வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் தேமல் வைரஸ்

CMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் பழங்களில் மஞ்சள் நிற தேமல் அமைப்புகள்.
  • இலைகள் மற்றும் இலைக்காம்புகளில் கீழ்நோக்கிய வளைச்சல் மற்றும் சுருக்கம்.
  • குன்றிய, உருக்குலைந்த வளர்ச்சி.
  • மலர்களில் வெள்ளை நிற கோடுகள்.

இதிலும் கூடக் காணப்படும்

7 பயிர்கள்
பாகற்காய்
வெள்ளரிக்காய்
முலாம்பழம்
பூசணிக்காய்
மேலும்

வெள்ளரிக்காய்

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட தாவர இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடுகின்றன. சில சந்தர்ப்பங்களில், வைரஸ் இருக்கலாம், ஆனால் அறிகுறிகள் மறைக்கப்படும் அல்லது வெளியே தெரியாமல் இருக்கும். இலைகள் மற்றும் பழங்கள் மீது மஞ்சள் நிற திட்டுகள் அல்லது வெளிறிய பச்சை மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும். பக்கவாட்டு கிளைகள் மற்றும் இலை தண்டுகளின் நீள்வெட்டு வளர்ச்சி அதிகரித்து,இலைகள் மற்றும் இலை காம்புகள் கீழ்நோக்கி வளைய செய்யும். இளம் இலைகள் சுருங்கி, நீளமாகி, முழு தாவரத்தின் வளர்ச்சியும் கடுமையாக குன்றி, உருக்குலைந்து, கற்றை போன்ற தோற்றத்துடன் காணப்படும். மலர்கள் வெள்ளைக் கோடுகளுடன் காணப்படும். பழங்களில் மேல்நோக்கிய வளைந்த வீக்கங்கள் அவற்றை விற்பனையாகாமல் செய்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இலைகளில் கனிம எண்ணெய் தெளிப்பான்களை உபயோகிப்பதன் மூலம் அசுவினிகள் அவற்றை சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சிஎம்விக்கு எதிராக எந்தவொரு சக்திவாய்ந்த இரசாயனமும் இல்லை அல்லது தாவரங்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கும் எந்த இரசாயன சிகிச்சையும் இல்லை. சைபர்மெத்ரின் அல்லது குளோர்பைரிஃபோஸ் கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை அசுவினிகளுக்கு எதிரான இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் வெள்ளரிக்காய் தேமல் வைரஸால் ஏற்படுகிறது (சிஎம்வி). இது பல்வேறு வகையான இனங்களை (சுரைக்காய், கீரை, மலைக்கீரை மற்றும் செலரி மற்றும் பல மலர்கள், குறிப்பாக அல்லிகள், மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனங்கள், பலவண்ண மலருடைய பசுமை மாறாச் செடிவகைகள் மற்றும் மலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனங்கள்) பாதிக்கிறது. இந்த வைரஸ் 60-80 வகையான பல்வேறு வகையான அசுவினிகள் மூலம் பரவுகிறது. சேதமடைந்த விதைகள் மற்றும் பதியன்கள் மற்றும் தொழிலாளி கைகளில் பரிமாறப்படும் இயந்திரங்கள் அல்லது கருவிகள் ஆகியவை இந்த வைரஸ் பரவுவதற்கான பிற வழிகள் ஆகும். சிஎம்வி, வற்றாவள களைகளின் பூக்கள் மற்றும் பெரும்பாலும் பயிர்களில் உள்ள வேர்கள், விதைகள் அல்லது மலர்களிலேயே தனது குளிர்காலத்தை கழிக்கும். முதன்மை நோய்த்தொற்றுகளில், வைரஸ் புதிதாக வளர்ந்து வரும் நாற்றுக்களில் முறையாக வளர்ந்து, மேல்புற இலைகளில் முடிவடையும். இந்தத் தாவரங்களை உண்ணும் அசுவினிகள் மற்ற புரவலன்களுக்கு (இரண்டாம் தொற்று) இந்த நோய் தொற்றை எடுத்து சென்று பரப்பும். இந்த வைரஸ் வெவ்வேறு தாவர உறுப்புகளுக்கு இடையேயான நீண்ட தூர போக்குவரத்துக்கு புரவலன் இரத்தநாள திசுவை பயன்படுத்துகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலத்திலிருந்து வைரஸ்-அல்லாத விதைகள் மற்றும் நாற்றுக்களைப் பயன்படுத்தவும்.
  • நோய் தடுப்பு அல்லது சகிப்புத்தன்மை கொண்ட தாவர வகைகளை (கீரை மற்றும் சுரைக்காய் வகைகள் பல கிடைக்கின்றன) நடவு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறதா என வயல்களை கண்காணித்து, பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றவும்.
  • தேமல் தோற்றம் கொண்டிருக்கும் களைகளை அகற்றவும்.
  • உங்கள் பயிர்களுக்கு அருகே வளரும் களைகள் மற்றும் மாற்று புரவலன்களை அகற்றவும்.
  • தாவர பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் கருவிகள் அல்லது உபகரணங்களில் தொற்று நீக்குவதை உறுதி செய்துகொள்ளவும்.
  • பயிர் வளர்ச்சியின் முந்திய வாரங்களில் குடியேறும் அசுவினிகளை நீக்க ஒரு மிதக்கும் உறையை இணைக்கவும்.
  • மகரந்த சேர்க்கையை உறுதி செய்துகொள்ள மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் இந்த காலப்பகுதிக்குப் பின்னர் உறையை அகற்றவும்.
  • அசுவினிகளை ஈர்க்கும் தடுப்பு பயிர்களை நடவு செய்யவும்.
  • அசுவினிகளை கூட்டமாக பிடிக்க ஒட்டும் பொறிகளை பயன்படுத்தவும்.
  • அலுமினிய படலம் போன்ற அசுவினியை தடுக்கும் பொருட்கள் கொண்டு தரையை மூடி வைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க