த பூச்சிகள் தேமல் அமைப்பை போன்ற முன் இறக்கைகளையும், வெளிர்-பாலாடை நிறத்தையும், சாம்பல், பழுப்பு, மற்றும் கருப்பு நிறத்தில் தழும்பு போன்ற அமசத்தையும் கொண்டிருக்கும். இரண்டாவது ஜோடி இறக்கைகள் சாம்பல் நிறத்தில், வரிகளைக் கொண்ட ஓரங்களையும் கொண்டிருக்கும். 10 முதல் 12 நாட்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கும் போது முதல் தலைமுறையின் முதிர்ந்த பூச்சிகள் வெளியே வரும். உகந்த வளர்ச்சி நிலைகள் 40 முதல் 70% வரையிலான 26-29° செல்சியஸ் ஈரப்பதங்கள் ஆகும். முட்டைப்புழுக்கள் மொட்டுக்குள் ஊடுருவதற்கு பூ இதழ்களை துளைக்கும். மேலும் அவை திராட்சைக் கொத்துக்களின் மஞ்சரி காம்புகள் வரை ஊடுருவி, அதனை உலர செய்யக்கூடும். முதிர்ந்த கம்பளிபுழுக்கள் பழங்களை பட்டு நூல்களால் பிண்ணி, அவற்றை சிறுக சிறுக கொரிக்கும் அல்லது ஊடுருவும். இந்த அந்துப்பூச்சி, அந்தந்த பகுதியின் கோடைக் காலத்தை பொறுத்து வருடத்திற்கு 2-4 தலைமுறைகளைக் கொண்டிருக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் சாத்தியமான நோய்த்தொற்றுத்தடுப்பு கட்டுப்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
  • ஆரோக்கியமான நடவு அல்லது ஒட்டு பொருட்கள் பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • உங்கள் பகுதியில், நோயை தாக்குப்பிடிக்கும் தாவர வகைகள் கிடைக்கும் என்றால் அவற்றை பயிரிடவும்.
  • வசந்த காலத்தின் பிற்பகுதியிலிருந்து, வாராவாரம் திராட்சை தோட்டங்களை கண்காணிக்கவும்.
  • அந்துப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்துங்கள்.
  • கவிகைகளின் காற்றோட்டத்தை மேம்படுத்த, திராட்சைக் கொலையின் குறிப்பிட்ட சில சீர்திருத்தங்கள் மற்றும் இலை பூச்சிநீக்கல் போன்ற சில கலாச்சார வழிமுறைகள் உதவும்.
  • போதுமான நீர்ப்பாசனத்தை வழங்கவும்.
  • கொடிகளின் கீழ்ப்பகுதியை நிலத்தில் மூடுவது, பனிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
  • திராட்சைத் தோட்டங்களில் உள்ள களைகளை அகற்றவும்.
  • பூச்சிகளின் உச்சக்கட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க அறுவடை காலத்தை கவனமாக தேர்ந்தெடுக்கவும்.
  • வேட்டையாடி உண்ணும் இனங்களை கொல்லக்கூடிய பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை தவிர்க்கவும்.
  • தோட்டங்களுக்கு இடையே பாதிக்கப்பட்ட தாவர வகைகளை எடுத்து செல்ல கூடாது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க