உருளைக் கிழங்கு

வெள்ளிச் சுண்டு நோய்

Helminthosporium solani

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பழுப்பு நிற ஓரங்கள் ஓரங்களுடன் வெள்ளி போன்ற சிதைவுகள் கிழங்குகளில் காணப்படும்.
  • கழுவாத கிழங்குகளில் இதுபோன்ற அறிகுறிகளைக் காண்பது கடினம்.
  • பல்வேறு தோல் வகையினால் உருளைக்கிழங்கின் வகையை பொறுத்து சிதைவுகள் பெரிதும் மாறுபடும்.
  • பிற நோய்க்காரணிகளால் இரண்டாம் நிலை நோய் தொற்றுக்களும் ஏற்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

சாதாரணமாக அறுவடையின்போது அறிகுறிகள் இருக்கும், ஆனால் கிழங்குகள் சேமிக்கப்பட்டிருக்கும்போது தான் நோய் வளர்ச்சியுறும். சேமிப்பில் இருக்கும்போது, பழுப்பு நிற ஓரங்கள் கொண்ட வெள்ளி போன்ற பெரிய சிதைவுகள் கிழங்குகளில் காணப்படும். இந்தச் சிதைவுகள் பின்னர் ஒன்று சேர்ந்து பழுப்பு நிறமாகலாம், இதனால் கழுவாத கிழங்குகளில் இதுபோன்ற அறிகுறிகளைக் காண்பது கடினம். கிழங்குகளின் தோல் வகைகளைப் பொறுத்து சிதைவுகளின் தோற்றமும் வேறுபடும். பாதிக்கப்பட்ட கிழங்குகளின் வெளிப்புற தோல் அடுக்கு மிருதுவாகவும், சுருக்கங்கள் கொண்டதாகவும் இருக்கும். இறுதியில் அவற்றினை எளிதில் உரித்தெடுக்கும் வகையில் மாறிவிடும். பிற நோய்க்காரணிகளால் இரண்டாம் நிலை நோய் தொற்றுகளும் ஏற்படலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கையான உயிர்க்கொல்லி (ஹைட்ரஜன் பெராக்ஸைடு) அல்லது உயிரியியல் பொருட்கள் (பாசில்லஸ் சப்டில்லிஸ், கிராம்பு எண்ணெய்) போன்றவை வரையறுக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக அல்லது போதுமான அளவிற்கு இந்நோய் பாதிப்புகளை குறைப்பதில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக் கொல்லிகளை, பயிரிடுதலுக்கு முன்பு விதைக் கிழங்குகளில் பயன்படுத்துதல் அல்லது அறுவடைக்குப் பின்னர் கிழங்குகளில் பயன்படுத்துதல் மூலம் நோய் தொற்றினைத் தவிர்க்கலாம். தியோபென்டாஸோல் போன்றவற்றை தூளாக கிழங்குகளில் பயன்படுத்துவதன் மூலம் அடுத்த பருவகாலத்தில் அல்லது சேமிப்பு காலங்களில் இந்நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

வெள்ளிச் சுண்டு நோயானது விதை வழியே பரவும் ஹெல்மிந்தோஸ்போரியம் சோலனி எனும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கிழங்குகளின் தோல் மற்றும் கிழங்குகளில் இவை வெகுகாலம் உயிர்வாழக் கூடியவை. மண், பாதிக்கப்பட்ட விதைக் கிழங்குகளை பயன்படுத்துதல் அல்லது சேமிப்புக்கிடங்குகளில் உள்ள எஞ்சிய வித்துக்கள் போன்றவற்றின் மூலம் நோய் தொற்றுக்கள் ஏற்படலாம். 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் ஒப்பு ஈரப்பதம் 90 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும் சேமிப்பு கிடங்குகளில் நோய் தொற்றின் வளர்ச்சி தடுக்கப்படும். கிழங்குகளில் உறைவு ஏற்படுதல் (சூடான காற்று குளிர்ந்த கிழங்குகள் மீது படுதல்) பிரச்சினைகளை மேலும் அதிகமாக்கும். இந்த உருளைக் கிழங்குகள் உண்ணத்தக்கவைதான் என்றாலும் சந்தைகளில் இவற்றின் மதிப்பு மிகவும் குறைவாகிவிடும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான தாவரங்கள் அல்லது சான்றிதழ் அளிக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சகிப்புத்தன்மை கொண்ட கிழங்கு வகைகளைப் பயிரிடவும்.
  • அதிகப்படியான அளவில் பயிர் சுழற்சியினை மேற்கொள்ளவும்.
  • குறித்த காலத்திற்கு முன்னரே கிழங்குகளை வெளியே எடுப்பது நோய்த்தொற்று ஏற்படுவதை குறைக்கும்.
  • அறுவடைக்குப் பின்னர் தானாக வளரும் தாவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • களத்தில் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் இயந்திரங்களை சுத்தமாகவும், நோய் தொற்று இல்லாதவகையிலும் பயன்படுத்தவும்.
  • நன்கு காற்றோட்டம் உள்ள, தொடர்ச்சியாக குளிர்ந்த மற்றும் உலர் சூழல்களில் உருளைக் கிழங்குகளை சேமித்து வைக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் நல்ல சுகாதாரம் மற்றும் கழிவுகளை அகற்றும் நடைமுறைகளை பேணுதல் அவசியம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க