சோயாமொச்சை

சோயா விதைப்புள்ளி நோய்

Colletotrichum truncatum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • காய்கள் மற்றும் தண்டுகளில் பழுப்பு நிற ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும்.
  • நரம்புகள் பழுப்பு நிறமாக மாறும் மற்றும் இலைகள் சுருண்டுகொள்ளும்.
  • காய்கள் மந்தமான மலட்டு விதைகளைக் கொண்டிருக்கும்.
  • பாதிக்கப்பட்ட நாற்றுகள் பூஞ்சைகளின் தாக்குதலால் அழுகிப்போகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

சோயா விதைப்புள்ளி நோய் பயிர்களை, பெரும்பாலும் அறிகுறியை ஏற்படுத்தாமல், தண்டுகள், காய்கள் மற்றும் இலைகளை பாதிக்கக்கூடும். இனப்பெருக்க வளர்ச்சி நிலைகளில் மட்டுமே அறிகுறிகள் தெரியக்கூடும். காலநிலை சூடாக மற்றும் ஈரப்பதமாக இருக்கும் போது, சிறிய இருண்ட ஒழுங்கற்ற புள்ளிகள் தண்டு மற்றும் காய்களில் தோன்றும். இந்தப் பகுதிகள் சிறிய கருப்பு புள்ளிகளால் மூடப்பட்டிருக்கும். இலைகள் சுருண்டுகொள்ளும் மற்றும் நரம்புகள் பழுப்பு நிறமாக மாறும். கடுமையாக பாதிக்கப்பட்ட காய்களில் சிறிய, மந்தமான மலட்டு விதைகள் முளைக்கும். நாற்றுகளின் ஆரம்ப நோய்தாக்கமானது, பூசணத் தாக்கத்தால் அழுகல் நோய் ஏற்பட வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைப்புள்ளி நோய்க்கு எதிரான எந்தவொரு உயிரியல் சிகிச்சையும் இதுவரை இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருதில் கொள்ளுங்கள். 5% க்கும் அதிகமான விதைகள் பாதிக்கப்பட்டால், பூஞ்சைக் கொல்லிகளுடனான சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. குளோரோதலோனில், மான்கோசெப், செப்பு தெளிப்பான்கள் அல்லது பிராப்பி கொனாஜோல் அல்லது முறைசார் பூஞ்சைக்கொல்லி தியோபநெட்-மெத்தில் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

நோய்க்கிருமி ஒரு வருடத்திற்கு மேலாக தாவரப் பொருட்களில் உயிர் வாழக்கூடும். பாதிக்கப்பட்ட கழிவுகளில் உற்பத்தி செய்யப்படும் வித்துக்களானது காற்று மற்றும் மழை மூலம் மேல்புற இலைகளுக்கு பரவும். இலைகளின் ஈரப்பதம், மழை அல்லது பனி காலங்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், நோய்த்தொற்று பொதுவாக ஏற்படுகிறது. மொத்தத்தில், இந்த நோய் விளைச்சலில் குறைந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் அவற்றின் நிலை மற்றும் விதையின் தரம் குறைந்துவிடுகிறது. சாதகமான சூழல் உள்ள (ஈரமான மண், சூடான மற்றும் ஈரப்பதமான வானிலை) பகுதிகளில், விளைச்சல் இழப்புக்கள் அதிகமாக இருக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • உயர்தரச் சான்றுள்ள விதைகளை நடவு செய்ய வேண்டும்.
  • நோய் சகிப்புத் தன்மை கொண்ட தாவர வகைகள் உள்ளதா என விற்பனையாளர்களுடன் ஆலோசிக்கவும்.
  • வரிசைகளுக்கு இடையேயான இடைவெளி 50 செமீக்கும் குறைவாக இல்லாதவாறு பயன்படுத்தவும்.
  • தாவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் கருவிகள் மற்றும் உபகரணங்களைச் சுத்தம் செய்யவும்.
  • சுற்றுச்சூழல் வெப்பநிலையில் விதைகளைச் சேமித்து வைக்கவும்.
  • தாவரக் கழிவுகளை உழுது புதைத்துவிடவும் அல்லது வெறுமனே எரித்துவிடவும்.
  • நோய்கிருமியின் உருவாக்கத்தைத் தவிர்க்கப் புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க