விதையவரை

அவரை துரு நோய்

Uromyces appendiculatus

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • முதிர்ந்த இலைகளின் அடிப்பகுதியில் சிறிய பழுப்பு முதல் மஞ்சள் கொப்புளங்கள்.
  • அது மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும்.
  • இலைக்காம்புகள், தண்டுகள் மற்றும் காய்களிலும் அறிகுறிகள் தோன்றும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் வாடிப்போகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

விதையவரை

அறிகுறிகள்

முதல் அறிகுறிகள் சிறிய பழுப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் நிற கொப்புளங்களாக உருவாகின்றன, இவை முதிர்ந்த இலைகளின் மேல்தோலை முக்கியமாக, அடிப்பகுதியில் உள்ள மேல்தோலை சிதைக்கின்றன. காலப்போக்கில், இவை மஞ்சள் நிற வெளிறிய திசுக்களின் ஒளிவட்டத்தால் சூழப்பட்டு இருண்டதாக மாறக்கூடும். ஒரே மாதிரியான நீளமான கொப்புளங்கள் இலைக்காம்புகள், தண்டுகள் மற்றும் காய்களில் தோன்றக்கூடும். இலைகள் வெளிறிய நிறமாகி, உலர்ந்து, முன்கூட்டியே உதிர்ந்து விடக்கூடும். விளைச்சலில் ஏற்படும் விளைவுகளுடன் இலை உதிர்வு ஏற்படலாம். அவரை துரு நோய் இளம் தாவரங்களை கொல்லக்கூடும். முதிர்ந்த தாவரங்களில் பூஞ்சையானது விளைச்சலில் பெரிதும் புறக்கணிக்கக்கூடிய விளைவைக் கொண்டுள்ளது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பேசிலஸ் சப்டிலிஸ், ஆர்த்ரோபாக்டர் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசஸ் இனங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரி பூச்சிக்கொல்லிகள் நோயின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டுள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ட்ரையஸோல் மற்றும் ஸ்ட்ரோபிலூரின் பூசண கொல்லிகள் அவரை துரு நோயை கட்டுப்படுத்துவதில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

மண்ணில் உள்ள தாவர எச்சங்களில் யூரோமைசஸ் அபெண்டிகுலேட்டஸ் என்னும் பூஞ்சை குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கிறது. இது ஒரு பிணைப்பான ஒட்டுண்ணி, அதாவது இது உயிர் வாழ தாவர திசுக்கள் தேவை. வித்துகள் காற்று, நீர் மற்றும் பூச்சிகள் வழியாக தாவரங்களில் சிதறும்போது ஆரம்ப தொற்று ஏற்படுகிறது. பூஞ்சையானது அதிக ஈரப்பதம் மற்றும் உயர்ந்த வெப்பநிலையில் வளர்கிறது. இந்த நிலைமைகளில் வித்துக்கள் மிக வேகமாக பரவக்கூடும். நீண்ட காலமாக சூடான, ஈரமான வானிலை நிலவினால் இந்த நோய் மிகவும் கடுமையாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் அல்லது சகிப்புத்தன்மை கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட இடங்களில் அவரைகளை நடவு செய்ய வேண்டாம்.
  • மக்காச்சோளம் போன்ற புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு ஊடுபயிர் செய்யவும்.
  • வயலிலிருந்து களைகளையும் தானே வளரும் தாவரங்களையும் அகற்றவும்.
  • அதிகப்படியான நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும், மேல்நிலை தெளிப்பான்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  • பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் துண்டித்து அகற்றவும்.
  • பயிர் செய்த பிறகு, அனைத்து தாவர குப்பைகளையும் அகற்றி அப்புறப்படுத்தவும்.
  • வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது நீண்ட கால இலை ஈரப்பதத்தைத் தவிர்க்க நடவு தேதிகள் மற்றும் நீர்ப்பாசனங்களை கவனமாக தேர்வு செய்து திட்டமிடவும்.
  • அதிகப்படியான தழைச்சத்து பயன்பாட்டைத் தவிர்த்து, போதுமான அளவு பொட்டாசியம் உரமிடுவதை உறுதி செய்யுங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க