சோயாமொச்சை

செம்புள்ளி நோய்

Septoria glycines

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • சிவப்பு-பழுப்பு ஒழுங்கற்ற புள்ளிகள் மஞ்சள் நிற ஓரங்களுடன் முதிர்ந்த இலைகளில் காணப்படும்.
  • இந்தச் சிதைவுகள் ஒன்றுசேர்ந்து மற்றும் பெரிய அளவிலான மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் கூடிய பழுப்புப் பகுதிகளை உருவாக்கும்.
  • முழு இலையும் துருப்பிடித்ததுபோல் பழுப்பு நிறமாகும் மற்றும் மஞ்சள் நிறமாக மாறும், மற்றும் முதிரும் முன்பே உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

முதன்மை அறிகுறிகள் பொதுவாக அடிப்புற விதானத்தில் அமைந்த முதிர்ந்த இலைகளில் காணப்படும். பயிரின் வளர்ச்சி காலத்தில், சூடான மற்றும் மழை வானிலைகள் தாவரத்தில் நோய் பரவுதலுக்கு ஏதுவாக அமையும். சிறிய ஒழுங்கற்ற அடர் பழுப்பு புள்ளிகள் இலைகளின் இருபுறங்களின் மேற்பரப்பிலும் காணப்படும், பெரும்பாலும் ஏதாவது ஒருபுறத்தில் காணப்படும். நோய் வளரும்போது, இந்த சிதைவுகள் பெரிதாகி மற்றும் ஒன்று சேர்ந்து பெரிய அளவிலான மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் அல்லது மஞ்சள் நிற வட்டங்கள் இல்லாமல் கூடிய பழுப்புப் பகுதிகளை உருவாக்கும், பெரும்பாலும் இது இலையின் ஓரங்கள் அல்லது நரம்புகள் பாதை நெடுகிலும் உருவாகும். பின்னர், முழு இலையும் துருப்பிடித்ததுபோல் பழுப்பு நிறமாகும் மற்றும் மஞ்சள் நிறமாக மாறும், அத்துடன் முதிரும் முன்பே உதிர்ந்துவிடும். இருப்பினும், சேதமானது விரிவானது பரந்தளவில் ஏற்படுவது இல்லை, மற்றும் அரிதாகவே இழப்புகளை ஏற்படுத்துகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நீண்ட காலமாக மழை வானிலையாக இருக்கும்பட்சத்தில், பாசில்லஸ் சப்டிலிஸ் அடங்கிய பொருட்களை, நோய் பாதிப்பு ஆரம்பிக்கும் காலத்தில் செயல்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்குச் சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் ஒருங்கிணைத்துக் கையாளவும். செம்புள்ளி நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவானவை. எனவே, பூஞ்சைக்கொல்லிகள் மூலம் சிகிச்சையளிப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. விதை சிகிச்சை செய்வதை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளலாம். மழைக்காலங்களில், அஸாக்ஸிஸ்ட்ரோபின், குளோரோதலோனில், மான்கோசெப் மற்றும் பைராக்லோஸ்ட்ரோபின் போன்றவற்றின் குழு அடங்கிய பூஞ்சைக் கொல்லிகளை நிலத்திற்கு மேலுள்ள பயிர் பாகங்களில் (பொதுவாக ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2-2.5 கிராம்) செயல்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

செம்புள்ளி நோய் செப்டோரியா க்லைசின்ஸ் எனும் பூஞ்சைகளால் ஏற்படக் கூடிய ஒரு இலை நோயாகும், பாதிக்கப்பட்ட பயிர்களின் எஞ்சிய பாகங்கள் இருக்கும் மண்ணில் இவை உயிர்வாழ்கின்றன.  இது விதைவழியே பரவும் நோய் இல்லை என்பதால் பருவ காலத்தின் மத்தியில் அல்லது பருவ காலத்திற்குப் பின்னர் பொதுவாக தாக்கக்கூடிய நோயாகும். தொடர்ச்சியான இலை ஈரப்பதத்திற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலையானது நோய் வளர்ச்சிக்குச் சாதகமானதாக உள்ளது. நீண்டகாலமாக அமையும் சூடான, ஈரமான மற்றும் மழைக்கால வானிலைகள், மற்றும் 25 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலை போன்றவை நோய் வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைகள் ஆகும். முதன் முதலில், காற்று மற்றும் மழைத் தூறல் மூலம் நோய் பாதிப்பிற்கான வித்துக்கள் அடிப்புற இலைகளுக்குப் பரவுகின்றன. இதே சூழ்நிலையில், இரண்டாம் நிலையாக தாவரங்களுக்கு இடையே நோய் பரவுகிறது. இருப்பினும், இந்த நோயானது முதன்மையாக அடிப்புற இலைகளில் தாக்குகின்றன, வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலைகள் இருந்தால் இந்தப் பூஞ்சைகள் மேல் கவிகைக்குள் அரிதாக நகர்கிறது. சாதாரணமாக, இவை பயிர்ப் பயனாக்கத்தில் குறைந்தளவு தாக்கத்தினையே ஏற்படுத்துகின்றன.


தடுப்பு முறைகள்

  • கிடைக்கப்பெற்றால் சகிப்புத் தன்மை கொண்ட பயிர்வகைகளைப் பயிரிடவும்.
  • அறுவடைக்குப் பின்னர் பயிரின் எஞ்சிய பாகங்களை ஆழமாக உழுதல் செய்யவும்.
  • நோய் பாதிப்பு ஏற்படாத வகையில் உழவு செய்யவும்.
  • மக்காச்சோளம், கோதுமை, பிற தானியங்கள் மற்றும் அல்ஃபுல்ஃபாவுக்கு போன்ற பயிர்களுடன் பயிர் சுழற்சியைத் திட்டமிடுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க