மாங்கனி

கருகல் நோய்

Peyronellaea glomerata

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • முதிர்ந்த இலைகளின் மீது ஒழுங்கற்ற மஞ்சள் முதல் பழுப்பு நிற சிதைவுகள்.
  • சாம்பல் நிற சிதைந்த மையங்களுடன் சிதைவுகள் பெரிதாகுதல்.
  • இலைகள் வாடி, இறுதியாக உதிர்ந்து விடுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


மாங்கனி

அறிகுறிகள்

கருகல் நோய் தொற்றுகளின் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் மட்டுமே காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகளில் கோணவடிவத்தில், மஞ்சள் முதல் பழுப்பு நிற ஒழுங்கற்ற சிதைவுகள் இலைப்பரப்பு முழுவதும் சிதறிக் காணப்படும். நோய் அதிகரிக்கும் போது, சிதைவுகள் வளர்ந்து பெரிய திட்டுகளாக உருவாகின்றன. பின்னர் அவை சாம்பல் மையங்கள் மற்றும் இருண்ட விளிம்புகளுடன், மந்தமான நரம்பு மண்டலங்களாக மாறுகின்றன. இறுதி கட்டத்தில், இலைகள் வாடி, உதிரத் தொடங்குகின்றன. மாற்று புரவலன் தாவரங்களில் பொதுவான கொடி (விட்டிஸ் வினிஃபெரா) மற்றும் கென்டகி புல் (போ ப்ராடென்சிஸ்) முதலியவையும் அடங்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

முதல் அறிகுறிகள் கண்டறிந்த பிறகு, தாமிரம் ஆக்ஸிகுளோரைடு (0.3%) தெளித்து மற்றும் 20 நாட்கள் இடைவெளியில் மென்மேலும் தெளிப்பதன் மூலம் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். பழங்களை வேப்ப இலைச்சாறு மூலம் சிகிச்சை அளித்து, குளிர்ந்த இடத்தில் சேமிப்பதன் மூலம் பழங்கள் மீதான பல்வேறு நோய்கிருமியின் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கிறது

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். ஆரம்ப கண்டுபிடிப்பிற்கு பிறகு பெனாமில் (0.2%) கொண்டிருக்கும் பூஞ்சை கொல்லியை தொடர்ந்து, 0.3% மில்டோக்ஸ் 20 நாட்களுக்குள் ஒருமுறை தெளித்தல் பூஞ்சைகளை கட்டுப்படுத்த நன்றாக வேலை செய்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

கருகல் நோய் ஒரு புது வகையான நோய், ஆனால் தற்போது மாங்காய் உற்பத்தி பகுதிகளில் பொருளாதார முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதன் அறிகுறிகள், முன்னர் ஃபோமா குளோமெராடா என அழைக்கப்பட்ட பேரோநெல்லா குளோமெராடா என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இதன்மூலம் நோய்க்கான பொதுவான பெயரை பெற்றுள்ளது. இது மண் மற்றும் பல்வேறு இறந்த அல்லது வாழும் தாவர பொருள்களில் (விதைகள், பழங்கள், காய்கறிகள்),பொதுவாக எந்த அறிகுறியும் இல்லாமல், எல்லா இடங்களிலும் உயிர் வாழும் பரவலான பூஞ்சை ஆகும். இது மரம், சிமெண்ட், எண்ணெய் வர்ணம் பூசப்பட்ட பரப்புகள் மற்றும் காகிதம் போன்ற வீட்டு பொருள்களிலும் காணலாம். பொதுவாக இந்த பூஞ்சை நோயுற்ற திசுக்களின் இரண்டாம் படையெடுப்பாக கருதப்படுகிறது. இருப்பினும், சில புரவலன்கள் மற்றும் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் (ஈரமான வானிலை மற்றும் உயர்ந்த வெப்பநிலை), நோயைத் தூண்டுகிறது. 26° செல்சியஸ் முதல் 37° செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலைகளில் உகந்த வளர்ச்சி பெறுகிறது.


தடுப்பு முறைகள்

  • சேமித்து வைக்கும்போது பூஞ்சை வளர்ச்சியை தவிர்க்க முற்றிலும் சுத்தமான சேமிப்பு வசதிகளை பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க