கோதுமை

ஃபுஷேரியம் கதிர் கருகல் நோய்

Fusarium graminearum

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இந்த நோய் இரண்டு வகை அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது: நாற்றங்கால் கருகல் நோய் மற்றும் கதிர்கள் கருகல் நோய்.
  • தண்டுகளின் அடிப்பகுதியில் லேசான பழுப்பு நிற, நீர் தோய்ந்த சிதைவுகள் மற்றும் சிறுதாவரங்கள் அழுகி, கருகுதல் ஆகியன நாற்றங்கால் கருகல் நோயின் அறிகுறிகள் ஆகும்.
  • நீர் தோய்த்த கதிர்கிளைகள் மற்றும் வெளிறிய வைக்கோல் நிறம் ஆகியவை கதிர் கருகல் நோயின் இரு வேறுபட்ட அறிகுறிகளாகும்.
  • சூடான, ஈரப்பதமான காலநிலைகளில், அவை ஏராளமான பூஞ்சை வளர்ச்சியின் காரணமாக இளஞ்சிவப்பு முதல் லேசான-பழுப்பு நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்


கோதுமை

அறிகுறிகள்

அறிகுறிகளின் தீவிரத்தன்மை பயிர் வகை (கோதுமை, புல்லரிசி மற்றும் பார்லி ஆகியன குறிப்பிடத்தக்க புரவலன்கள்) தொற்றுநோய் ஏற்படும் காலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் ஆகியவற்றைச் சார்ந்து இருக்கும். இந்த நோய் இரண்டு வகை அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது: நாற்றங்கால் கருகல் நோய் மற்றும் கதிர்கள் கருகல் நோய். நாற்றங்கால் கருகல் நோயின் அறிகுறிகளாவது தண்டுகளின் அடிப்பகுதியில் லேசான-பழுப்பு நிற, நீர் தோய்ந்த சிதைவுகள் மற்றும் வளரும் போது நாற்றங்கால் சிதைந்து போகுதல் ஆகியனவாகும். பாதிக்கப்பட்ட விதைகளை குளிர்ந்த, ஈரமான மண்ணில் விதைக்கையில் இது குறிப்பாக ஏற்படுகிறது. தாவர வளர்ச்சியின் பிற்பகுதியில், முக்கிய மற்றும் அடித்தள தண்டு அழுகுதல் பொதுவாக காணப்படுகின்றன. நீர் தோய்த்த கதிர்கிளைகள் மற்றும் வெளிறிய வைக்கோல் நிறம் ஆகியவை கதிர் கருகல் நோயின் இரு வேறுபட்ட அறிகுறிகளாகும். . சூடான, ஈரப்பதமான காலநிலைகளில், அவை ஏராளமான பூஞ்சை வளர்ச்சியின் காரணமாக இளஞ்சிவப்பு முதல்-லேசான பழுப்பு நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தானிய உட்கருக்கள் சுருங்கி, முரடான தோற்றத்தோடு காணப்படும். வழக்கமாக, கதிர்க்கிளைகள் முழுவதுமாக பாதிக்கும் வரை, நோய் தொற்று கதிர் கிளைகளுக்கிடையே பரவும். சில பயிர்களில் 70% வரை விளைச்சல் இழப்புகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஃபுஷேரியம் கிராமினைராம் மூலம் ஏற்படும் நோய்தொற்றின் தாக்கத்தைக் குறைக்க பல உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. கோதுமை பொறுத்தவரை, பாக்டீரியா சுடோமொனாஸ், ஃப்ளூரேசென்ஸ், பாசில்லஸ் மெகாத்தீரியம் மற்றும் பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற பல்வேறு தயாரிப்புகளை பூக்கும் நேரத்தில் பயன்படுத்துதல் நோயின் தாக்கம், அவற்றின் தீவிரத்தன்மை மற்றும் விளைச்சலைக் குறைக்கிறது. இதற்கான சோதனைகள் பல கட்டுப்பாடான நிலையில் உள்ள வயல்களில் மேற்கொள்ளப்பட்டன. டிரிகோடெர்மா ஹார்ஜியுனம் மற்றும் குளோன்ஸ்டாச்சிஸ் ரோசியா ஆகிய எதிர் பூஞ்சைகளும் ஓரளவு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. 5 நாட்களுக்கு 70 டிகிரி செல்சியஸ் வெப்ப உலர் சிகிச்சை, கோதுமை மற்றும் பார்லி விதைகளிலிருந்து இந்த பூஞ்சைகள் மற்றும் இது போன்றவற்றை அகற்றுவதற்கான பயனுள்ள முறையாக திகழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஃபுஷேரியம் கதிர் கருகல் நோய் கட்டுப்பாட்டிற்கு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் நேரம் மிகவும் முக்கியமானது. பூக்கும் காலங்களில் டிரையாஜொல் வேதிம குடும்பத்தின் (மெட்கொனாஜொல், டெபுகொனாஜொல், புரோதியோகொனாஜொல் மற்றும் தியாபென்டஜொல்) பூச்சிக்கொல்லி இலைவழி பயன்பாடு நோய் ஏற்படுதல் மற்றும் தானியங்களில் உள்ள மைக்கோடாக்சின் என்பவற்றையும் பெரிதளவில் குறைக்கும். இந்த தயாரிப்புகளில் அறுவடைக்கான கால வரம்புகள் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

தானியங்களின் கதிர் கருகல் நோய்க்கான அறிகுறிகள் ஃபுஷேரியம் கிராமினைராம் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது பருவக்காலங்களுக்கு இடையில் மாற்று புரவலன்களிலும் அல்லது பிந்தைய நிலையில் மண்ணில் உள்ள பயிர் கழிவுகள் மற்றும் கரிமப்பொருட்களில் வாழும். சாதகமான சூழ்நிலையில், இது சிதல்களை உற்பத்தி செய்யத் தொடங்கி, அவை காற்று மூலம் நெடுந்தொலைவிற்கு செல்லும். கொசுவினப் பூச்சிகளின் மூலம் இது பரவுவதாக கருதப்படுகிறது. பூ பூக்கும் காலங்களில் இந்த பூஞ்சையால் தானியங்கள் பாதிக்கப்படுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. ஒரு முறை இது தாவர திசுக்களில் துளிர்த்து விட்டால், இவற்றால் இயற்கையான ஓட்டைகள் மூலம் புறத்தோல்களுக்கு நேரடியாக ஊடுருவ முடியும். வேறாகு திசுக்களில் இவை வளருகையில், இது கதிர்களை செல்லும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தடுக்கிறது. இதன் விளைவாக கதிர்கள் வெளிறிய நிறமாகி, கதிர்களின் உட்கருக்கள் சுருங்குகின்றன. மேலும், உற்பத்தியாகும் நச்சுப்பொருள் தானியத்தின் விற்பனைத் தன்மையை குறைக்கிறது. ஒளியின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம், படிமம் மற்றும் இலை ஈரப்பதம் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகள் அதன் வாழ்க்கைச் சுழற்சியை பாதிக்கலாம். 20-32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் நீண்ட கால இலை ஈரப்பதம் ஆகியவை பூஞ்சை வளர்ச்சிக்கு மிகவும் சாதகமானவை.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால், அவற்றை பயன்படுத்தவும்.
  • நல்ல சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள இடங்களைத் தேர்வு செய்யவும்.
  • பயிர்களுக்கு நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தும் வகையில், நடும்போது பயிர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கவும்.
  • புரவலன் அல்லாத இனங்களைக் கொண்டு பயிர் சுழற்சி முறையை திட்டமிடவும்.
  • நைட்ரஜன் அதிகமாக உள்ள உரங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • நிலத்தை உழுதல், பூஞ்சையின் வாழ்க்கை சுழற்சியை ஆதரிப்பதால், அவற்றின் தேவையை சரிபார்க்கவும்.
  • வயல்களில் மற்றும் அவற்றை சுற்றியுள்ள இடங்களில் உள்ள களைகள் மற்றும் மாற்று புரவலன்களை அப்புறப்படுத்தவும்.
  • அறுவடைக்குப்பின் தாவர கழிவுகளை அகற்றி, அவற்றை புதைத்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க