மக்காச்சோளம்

பொதுப்படையானத் துரு நோய்

Puccinia sorghi

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் காணப்படும் சிறிய புள்ளிகள் மெதுவாக வெளிர், பழுப்பு நிற, உப்பிய புள்ளிகளாக மாறும்.
  • இந்தப் புள்ளிகள் பின்னர் மேல்ப் புற மற்றும் கீழ்ப் புற இலைப் பக்கங்களில் பொன்னிற-பழுப்பு நிறமாக லேசாக சிதறிக் காணப்படும்.
  • பிற தாவரப் பாகங்களில் பொதுவாக அறிகுறிகள் தென்படாது.
  • தண்டுகள் பலவீனமாகவும், மென்மையாகவும் வளரக்கூடும், மேலும் இவை கீழே சாய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இதிலும் கூடக் காணப்படும்


மக்காச்சோளம்

அறிகுறிகள்

இலைகளின் இரு புறங்களிலும் சிறிய புள்ளிகள் தோன்றி, அவை மெதுவாக சிறிய, வெளிர் பழுப்பு நிற, சற்று உப்பிய புள்ளிகளாக வளரும். இந்த நீண்ட புள்ளிகள் பின்னர் மேல் புற மற்றும் கீழ் புற இலை பக்கங்களில் பொன்னிற-பழுப்பு நிறக் கொப்புளங்கள் லேசாக சிதறிக் காணப்படும். தாவரங்கள் முதிர்ச்சியடையும் போது, இந்த நிறம் கருப்பு நிறமாக மாறும். மற்ற துரு நோய்களுக்கு மாறாக, தண்டுகள், இலை உறைகள் அல்லது உமி போன்ற பிற தாவர பாகங்களில் இந்த அறிகுறிகள் தென்படாது. இருப்பினும் தண்டுகள் பலவீனமாகவும் மற்றும் மென்மையாகவும் வளரக்கூடும், மேலும் இவை கீழே சாய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இளம் இலைத் திசுக்கள் முதிர்ந்த இலைகளை விட பூஞ்சைத் தொற்றுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. ஆரம்ப நிலைகளில் பாதிக்கப்படும் தாவரங்களின் இலைகளில் பச்சைய சோகை ஏற்பட்டு அவை இறந்து விடக்கூடும் மற்றும் மேல்புற இலைகள் பாதிக்கப்பட்டால், இவை கடுமையான விளைச்சல் இழப்புக்கு வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

புசினியா சோர்கிக்கு எதிரான மாற்று சிகிச்சைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய் ஏற்புத்திறன் அதிகம் கொண்ட தாவர வகைகளில், பூஞ்சைக் கொல்லிகளின் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கக்கூடும். வானிலை சூழ்நிலைகளின் காரணமாக துரு நோய் விரைவாகப் பரவும் என்றால், பருவ காலத்தின் ஆரம்பத்தில் இலைத்திரள் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தவும். துருநோயைக் கட்டுப்படுத்த எண்ணற்ற பூஞ்சைக் கொல்லிகள் கிடைக்கின்றன. மான்கோஜெப், பைராக்லோஸ்ட்ரோபின், பைராக்லோஸ்ட்ரோபின்+மெடகோனஸோல், பைராக்லோஸ்ட்ரோபின்+ஃப்லுஃக்ஸாபைராஃக்ஸாட், அஸாக்ஸிடிரோபின்+பிராப்பிகோனாஜொல், டிரைஃப்ளோக்ஸிஸ்டிராபின்+ப்ரோதியோகோனஸோல் போன்றவற்றைக் கொண்ட தயாரிப்புகள் நோயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சையின் உதாரணமாக: கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்த உடனே மான்கோசெப்பினை தெளிப்பானாக 2.5 கி/லி அளவில் பூத்தல் வரை 10 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் புசினியா சோர்கி என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சை மாற்றுப் புரவலனில் (ஓக்ஸாலிஸ் வகைப் பயிர்கள்) குளிர்காலத்தைச் செயலற்ற நிலையில் கழித்து, வசந்த காலத்தில் வித்துக்களை உற்பத்தி செய்கிறது. வித்துக்கள் காற்று மற்றும் மழை மூலம் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவை இலைகளை அடைந்தவுடன் நோய்தாக்கத்தின் செயல்முறையை ஆரம்பிக்கிறது. காற்று மற்றும் மழை ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரங்களுக்கு இரண்டாம் நிலை நோய்த் தொற்றாகப் பரவுகிறது. உயர் ஈரப்பதம் (சுமார் 100%), பனி, மழை மற்றும் 15 முதல் 20 டிகிரி செல்சியசிற்கு இடையேயான வெப்பநிலை (இடத்தைப் பொறுத்து மாறுபடும்) இந்த நோயின் வளர்ச்சிக்குச் சாதகமானதாக இருக்கும். வெப்பமான வறண்ட காலநிலை பூஞ்சை வளர்ச்சி மற்றும் நோய்த்தொற்று ஏற்படுவதை மேலும் மெதுவாக்குகிறது அல்லது தடுக்கிறது. விதை உற்பத்தி மற்றும் இனிப்பு சோளம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் தாவரங்களில் இந்த நோய்த்தொற்று மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. கால்நடை உணவுக்காக, தொழிற்துறை உற்பத்திக்காக, அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்காக பயிர்செய்யப்படும் தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கவலை இல்லை. குறைந்த தாவர உற்பத்தி மற்றும் தாவரங்கள் கீழே சாய்தல் காரணமாக மகசூல் குறைகிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் சந்தையில் கிடைக்கப்பெறும் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • நோய்த் தடுப்புக்கான உகந்த நிலைகளைத் தவிர்க்க ஆரம்ப காலங்களில் நடவு செய்ய வேண்டும்.
  • சீக்கிரம் முதிர்ச்சியடையும் குறைந்த பருவ காலத்தைக் கொண்ட பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • சமச்சீரான உரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.
  • புரவலன் அல்லாத பயிர் வகைகளைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க