உருளைக் கிழங்கு

உருளைக்கிழங்கு Y வைரஸ் நோய்

PVY

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • மஞ்சள் முதல் அடர் பச்சை வரையிலான தேமல் அமைப்புகள் நுனியிலிருந்து தொடங்கி இலைகளில் காணப்படும்.
  • இலைகள் மற்றும் தளிர்களில் கருப்பு நிறத்தில் சிதைந்த புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும்.
  • தாவர வளர்ச்சி குன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்

உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

பயிர் வகைகள், அவற்றின் வயது மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளைப் பொறுத்து அவற்றின் நோய்க்கான அறிகுறிகள் மாறுபடும். இலை நுனியில் இருந்து ஆரம்பித்து, இலை பரப்புகளில் மஞ்சள் முதல் அடர் பச்சை நிற தேமல் அமைப்புகள் தோன்றி, பல்வண்ண புள்ளிகள் மற்றும் உருக்குலைந்த தோற்றத்தை ஏற்படுத்தும். இலை நரம்புகள் மற்றும் தளிர்களின் இறந்த திசுக்களில் பழுப்பு முதல் கருப்பு கோடுகள் மற்றும் வட்ட வடிவிலான புள்ளிகள் காணப்படும். இதன் பிறகு மொட்டுக்கள் மற்றும் பூக்கள் வளராது. பாதிக்கப்பட்ட தாவரங்களில் இருந்து பெறப்படும் கிழங்குகள், சிறியதாகவும், தோலின் மீது சிதைவுகள் அல்லது தேவையற்ற வளையங்களைக் கொண்டதாகவும் இருக்கும். செடியின் மொத்த வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அதன் பயிர்ப் பயனாக்கமும் வெகுவாகக் குறையும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வாரம் ஒருமுறை கனிம எண்ணெயினை பயன்படுத்தி வைரஸ் பரவுவதை தவிர்க்கலாம். இது இலைப்பேன்கள் வைரஸ்களை தொற்றிக்கொள்வதை குறைத்து, அதன் உண்ணும் பழக்கத்தை மாறுபடுத்தி, தாவரங்களை தாக்கும் திறனை குறைக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். வைரஸ் நோய்களுக்கு இரசாயன சிகிச்சைகள் சாத்தியமே இல்லை. இருப்பினும், இலைப்பேன்களின் எண்ணிக்கையை குறைக்க இவற்றினை பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த வைரஸ் மிகவும் பாதிக்கும் தன்மையுடையது. இது முதன்மையாக கிழங்குவகை பயிர்களை பாதிக்கும். தக்காளி, உருளைக் கிழங்கு மற்றும் மிளகு போன்ற பயிர்கள் இவற்றினால் பாதிக்கப்படும் முக்கியமான பயிர்கள் ஆகும். பறக்கும் தன்மை கொண்ட பல வகையான இலைப்பேன்கள், நோய் தொற்று கொண்ட தாவர பொருட்கள் மற்றும் மாசுபட்ட கருவிகளின் மூலம் இந்நோய் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டும் பயிரிடவும்.
  • நன்கு தாக்குப் பிடிக்கும் வகையிலான பயிர்களை அல்லது நோய் தடுப்பு பயிர்களை பயிரிடவும்.
  • களத்தினை சரியாக கண்காணித்து பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களையும் நீக்கவும் அல்லது அழிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட புரவலன்களுக்கு அருகே உருளைக் கிழங்கினை பயிரிட வேண்டாம்.
  • களத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் களைகள் அல்லது பழைய பயிரிடலில் எஞ்சிய தாவரங்களை அகற்றவும்.
  • களப்பணிகளின் போது பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • பயன்படுத்தும் கருவிகளை சுத்தப்படுத்தி நோய் தொற்று ஏற்படாத வகையில் பயன்படுத்தவும்.
  • குளிர்காலங்களில் வைரஸை பரப்பும் சாத்தியக்கூறுகளை அழிக்கவும்.
  • உதாரணமாக உருளைக்கிழங்குகளில் தேவையற்ற பகுதிகள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க